மான துர்க்கந்தம், வந ஜம்= நீரிற் பிறப்பது; வநம் - நீர். பி-ம்: வாளிகள் சுற்றின. (52) 53. | முழுகியவாளிகள்குழுமியவீரர்முகத்தனவெண்ணிலவே விழிவழிதீயெழமுறுவல்பரப்பவிரித்தனவெண்ணிலவே யுழைமழைவீழ்படையெங்குமுமிழ்ந்தனவெவ்வெயிலே யழிவில்வரூதினிசூழ்வெயிலுக்கெதிராவனவெவ்வெயிலெ. |
(இ-ள்.) குழுமிய - கூட்டமாகத் திரண்டுவந்த, வீரர் - வீரர்களது, முகத்தன -முகத்தற்பொருந்தியவையாகிய, முழுகிய வாளிகள் - தைத்த பாணங்கள், எண் இல- கணக்கில்லாதவையாம்; விழி வழி - (வீரர்களுடைய) கண்களினின்றும், தீ எழ -கோபத்தால் நெருப்புப்பொறி பறக்க, முறுவல் - (அவர்களுடைய) புன்சிரிப்புக்கள்,வெள் நிலவு - வெண்மையான நிலாப்போன்ற ஒளியை, பரப்ப - அதிகமாக,விரித்தன - வெளிவீசின; உழை - பக்கங்களில், மழை - மழைபோல, வீழ்வன-விழுவனவாகிய, பலபடை - அநேக ஆயுதங்கள், எங்கும்உம் - எவ்விடத்தும், வெவ்வெயில் - வெவ்விய வெயில் போலும் ஒளியை, உமிழ்ந்தன- வீசின; அழிவு இல் -அழிதலில்லாத, வரூதினி - சேனையின், சூழ்வு - சூழ்தலாகிய, எயிலுக்கு - மதிலுக்குஎ எயில் - எந்தமதில்கள்தாம், எதிர் ஆவன - ஒப்பாவன? (எ-று.) எறிவன, எய்வன, வெட்டுவன, குத்துவன என்ற எல்லாவற்றையுந் தொகுத்து 'பலபடை' என்றார். மழைவீழ்வன - மழையை யொப்பனவாகிய என்பாருமுளர். நான்காமடிக்கு - சேனைகள் மதிலினும் உறுதியாகச் சிறிதும் இடைவிடாமற் சுற்றிலும்நின்றன வென்று கருத்து. (53) 54. | சரமழைகாவலர்தங்கண்மனோவனசம்புகமேயினவே யிரைகவர்புள்ளினொடுள்ளுறவாவனசம்புகமேயினவே வரைசிறகற்றுவிழுந்தனவென்னமறிந்தனவாரணமே யருகுநடிப்பனவலகைகள்பாடுவயாமளவாரணமே. |
(இ-ள்.) சரம் மழை - பாணவருஷங்கள், காவலர்தங்கள் - அரசர்களது, மனோ வனசம் - இருதய கமலம், புக - ஒடுங்கும்படியாக, மேயின - பொருந்தின; ஏயின- (அங்குப்பிணந்தின்ன) வந்தனவாகிய, சம்புகம் - நரிகள், இரை கவர் புள்ளினொடு - (தசையாகிய) உணவைக் கொள்ளுகிற (கழுகு பருந்து முதலிய) பறவைகளுடன், உள் உறவு ஆவன - மனங்கலந்த சிநேகமாவன; சிறகு அற்று விழுந்தன - (இந்திரனால்) இறகறுக்கப்பட்டு விழுந்தவையாகிய, வரை என்ன - மலைகள்போல, வாரணம் - யானைகள், மறிந்தன - விழுந்து கிடந்தன; அருகு - பக்கங்களில், நடிப்பன - கூத்தாடுபவையாகிய, அலகைகள் - பேய்கள், யாமளம் ஆரணம் - யாமளவேதத்தை, பாடுவ - பாடுவன; (எ - று.) முதலடி - உருவகவணி; வீரரது உள்ளத்தாமரை ஒடுங்கும்படி அம்புமழை மேயின வென்க- சம்புகம் - ஜம்புகம்: வடசொல். (54) |