பக்கம் எண் :

190பாரதம்கன்ன பருவம்

மில்லை கேட்டனம் ஏல் - (முன்னமே இதனைக்) கேட்டு அறிந்தோமேயானால்,
(அதற்குஏற்ப நடந்திருப்போம்: ஆகையால்அப்போது), வாட்டம் உண்டுஓ -
(எங்களுக்குத் துயரத்தினால் இப்போது உண்டாகுந்) தளர்ச்சி நேர்ந்திருக்குமோ?
ஈண்டை - இப்போது, நீ உரைத்தபிறகு - நீ சொன்னபிறகே. அறிந்தோம் -
(கர்ணன்எங்கட்கு அண்ணன்: குந்திக்குமூத்தபுதல்வன்என்று) அறிந்திட்டோம்;
எம்முனை -எமது அண்ணனான கர்ணனை, எமை கொண்டு ஏ - (அவனது
தம்பிமாரான)எங்களைக்கொண்டே, இன்று-,நேர்செய்தாய் ஏ - உயிரழியச்செய்து
விட்டாயே,(எ- று.)-பித்தன்-செய்யவேண்டுவன தவிரவேண்டுவனதெரியாதவன்:
பேய்ச்சியைத்தாய்போலக்கருதி முலையுண்டதனால் இங்ஙன் கூறியது. இது,
நகுலன்புலம்பல்,    பி - ம்: அல்லாதவெமருரைத்தது.              (358)

268.ஆடகனைப்புதல்வனைக்கொண்டழிப்பித்தாயிலங்கைநகர்க்
கரசையன்று,வீடணனைப்பகையாக்கிக்கிளையுடனேவீழ்
                         வித்தாய்வேலைசூழ்ந்த,
நாடறியப்புகுந்தெமக்குநாயகமாங்கன்னனையுநரன்கையம்பா,
லீடழியப்பொருவித்தாயிமையோர்கள்வல்லவிரகியார்வல்லாரே.

     (இ-ள்.) ஆடகனை - இரணியாசுரனை, புதல்வனை கொண்டு - (அவனது)
புத்திரனான பிரகலாதனைக்கொண்டு, அழிப்பித்தாய்-, இலங்கை நகர்க்கு அரசை -
இலங்காபுரிக்குத்தலைவனான இராவணனை, அன்று - முற்காலத்தில், வீடணனை -
(அவன் தம்பியாகிய) விபீஷ்ணனுக்கு, பகை ஆக்கி - பகைவனாகச் செய்து,
கிளையுடனே, பந்துவர்க்கத்துடனே, வீழ்வித்தாய் - இறந்துவிழச்செய்தாய், வேலை
சூழ்ந்த - கடலாற் சூழப்பட்ட, நாடு - உலகத்திலுள்ளார்,  அறிய-அறியும்படி,
புகுந்து- வந்து, எமக்கு நாயகம் ஆம்-எங்கட்கு எல்லாம் தலைமை  பூணவேண்டிய,
கன்னனைஉம் - கர்ணணையும், நரன்கை அம்பால் - அருச்சுனனது கையம்பினால்,
ஈடு அழிய - வலிமை குன்றியிறக்க, பொருவித்தாய்-போர்செய்யுமாறு புரிந்தாய்;
இமையோர்கள் வல்ல விரகு - தேவர்களின் வல்லமைபெற்ற உபாயத்தை,
வல்லார் -அறியவல்லார், யார்ஏ - யாவர்தாம்' (எ - று.)-இது, சகதேவன்புலம்பல்.

     புதல்வன் தம்பி இவர்களைக்கொண்டே திருமால் தந்தையையும்
அண்ணனையும் கொல்வித்தா னென்கிற சிறப்புப்பொருளை, ' இமை யோர்கள்
வல்லவிரகியார் வல்லாரே' என்ற பொதுப்பொருள் கொண்டு சமர்த்தித்தது -
வேற்றுப்பொருள்வைப்பணி.                                       (359)

269.-கர்ணனைக்குறித்துப் புலம்பியபின் பாண்டவர் பாசறை சேர,
சகுனிமுதலியோர் துரியோதனனைக்கொண்டுபாசறைசேர்தல்.

இவ்வகையேதிருத்தமையனிணையடிக்கீழ்வீழ்ந்தலறியாயுந்தாங்க
ளைவரும்போய்த்தம்பாடிவீடடைந்தாராகுலத்தாலழிந்தநெஞ்சார்
பைவருமாசுணத்துவசப்பார்த்திவனைக்கொண்டேதம்பாடிபுக்கார்
தைவருதிண்சிலைத்தடக்கைச்சகுனிதனைமுதலானதரணிபாலர்.