பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்173

                                    திலையால்.
ஓவிலாதியான்செய்புண்ணியமனைத்துமுதவினேன்கொள்க
                                    நீயுனக்குப்.
பூவில்வாழயனுநிகரலனென்றாற்புண்ணியமிதனினும்
                                     பெரிதோ.

     (இ-ள்.)  ஆவிஓ - உயிரோவென்றால். நிலையின் கலக்கியது- தான்
நிற்குமிடத்தில் நின்றும் எழுந்தது, (அவ்வுயிர்), யாக்கை அகத்ததுஓ - (இப்பொழுது)
உடம்பினுள்ளே உள்ளதோ? புறத்ததுஓ - (அன்றிஉடம்புக்கு) வெளியேசென்றதோ?
அறியேன் - அறிகிறேனில்லை. பாவியேன் தீவினையையுடைய யான், வேண்டும்
பொருள் எலாம் - (வேண்டுவார்) வேண்டும் பொருள்களையெல்லாம், நயக்கும் -
விரும்பிக்கொடுக்கின்ற, பக்குவந்தன்னில் - சமயத்தில்,  வந்திலை -  (நீ)
வந்தாயில்லை, யான் செய் புண்ணியம் அனைத்துஉம் - யான் செய்துள்ள
நல்வினையையெல்லாம். ஓவுஇலாது - (ஒன்றும்) ஒழிதல் இல்லையாம்படி,
உதவினேன் - கொடுத்தேன்; நீ கொள்க - நீ பெற்றுக்கொள்வாயாக, உனக்கு-,
பூவில் வாழ் அயன்உம் - (திருமாலின் திருவுந்தித்) தாமரைமலரில் வாழ்கிற
பிரமனும், நிகர் அலன் என்றால்-ஒப்பாகான் என்று சொன்னால். புண்ணியம்-
(என்)நல்வினை, இதனின்உம் பெரிதுஓ-(உனக்குதானஞ்செய்யும்) இத்தொழிலினுஞ்
சிறந்ததோ? (எ - று.)-அன்றென்றபடி.

     முதலடியில் முன் ஓகாரம் - உயர்வுசிறப்பு; பின் ஓகாரம் இரண்டும்-ஐயம்.
இன்னுங் கேட்ட கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் ஆற்றல் இப்பொழுது
இல்லையாதலால், "பாவியேன்" என்று தன்னைத்தானே வெறுத்துக்கொண்டான்.
                                                            (331)

241.என்னமுன்மொழிந்துகரங்குவித்திறைஞ்சவிறைஞ்சலர்க்
                         கெழலியேறனையான்,
கன்னனையுவகைக்கருத்தினானோக்கிக்கைப்புன
                            லுடன்றருகென்ன,
வன்னவனிதயத்தம்பின்வாயம்பாலளித்தலுமங்கை
                               யாலேற்றான்,
முனமோரவுணன்செங்கைநீரேற்றுமூவுலகமுமுடன்
                               கவர்ந்தோன்.

     (இ-ள்.) (கர்ணன்), என்ன-என்று முன் - முன்னே, மொழிந்து - சொல்லி,
கரம்குவித்து - கைகளைக்கூப்பி, இறைஞ்ச-வணங்க,-இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு
அனையான் - (தன்னை) வணங்காத பகைவர்களுக்கு மேகத்தில் தோன்றுகிற
பேரிடியை யொப்பவனாகியகண்ணன், கன்னனை-, உவகை கருத்தினால் -
மகிழ்ச்சியோடு  கூடியஎண்ணத்தோடு, நோக்கி - பார்த்து, கை புனலுடன் தருக
என்ன - கையினால் தாரைவார்க்கப்படுகிறநீரோடு தானஞ்செய்வா யென்று சொல்ல,
அன்னவன் - அக்கர்ணன் இதயத்து அம்பின் வாய் அம்பால் - (தன்) நெஞ்சில்
தைத்த அம்பின் வழியேவெளிவருகிற செந்நீரால், அளித்தலும் -தாரைவார்த்துக்
கொடுத்தவளவில்,-முன்னம் - முன்னே (வாமனாவதாரத்தில்), ஓர் அவுணன் - ஒரு
அசுரனது (ஓப்பற்ற மகாபலி சக்கரவர்த்தியின்), செம் கை - சிவந்த கையினால்
தத்தஞ்செய்யப்பட்ட, நீர் - தான ஜலத்தை, ஏற்று - (கையில்) பெற்று, மூ
உலகம்உம் - மூன்று லோகங்களையும், உடன் - ஒருசேர, கவர்ந்தோன் -
(அவனிடத்தினின்றும்) பறித்துத் தன்வசப்படுத்திக் கொண்டவனாகிய கண்ணன்,
ஆங்கையால் - தன் அகங்கையினால், ஏற்றான் - (அந்நீரை) ஏற்றுக் கொண்டான்,
(எ- று.)                                                      (332)