பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்167

உளம் நொந்து நொந்து - மனம் மிகவருந்தி, நான் ஒத்த போர் மீளியை -
அருச்சுனனைப்போன்ற போரில்வல்ல வீரனான கர்ணனை நோக்கி, சில கூறுவான்
-சிலவார்த்தை சொல்லுவானானானன்; (எ-று.)- அதுமேற்கவியிற் கூறுகிறார், (320)

230.- இரண்டுகவிகள்-'இனிச் சாரத்தியஞ் செய்யேன்;
உன்னால் வெல்லலும் ஆகாது' என்று அத்தேரைவிட்டுச்
சல்லியன்தன்தேரி லேறிக்கொள்ளுதலைக் கூறும்.

என்னாலுமரிதித்தடந்தேர்விரைந்தூர்தலினியென்றுமற்
றுன்னலுமரிதந்தவிசயன்றனுயிர்கொள்ளலுன்னித்தபோர்
பன்னாகதுவசற்குமரிதாலுனைக்கொண்டுபாராளுமா
றென்னாவிழிந்தானவன்றேரின்மிசைநின்றுமிசைநின்றுளான்.

     (இ -ள்.) இசை நின்றுளான் - கீர்த்தி நிலைபெற்றுள்ளவனாகிய சல்லியன்,-
'இதட தேர் - இந்தப் பெரிய தேரை, விரைந்து ஊர்தல் - வேகமாகச் செலுத்துதல்,
என்னாலும்-, அரிது - (செய்தற்கு) அருமையானது; மற்று - மேலும், இனி என்றுஉம்
- இனிமேல் எப்பொழுதும், உன்னித்த போர் - முயன்றுசெய்கிற போரில், அந்த
விசயன்தன் உயிர் கொள்ளல் - அந்த அருச்சுனனைக் கொல்லுதல், உன்னாலும்-,
அரிது - அருமையானது; பன்னாக துவசற்குஉம் - பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கும், உனைகொண்டு - உன்னை (த் துணையாகவைத்து)க் கொண்டு,
பார் ஆளும் ஆறு - பூமியை அரசாளும்விதம், அரிது - அருமையானது,' என்னா
- என்று சொல்லி, அவன் தேரின் மிசை நின்றும் - அந்தக் கர்ணனது தேரின்
மேனின்று, இழிந்தான் - இறங்கினான்; (எ-று.)-பன்னாகம் - பந்நகம் என்பதன்
விகாரம்.                                                      (321)

231.என்றேயெழிற்குந்திவயினல்குதனியாளியிகலேறனான்
வன்றேர்செலுத்திப்பெரும்போர்முடிப்பிக்கவருசல்லியன்
றென்றேரிசைச்செவ்விநறைநாறுமலர்விட்டசிறைவண்டெனத்
தன்றேருமேல்கொண்டுதனிவில்லுமீளத்தரித்தானரோ.

     (இ -ள்.) எழில் - அழகையுடைய குந்தி வயின் - குந்திதேவியினிடத்தில்,
நல்கு - பிறந்த, தனி - ஒப்பில்லாத, இகல் - வலிமையையுடைய, யாளி ஏறு -
ஆண்சிங்கத்தை, அனான் - ஒத்தவனாகிய கர்ணனுக்கு, வன் தேர் செலுத்தி -
வலியதேரை ஓட்டி, பெரு போர் முடிப்பிக்க வரு - பெரிய யுத்தத்தை முடியச்
செய்யவந்த, சல்லியன்-,- என்று - என்று சொல்லி, செவ்வி - அழகையுடைய, நறை
நாறும்- வாசனை வீசுகிற, மலர் - பூவை, விட்ட -விட்டு (அப்பாற்) சென்ற, தென்
தேர் -தேனை ஆராய்ந்து உண்கிற, இசை - இசைப்பாட்டையுடைய, சிறை வண்டு
என -சிறகுகளையுடைய வண்டு போல, தன் தேரு மேல்கொண்டு -
(கர்ணன்தேரைவிட்டுத்) தனது தேரின்மேல் ஏறிக்கொண்டு, தனி வில்உம் -
ஒப்பற்றதனது வில்லையும், மீள - திரும்புவும், தரித்தான் - (கையிற்) பிடித்தான்;
(எ -று.)

     தென் - தேன் என்பதன் விகாரம், முன்னே தருமன்வேண்டிக் கொண்டபடி
சல்லியன் அடிக்கடி இகழ்ந்துபேசிக் கர்ணனது