பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்171

பும் கைத்தலம் - (அவனது) கையினிடங்கள்,  வில் குனிப்புஉம்- வில்லை
வளைத்தலையும், கடு கணை தொடுத்திடும் கணக்குஉம் - கொடிய அம்புகள்
எய்யுந்தன்மையையும், மறந்தது இல்லை-, ( எ- று.)-பி-ம்: போல்விரிய.

     இரத்தத்திற்குச் சூரியகிரணம். செம்மை நிறத்தால் உவமை. மகுடம்
உருக்குலைந்தது. இப்பொழுது; கவசகுண்டலங்கள் உருக்குலைந்தது, முன்னே
இந்திரனுக்குக் கொடுத்தபொழுது, அதனையும் இங்கே எடுத்துக்கூறியது, அது
இவன்வலி குறைவதற்கு முக்கிய காரணமாதலின்.

     இதுமுதற் பத்துக்கவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
எழுச்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                        (327)

237.-சூரியாஸ்தமனமாவதற்கு இரண்டுவிற்கிடையிருக்கப்
போரைநிறுத்றுவித்துஸ்ரீக்ருஷ்ணன் வேதியனாய்க்
கர்ணனிடஞ்செல்லல்.

அத்தவெற்பிரண்டுவிற்கிடையெனப்போயாதபன்சாய்தல்கண்டருளி
முத்தருக்கெல்லாமூலமாய்வேதமுதற்கொழுந்தாகியமுதல்வன்
சித்திரச்சிலைக்கைவிசயனைச்செருநீயொழிகெனத்தேர்மிசைநிறுத்தி
மெய்த்தவப்படிவவேதியனாகிவெயிலவன்புதல்வனையடைந்தான்.

     (இ-ள்.) அத்த வெற்பு - அஸ்தகிரி, இரண்டு விற்கிடை என-இரண்டு
விற்கிடைத்தூரத்தி லுள்ளதென்னுமிடத்தில், ஆதபன்-சூரியன், போய் - சென்று,
சாய்தல்-விழுதலை, முத்தருக்கு எல்லாம் - முத்தியுலகத்தையடைந்தவர் யாவர்க்கும்,
மூலம் ஆய் - முதற்கடவுளாகி, வேதம் முதல் கொழுந்து ஆகிய  - வேதங்களின்
சிறந்த கொழுந்தாகிய, முதல்வன் - தலைவனாகிய கண்ணன், கண்டருளி -
பார்த்தருளி,- சித்திரம் சிலை கை - அழகிய வில்லேந்திய கையையுடைய,
விசயனை- அருச்சுனனை (நோக்கி), நீ செரு ஒழிக என - நீ (சற்றே) போரை
நிறுத்துவாயாகவென்று சொல்லி, தேர் மிசை நிறுத்தி - தேரின்மேல் (அவனை)
நிற்கச் செய்துவிட்டு,மெய் தவம்படிவம் - உண்மையாகிய தவவேஷத்தையுடைய,
வேதியன் ஆகி -பிராமண வடிவமாய், வெயிலவன் புதல்வனை - கர்ணனை,
அடைந்தான்; (எ- று.)

    அத்தம் =அஸ்தம், வடசொற்றிரிபு. விற்கிடை - வில் கிடக்கு மவ்வளவு தூரம்.
'வேதமுதற்கொழுந்தாகிய' என்றது - வேதாந்தங்களிற் சிறப்பாக எடுத்துப்
பிரதிபாதிக்கப்படுகிற என்றபடி.                                   (328)

238,-'உனக்குஇயைந்ததை எனக்குத்தருக' என்று
வேஷதாரியான கிருஷ்ணன் கேட்டல்.

தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு,
வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன்,
ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத்
                                        தளிப்பாய்,
தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால்,

இரண்டுகவிகள் - ஒருதொடர்.