பக்கம் எண் :

162பாரதம்கன்ன பருவம்

வல் சிலை கோலி - வலிய வில்லை வளைத்து, வெம் பொறி விடு - வெவ்விய
பொறிகளைச் சிந்துகிற, புரி தழல் - விரும்பிய அக்கினி, ஒள் கிரி பல -
ஒளியையுடைய பல மலைகள், மிடை - நெருங்கப்பெற்ற, வனம் - காண்டவவனம்,
வெந்திட - எரிந்துபோம்படி, அந்தர மிசை - ஆகாயத்தில், ஓடி - விரைந்து
சென்று,புகை கதுவும்படி - புகை நெங்கும் படி, சீறி - கோபித்து, மண்டிய
நாளில் - பற்றியகாலத்தில், அம்பு என வரும் - (அருச்சுனனைக்
கொல்லும்பொருட்டு) அஸ்திரமாகவந்த, இகல் உடை - வலிமையையுடைய, வெம்
பகு வாய்கள்- கொடிய திறந்தவாய்கள், ஐந்து உடையது - ஐந்தையுடையதாகிய,
ஓர் - ஒரு, எழில் கொள் -அழகைக்கொண்ட, புயங்கனை - நாகாஸ்திரத்தை, ஏவ
என்று -விடவேண்டுமென்று, உசவி சொல்லி,- (எ-று.)-"பரிவுடனருளி
வணங்கியெடாவிடும்பொழுதினில் என மேற்கவியிற் றொடரும்.

     இதுமுதல் ஏழுகவிகள் - பெரும்பாலும் ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகியஎண்சீராசிரியச்சந்த
விருத்தங்கள். 'தன தன தந்தன தானன தனதன தனதன தந்தன
தானன தனதன' என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பு.                  (312)

222.பரிமளசந்தனதீபமுங்கமழ்புகை பனிமலருங்கொடுபூசை
                                 யும்பரிவுட,
னருளிவணங்கியெடாவிடும்பொழுதினி லடல்வலவன்சில
                           கூறினன்பரிவொடு,
விரிதுளபம்புனைமாயன்வஞ்சனையுளன் விசய
                     னகன்றடமார்பகம்புதைதர,
வுரகநெடுங்கணையேவுகென்றிடவவானுறுதி
                    நினைந்திலனாதபன்குமரனே.

     (இ -ள்.) பரிமள சந்தனம் தீபம்உம் - வாசனையையுடைய சந்தனத்தையும்
விளக்கையும், கமழ் புகை - வாசனைவீசுகிற தூபத்தையும், பனி மலர்உம் -
குளிர்ச்சியையுடைய  பூக்களையும் கொடு - கொண்டு, பூசைஉம் - பூஜையையும்,
பரிவுடன் அன்போடு, அருளி - செய்து, வணங்கி - நமஸ்கரித்து, எடா - எடுத்து
விடும் பொழுதினில் - விடுகிற சமயத்தில்,- அடல் வலவன் வலிமையையுடைய
பாகனான சல்லியன், பரிவொடு - அன்போடு சில கூறினான் - சில
வார்த்தைகளைச்சொல்பவனாகி, 'விரி துன்பம் புனை - மலர்ந்த திருத்துழாயை
யணிந்த, மாயன் -கண்ணன், விசயன் - அருச்சுனனது, அகல் தட மார்பு அகம் -
விசாலமான பெரியமார்பினிடத்தில், புதைதர - அழுந்தும்படி [மார்பை
இலக்காகக்கொண்டு], உரகம்நெடு கணை - பெரிய நாகாஸ்திரத்தை, ஏவுக -
பிரயோகிப்பாயாக,' என்றிட -என்றுசொல்ல, ஆதபன் குமரன் - சூரிய குமாரனான
கர்ணன், அவன் உறுதிஅச்சல்லியன் சொன்ன நன்மையை, நினைந்திலன் -
எண்ணியனில்லை; (எ-று.)                                          (313)

223.மழுவுறுசெங்கையிராமனென்பவனருள் வரிசிலைகொள்
                     டணிநாணிதன்செவியோடு,
தழுவுறமண்டலமாய்வளைந்திடமுதுறணெடுஞ்சினமூளும்
                            வெங்கணையினை,
யெழிலிமதங்கயவாகனன்றயனதெழில்பெறுகந்தர