பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்179

யாகப் பெருகியதாதலால் 'வான்பெற்ற நதிகமழ்தாள்' என்றும், திருமாலின்
திருவுள்ளத்தினின்றுஞ்சந்திரன் தோன்றினானென்று வேதத்திற் கூறப்படுதலால்
'மதிபெற்ற திருவுளம்' என்றுங்கூறினான்.                            (340)

250.- இதுவும் மேலைக்கவியும் - கவசகுண்டலம் வாங்கச்செய்தமை
முதலியன என்செயலே என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணன் தன்
பாகுதொழிலுக்குச் செல்லுதலைத் தெரிவிக்கும்.

என்றுமகிழ்வுறவணங்குமெல்லிமைந்த னின்புறவண்புறவினிலா
                              னிரையின்பின்போய்,
கன்றுகொடுவிளவெறித்தகண்ணன்றானுங்கன்னனுக்குக்
                           கட்டுரைப்பான்கடவுணாத,
னன்றுனதுகவசமுங்குண்டலமும்வாங்கவழைத்தேனுங்
                         குந்தியைக்கொண்டரவவாளி,
யொன்றொழியத்தொடாதவரங்கொள்வித்தேனுமுற்பவத்
                     தினுண்மையுனக்குணர்வித்தேனும்.

     (இ-ள்.) என்று - என்றுசொல்லிப்புகழ்ந்து, மகிழ்வு உற - களிப்பு மிக,
வணங்கும் - நமஸ்கரிக்கிற, எல்லி மைந்தன் - சூரியகுமாரனான கர்ணன், இன்பு
உற- இன்பமடைய, வண் புறவினில்-வளப்பத்தையுடைய முல்லை நிலத்திலே,
ஆன்நிரையின் பின் போய் - பசுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டு அதன்பின்னே
சென்று,கன்று கொடு விள எறிந்த - கன்றினால் விளாமரத்தை  வீசியடித்த,
கண்ணன்தான்உம் - கிருஷ்ணனும், கன்னனுக்கு-, கட்டுரைப்பான் -
உறுதியாகச்சொல்பவனாய்,- கடவுள் நாதன் -  தேவேந்திரன், அன்று - அந்நாளில்,
உனது-, கவசம்உம் - கவசத்தையும், குண்டலம்உம் - குண்டலங்களையும், வாங்க -
தானமாகப் பெறும்படி, அழைத்தேன்உம் - (அவனை) வரவழைத்தவனும்,-அரவம்
வாளி - நாகாஸ்திரத்தை, ஒன்று ஒழிய - ஒருதரமேதவிர (மறுபடியும்), தொடாத -
(அருச்சுனன்மேற்) பிரயோகிக்க வொட்டாத, வரம் - வரதத்தை, குந்தியைக்
கொண்டு-,கொள்வித்தேன்உம் - பெறச்செய்தவனும், உற்பவத்தின் உண்மை -
(உன்) பிறப்பின்நிச்சயத்தை, உனக்கு-, உணர்வித்தேன்உம் - அறிவித்தவனும்,-
(எ-று.)

     எல்லி - ஒளியையுடையவன், எல் - ஒளி, கண்ணன் பாண்டவதூதனாய்
அத்தினபுரிக்குச் சென்றபொழுது கர்ணனுக்குத்  தானே நேராகவுங் குந்தியைக்
கொண்டும் பிறப்பை உணர்த்தினான்.                             (341)

251.தக்ககன்றன்மகவானவுரகவாளி தனஞ்சயனைச்சதியாமற்
                               சாய்வித்தேனு,
மெய்க்கருணைநின்பொருட்டால்யானேயென்று மீண்
              டும்போய்த்தேர்வலவன்விசயற்கானா,
னெக்கடலுமெக்கிரியுமெல்லாமண்ணுமிமையோருமானுடரு
                                மெல்லாமாகி,
மைக்கணிளங்கோவியர்நுண்டுகிலுநாணும்வரிவளையுமட
                          நெஞ்சும்வாங்குமாலே.

     (இ-ள்.) தக்கன் தன் - தக்ஷகனது, மகவு ஆன - பிள்ளையாகிய, உரகம்
வாளி- நாகாஸ்திரம், தனஞ்சயனை - அருச்சுனனை, சதியாமல் - அழிக்காதபடி,
சாய்வித்தேன்உம் - (அவன்தேரைநிலத்தில்) அழுந்தச்செய்தவனும், நின் பொருட்டு
உனக்காக,