தடவிப் பணிசெய்யாநிற்க , புவி ஆள - பூமியையாளும்படி, விதி - ஊழ்வினையை, இலாதாய் - இல்லாதவனே! (எ - று.)- இது, வீமன்புலம்பல். பாண்டவர் ஐவரினும் மூத்தவ னாதலால் இந்தக்கர்ணனே ஐவரும் பணிசெய்யத் தான் அரசனாகி ஆளவேண்டும் முறையிருந்தும் அங்ஙனமின்றி இறந்து கிடந்தது பற்றி 'ஆளவிதியிலாதாய்' என்றது. 266. | ஊன்றொடுத்தயவாளியெத்தனையாயிரந்தொடுத்தேனுர கத்தானீ, தான்றொடுத்தகடுங்கணைக்குத்தப்பினேனெனமகிழ்ந்தேன் சஞ்சரீகத், தேன்றொடுத்தமலரலங்கற்றினநாதன்சேயேநின்றிருமார் பத்தில், யான்றொடுத்தநெடும்பகழியெனைக்கெடுப்பதறிந்திலே னென்செய்தேனே. |
(இ-ள்.) சஞ்சரீகம் தேன் தொடுத்த - வன்டுகளாற் சேர்க்கப்படும் தேன்நிரம்பிய, மலர் - மலர்கொண்டுதொடுக்கப்பெற்ற, அலங்கல் - வெற்றிமாலையணிதற்குரிய, தினநாதன் சேயே - சூரியபுத்திரனான கர்ணணே! ஊன்தொடுத்த வய வாளி - (பகைவரின்) மாமிசம்பொருந்திய வெற்றியுள்ள அம்புகளை, (உன்மீது), எத்தனை ஆயிரம் தொடுத்தேன்-? (அன்றியும்), நீதான்உரகத்தால்தொடுத்த கடுங்கணைக்கு தப்பினேன் எனமகிழ்ந்தேன் - நீ நாகாஸ்திரத்தைவைத்து விட்ட கொடிய அம்புக்குத் தப்பினேனென்று அகமகிழ்ந்தேன் நின் திரு மார்பத்தில் - உன்னுடைய அழகிய மார்பிலே, யான் தொடுத்த நெடும்பகழி - யான் (இலக்காகக் குறித்து) விடுத்த கொடிய அம்புகள், எனை கெடுப்பது அறிந்திலேன் - எனக்கே தீமைசெய்வதாவதனை (அப்போது) அறியாமற்போய்விட்டேன்! என்செய்தேன் ஏ - (நான்) என்னகாரியஞ் செய்திட்டேன்!!! (எ - று.)-தன்பாணம் தன் அண்ணனையே கொன்றதனால், 'எனைக்கெடுப்பதறிந்திலேன்' என்றான். இது, அருச்சுனன் புலம்பல். (357) 267. | யாயுரைத்தல்லாதுவேறுரைத்தசரீரியென்னுந்தேவின், வாயுரைத்ததின்றளவுங்கேட்டிலேங்கேட்டனமேல்வாட்டமுண்டோ, பேயுரைத்துத்தாலாட்டமுலைப்பாலோடுயிருண்டபித்தாவீண்டை. நீயுரைத்தபிறகறிந்தோமெம்முனையின்றெமைக்கொண்டேநேர் செய்தாயே. |
(இ-ள்.) பேய் உரைத்து - பேய்ச்சி (தாயென்று தன்னைச்) சொல்லிக்கொண்டு, தாலாட்ட-, முலைப்பாலோடு முலைப்பாலுடனே, உயிர் உண்ட -(அவளது) உயிரையுறிஞ்சியுண்டிட்ட, பித்தா - பித்தன்போன்றிருந்தவனே! யாய்உரைத்தது அல்லாது - (இப்போது எமது தாய், சொன்னதல்லாமல், வேறு உரைத்தது- வேறொருத்தர் சொன்னதையாவது, அசரீரிஎன்னும் தேவின்வாய் உரைத்தது -அசரீரியாகியதெய்வத்தின் வாயினாற்சொல்லியதையாவது, இன்று அளவுஉம் -இன்றைவரையிலும், கேட்டிலேம் - (கர்ணன் குந்திக்கு மூத்தபுதல்வனென்பதுகுறித்துக்) கேட்டோ |