உரைபெருகா வ(ண்)ணம் - சொல்லினும் பொருள் மிகும்படி என்றவாறு. சாமரம் - சமரமென்னும் மானின் சம்பந்தமானது: வட மொழித்தத்திதாந்த நாமம். சாமரம் - வினைத்தொகை, இரண்டாம் அடிக்கு, அலகைக்குலம் - பேய்க்கூட்டம், உற்று - வந்து, அது கொள்- அவ்வுறுப்பைக் கொள்ளுகிற, வெம் களம் - கொடிய போர்க்களம், (பேரிசைச்சலால்), உரை பெருகு ஆவணம்- ஆரவாரம் மிக்க கடைத்தெருவையே போன்றது என்றும்[ஆபணம் - வடசொல்], நான்காம் அடிக்கு, சாமரம் - போர்க்களத்தில் [ஸமரமென்பதன் விகாரம்], கொற்றம் மிகும் பறைகள் ஓசையழிந்து குலைந்தனவென்றும் உரைக்கலாம். இவ்விரண்டடிகளுள் ஈற்றில் எழுத்துக்கள் தனித்தனி ஒத்துவந்தது - மடக்கு, மேலுஞ் சிலபாடல்களில் இது காண்க. இதுமுதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று கூவிளங்காய்ச்சீரும் மற்றைஐந்தும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (49) 50.- | மின்புயல்வாய்விரிகின்றனவொத்தனவிரிநுதலோடைகளே யென்புறவீறிவிழுங்கடதாரையினேயினவோடைகளே முன்புடைவாலதிசெற்றதுவெம்புகர்முகமுழுகுஞ்சரமே வன்புடைமால்வரைமறிவனபோலமறிந்தனகுஞ்சரமே. |
(இ-ள்.) விரி நுதல் - (யானைகளின்) விசாலமான நெற்றியிலே (கட்டப்பட்டுள்ள), ஓடைகள் - பட்டங்களானவை,- புயல் வாய் விரிகின்றன - மேகம்வாய்திறந்து வெளிவிடுவனவாகிய, மின் - மின்னலை, ஒத்தன - ஒத்துவிளங்கின;என்பு - எலும்பினின்றும், உற வீறி விழும் - மிகவும் அதிகமாய்ப் பெருகுகிற, கடதாரையின் -(யானைகளின்) மதசலப் பெருக்கினால், ஓடைகள் ஏயின - நீரோடைகள்உண்டாயின்; முன் புடை - முன்பக்கத்தில், வெம் புகர் முகம் - வெவ்வியபுள்ளிகளையுடைய (அவ்யானைகளின்) முகத்தில், முழுகும் - தைக்கின்ற, சரம் -அம்பானது, (ஊடுருவிச்சென்று), வாலதி - வாலை, செற்றது - துணித்தது; வன்புஉடை - வலிமையையுடைய, மால் வரை - பெரிய மலைகள், மறிவன போல -விழுந்து கிடப்பவைபோல, குஞ்சரம் - யானைகள், மறிந்தன - இறந்துவீழ்ந்துகிடந்தன; (எ -று.) புயல் - யானைக்கும், மின் - அதன் பட்டத்துக்கும் உவமை. பார்வைக்கு வாயைத் திறந்துவிடுவதுபோலக் காணப்படுதலால், மின் புயல் வாய்விரிகின்றன' என்றார். நாலடியாரிலும் முன்பு உடை வலிமையையுடைய, வாலதியென்றுமாம், பி -ம்: இன்புறவீறி என்புறவூறி. (50) 51. | பட்டமணிந்தநுதற்கிடையேவிழுதும்பிகள்பட்டனவே தொட்டியுடன்பொருசமர்முனைசீரியதும்பிகள்பட்டனவே வெட்டியறன்புதல்வன்றன்வரூதினிவென்றுகளித்தனவே யிட்டகுமண்டையபேய்பிணமிக்கனவென்றுகளித்தனவே. |
|