பக்கம் எண் :

164பாரதம்கன்ன பருவம்

மாகத் தொடுத்த அரவு - நாகம், தனஞ்சயன் - அருச்சுனனது மார்பையும்-,
களைஉம் - கழுத்தையும், விலகி - நீங்கி, அவன் தன் தாதை - அவனது
தந்தையான இந்திரன், அன்று - அந்நாளில் உதவிய - கொடுத்த, வெயில் மகுடம்
தனை - சூரியனொளிபோன்ற ஒளியையுடைய கிரீடத்தை, மோதி வந்து இடற -
வந்து தாக்கித் தள்ள,- (எ-று.)- "உதையினன்" என மேலைக்கவியில் முடியும்.
அங்குலி - விரற்கிடை. தன, அ - ஆறனுருபு.                     (315)

225.- பின்பு கணையானநாகத்தை அருச்சுனன்
இரண்டுதுண்டாக்கிவிடுதல
்.

இடறியதிண்பணிவாளிபின்பறிதலுமெதிர்பொரவெஞ்சிலை
                              கோலிநின்றவனணி,
பிடரினுமுண்டுகொல்பார்வையென்றிடவலி பெறநிலை
                       நின்றிருதோள்களும்பரிவுற,
வடவியின்வெந்துதன்வால்குறைந்திடவிடுமயின்முக
                  வெங்கணையாலதன்பெருமைகொ,
ளுடலமிரண்டுடலாய்விழுந்தலமரவுதையினனும்பர்
                            பிரானருள்குரிசிலே.

     (இ -ள்.)உம்பர்பிரான் - தேவராஜனான இந்திரன், அருள் - பெற்ற,
குரிசில் -பெருமையிற்சிறந்த அருச்சுனன், எதிர் பொர - எதிரே போர்செய்தற்கு,
வெம் சிலை- கொடிய வில்லை, கோலி நின்றவன் - வளைத்துநின்றவன், திண் -
வலிய, இடறிய- (தன் கிரீடத்தைத்) தள்ளின, பணி வாளி - நாகாஸ்திரம், பின்
பறிதலும் - பின்னால்நீங்கினவளவில், அணி பிடரின்உம் - அழகியபின்புறத்தும்
'பார்வை உண்டு கொல்கண் உளதோ? 'என்றிட - என்னும்படி வலி பெற -
வலிமை பொருந்த, நிலைநின்று - நிலையிலே நின்று, இரு தோள்கள்உம் பரிவு
உற - இரண்டு தோள்களும்மகிழ்ச்சியாற் பூரிக்க, அடவியின் - காண்டவவனத்தில்,
வெந்து - எரிந்து, தன் வால்குறைந்திட - அதன் வால் அறுபடும்படி, விடும் -
விட்ட, அயில் வெம் முகம்கணையால் - கூர்மையையுடைய நுனியையுடைய
கொடிய அம்பினால், அதன் -அந்நாகத்தின், பருமை கொள் - பருத்தலைக்
கொண்ட, உடலம் - உடம்பு, இரண்டுஉடல் ஆய் - இரண்டு துண்டாகி,
விழுந்து - கீழ்விழுந்து, அலமர - வருந்தும்படி,உதையினன் - எய்தான்; (எ -று.)

     பறிதல் - கடந்து ஓடுதல், பெயர்ந்து வழுவுதல், பின்பு அறிதலும் என்றும்
பிரித்து உரைக்கலாம்.                                          (316)

226.-அழிகிறநாகம் மீண்டும் அருச்சுனன்மீதுவிடுமாறு
வேண்ட, கர்ணன் மறுத்திடல்.

பிறகுபுரிந்தெழில்கூர்தனஞ்சயன்விடு பிறைமுகவெங்கணையா
                                   லழிந்திடுபணி,
திறலுடன்முன்றுணிசேருமைந்தலையொடு திரியவும்
                        வந்தெனையேவுகென்றலறவு,
முறவொடுகுந்திவழாவரம்பெறுதலினுரைவழுவும்பெரிதாகுலம்
                                        புரியினு,
மறுகணையொன்றுதொடேன்முனந்தினியெனவலிகழலங்கர்
                               குலாதிபன்புகலவே.