(இ-ள்.) தூண்டிய - (அருணனாற் செலுத்தப்படுகிற, கவனம் துரகதம் - கதிகளையுடைய குதிரையைப் பூட்டிய, தட தேர் - பெரிய தேரையுடைய, சுடர் - முச்சுடர்களுட், சிறந்த சூரியன், தர - பெற, தோன்றிய - பிறந்த, தோன்றால்- வீரனே!மேருவினிடை-மகாமேருகிரியினிடத்தில், தவம் பூண்டேன் - தவத்தைச் செய்துகொண்டிருந்தவனும், ஈண்டிய - மிகுந்த, வறுமை - தரித்திரத்தால், பெருதுயர் உழந்தேன் - பெரிய துன்பத்தை அனுபவித்தவனுமாகிய யான், தாண்டிய - மோதுகிற, தரங்கம் - அலைகளையுடைய, கருகடல்-கரியகடலினால், உடுத்த - சூழப்பட்ட, தரணியில் - பூமியில், தளர்ந்தவர் தமக்கு - (வறுமையால்) தளர்ச்சியை யடைந்தவர்களுக்கு, நீ-, வேண்டிய - (அவர்கள்) வேண்டின பொருள்களை தருதி- கொடுக்கிறாய், என - என்று, கேட்டேன்-கேள்விப்பட்டு வந்தேன்; (எனக்கு), இயைந்தது ஒன்று-கொடுக்கக்கூடியதொரு பொருளை, இ கணத்து இப்பொழுதே, அளிப்பாய் - கொடுப்பாயாக; (எ-று.)-தோன்றால் தோன்றல் என்பதன் விளி. (329) 239.-வேஷதாரி கர்ணனைப் புண்ணியமெல்லாம் தரக்கேட்டல். என்றுகொண்டந்தவந்தணனுரைப்ப விருசெவிக்கமுதெனக் கேட்டு, வென்றிகொள்விசயன்விசயவெங்கணையான்மெய்தளர்ந்திரத மேல்விழுவோன், நன்றெனநகைத்துத்தரத்தகுபொருணீநவில்கெனநான்மறையவனு, மொன்றியபடிநின்புண்ணியமனைத்துமுதவுகென்றலுமுள மகிழ்ந்தான். |
(இ-ள்.) அந்த அந்தணன் - அந்தப் பிராமணன், என்று கொண்டு உரைப்ப- என்றுசொல்ல, (அவ்வார்த்தையை), வென்றிகொள் - வெற்றியைக்கொண்ட, விசயன்- அருச்சுனனது, விசயம் - விசேஷஜயத்தைத் தருகிற, வெம்கணையால் - கொடிய பாணங்கனினால், மெய் தளர்ந்து - உடம்பு தளரப்பெற்று, இரதம்மேல் விழுவோன்- தேரின்மேல் விழும் நிலைமையிலுள்ளவனாகி கர்ணன், இரு செவிக்கு அமுது என -இரண்டு காதுகளுக்கும் அமிருத மென்னும்படி (மிகஇனிப்பாக), கேட்டு - செவியுற்று, நன்று என - நல்லதென்று சொல்லி, நகைத்து - சிரித்து, தர தகு பொருள்-(உனக்குக்) கொடுக்கத்தக்க பொருளை, நீ நவில்க என - நீ சொல்லுவாயாகஎன்று சொல்ல,-நால் மறையவன்உம் - நான்குவேதங்களையும் அறிந்தஅப்பிராமணனும், 'நின் புண்ணியம் அனைத்துஉம் - நீ செய்துள்ள நல்வினைமுழுவதையும், ஒன்றியபடி, - உள்ளபடியே, உதவுக - கொடுப்பாயாக,' என்றலும் -என்று சொன்னவளவில், உளம் மகிழ்ந்தான்-(கர்ணன்) மனங்களித்தான்; (எ - று) நன்று என்றது - நீ சொன்னபடியே தருவேனென்று தனது உடன்பாட்டைத் தெரிவித்தபடி. (330) 240.-இரண்டுகவிகள்-ஒருதொடர்; கர்ணன் மனவுவப்போடு தன்புண்ணிய மனைத்தையுந் தாரைவார்த்துக்கொடுக்க அவ்வேதியன் பெற்றமை கூறும். ஆவியோநிலையிற்கலங்கியதியாக்கையகத்ததோபுறத்துதோ வறியேன், பாவியேன்வேண்டும்பொருளெலாயக்கும்பக்குவந்தன்னில்வந் |
|