பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்185

தாதை தன்னை மருவுற தழுவி - தந்தையாகிய சூரியனைச் சேருமாறு பொருந்தி,
தானம் உற மேலுலகத்து உயர்ந்தபதவிலேயே சேர, கிளர்ந்தது - எழுந்துவிளங்கிற்று; (எ - று.)

     இடையிலே சூரியமண்டலத்தைப் பேதித்துக்கொண்டு அதன் வழியே சென்று
சுவர்க்கஞ்சேர வேண்டுதலால், 'ஆவி தாதை தன்னை மருவுறத்தழுவித் தானமுறக்
கிளர்ந்தது' என்றார். தச்சன்-தக்ஷன் என்னும் வடமொழித்திரிபு, பின் இரண்டடி -
தற்குறிப்பேற்றவணி.

     இதுமுதற் பன்னிரண்டுகவிகள் - கடையிருசீரும் மாச்சீரும், மற்றை நான்குங்
காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.                           (349)

259.- துரியோதனன்சேனை வற்றியதைப் பற்றிய கவிக்கூற்று.

மருத்துதவவருசண்டமருத்தாலுமருத்துவான்வழங்குஞ்சோதி
யுருத்திகழுங்கரியசுடருருத்தெழுவெங்கனலாலுமுகாந்தந்தன்னி
னிருத்தமிடும்பெரும்பவ்வநெடுநீத்தம்வறப்பதுபோனிருபன்சேனைப்
பெருத்தகடல்சுவறியவப்பெருமைதனையெப்படிநாம்பேசுமாறே.

     (இ-ள்.) மருத்து - வாயுபகவான், உதவ - அருள்செய்ததனால், வரு - பிறந்த,
சண்ட மருத்தால்உம் - கடுங்காற்றுப்போன்ற வீமனாலும், மருத்துவான் வழங்கும் -
இந்திரன்பெற்றருளின, சோதி உருதிகழும் - ஒளியோடு கூடிய வடிவம்
விளங்கப்பெற்ற, கரிய சுடர்- கருத்த நிறத்தையுடைய, உருத்து எழு - பற்றியெரிகிற,
வெம்-கொடிய கனலால்உம் - நெருப்புப்போன்ற அருச்சுனனாலும், உகாந்தந்
தன்னில் - யுகமுடிவு காலத்தில், நிருத்தம் இடும் - (பொங்கியெழுதலால்)
கூத்தாடுகிற,பெரு பவ்வம் - பெரியகடலின், நெடுநீத்தம் - மிகுந்த நீர்வெள்ளம்,
வறப்பதுபோல் -வறந்து போவதுபோல், நிருபன் சேனை பெருத்த கடல் -
துரியோதனனதுசேனையாகிய பெரிய கடல் சுவறிய - வறந்துபோன, அ
பெருமைதனை -அந்தப்பெருங்காரியத்தை, நாம்-, பேசும் ஆறு-சொல்லும்
விதம், எப்படி -எவ்வாறோ? (பேசுதற்கு அரிதென்றபடி); (எ- று.)

     யுகாந்தகாலத்திற் காற்றும்நெருப்புஞ் சேர்ந்து கடலை வறளச் செய்வதுபோல
இப்பொழுது வீம அருச்சுனர்கள் சேர்ந்து துரியோதனன் சேனையாகிய கடலை
வறளச்செய்தனரென்பது, கருத்து, மருத்துவான் - தேவர்களையுடையவன், மருத் -
தேவர், அருச்சுனனது நிறங் கருமையாதலால், 'கரிய சுட ருருத்தெழுவெங்கனல்
என்றார்.                                                       (350)

260.-இதுவும்  மேற்கவியும்-துரியோதனன் புலம்பலைத்
தெரிவிக்கும்.

அணையார்தம்படைக்கடலினருநிலைக்குக்கரையேறலானகோலப்,
புணையாயெத்திறங்களினும்பகிராமலுற்றதெலாம்புகலத்தக்க,துணையா
யென்னுயிர்க்குயிராந்தோழனுமாகியவுன்னைத்தோற்றேனாகில்,
இணையாருமிலாவரசேயாரைக்கொண்டரசாளவிருக்கின்றேனே.