பக்கம் எண் :

182பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) 'முந்தி - முன்னேநின்று, எதிர் பொரும் - எதிர்த்துப் போர்செய்கிற,
விசயன் - அருச்சுனன், தொடுத்த - எய்த கோலால்,- அம்பினால், ஐவருக்குஉம்
முன்னோன் - பஞ்சபாண்டவர்க்குந் தமையனான கர்ணன், இன்று - இன்றைக்கு,
முடிசாய்ந்து - தலைசாய்ந்து, வீழ்ந்தான்-; 'அந்திபடுவதன் முன்னே -
மாலைப்பொழுது கழிவதற்கு முன்பே, ஆவி போம் - உயிர் நீங்கும்,' என்று-,
அசரீரி - உடம்பில்லாத (தெய்வத்தன்மையையுடைய) ஆகாசவாணி, எடுத்து
உரைப்ப - உரத்துச்சொல்ல,-அன்னை ஆன - அவன் தாயாகிய, குந்தி-,  தனது
உளம் உருக - தன்மனங் கரையவும், கண் நீர் சோர - கண்களினின்று நீர்
பெருகவும், குழல் சரிய - கூந்தல் அவிழவும், கோ கோ என்று - கோகோவென்று
அரற்றிக்கொண்டு, போர்க்களத்து - யுத்தகளத்தில், வந்து-, இரு கை தலை
புடைத்து- இரண்டுகைகளாலுந்தலையிலே அடித்துக்கொண்டு, தலை நாள் ஈன்ற 
மகவின்மேல் - முன்னாளில் (கன்னிகையாயிருக்கும்பொழுது) பெற்ற பிள்ளையாகிய
கர்ணன்மேல், வீழ்ந்து அழுதாள்-; (எ- று.)-கோ கோ வெனல் - சோகக் குறிப்பு.
மன்னோமன்னோ ஈற்றசை: இதுவும் சோகக்குறிப் பென்னலாம்.           (348)

255.-இதுவும் மேலைக்கவியும் - குந்திவார்த்தை.

என்றேயென்றாதையுழைக்கன்னிமாடத் தெழிலிரவிதிருவருளா
                                    லீன்றேனீன்ற,
வன்றேபொற்பெட்டகத்திற்கங்கையாற்றி லாமுறை
                     யாலுனைவிடுத்தேனருளிலாதேன்,
வென்றேமணகவர்தருமன்மதலைக்காவிமித்திரனானது
                              கேட்டுன்வீரங்கேட்டு,
நன்றேயென்றவப்பயனென்றுன்னிவாழ்ந்தேனாகமுநீயரசாள
                                  நடக்கின்றாயோ.

மூன்றுகவிகள்  - ஒருதொடர்.

     (இ-ள்.) என்றே - எப்பொழுதே, என் தாதை உழை - எனது தந்தையின்
மனையில், கன்னிமாடத்து - கன்னிகாமடத்தில், எழில் இரவி திரு அருளால்-
அழகையுடைய சூரியனது மேலான கருணையினால், ஈன்றேன் - (உன்னைப்)
பெற்றேனோ, ஈன்ற அன்றே-பெற்ற அப்பொழுதே, உனை - உன்னை, அருள்
இலாதேன் - தயையில்லாதயான், பொன் பெட்டகத்தில் - அழகினையுடைய
பெட்டியில் (வைத்து), கங்கை ஆற்றில் - கங்காநதியில். ஆம்முறையால் -
செல்லும்படி, விடுத்தேன் - விட்டுவிட்டேன்; (பின்பு) வென்று ஏ -
(பாண்டவரைச்சூதினாற்) சயித்தே, மண் கவர் தரு - அவர்களிராச்சியத்தைப்
பறித்துக்கொண்ட, மன் மதலைக்கு - இராசபுத்திரனான துரியோதனனுக்கு, ஆவி
மித்திரன் ஆனது - (நீ) பிராணசிநேகிதனானதை, கேட்டு - கேள்விப்பட்டும் உன்
வீரம் - உனது வீரத்தனத்தை, கேட்டு - கேள்விப்பட்டும், என் தவம் பயன் -
எனது(முற்பிறப்பிற்செய்த) தவத்தின்பலன்,  நன்றே என்று நல்லதே யென்று,
உன்னி-எண்ணி, வாழ்ந்தேன் - மகிழ்ச்சியோடிருந்தேன், நீ-,(இப்பொழுது),
நாகம்உம்அரசாள - (இவ்வுலகத்தில் அரசாண்டதேயன்றிச்) சுவர்க்கலோகத்திலும்
அரசர்களும்பொருட்டு, நடக்கின்றாய்ஓ-செல்லுகிறாயோ- (எ - று.)