பக்கம் எண் :

32பாரதம்கன்ன பருவம்

55.செயிருடையாடவர்சோரிபரந்துசிவந்ததுபாரிடமே
வயிறுபெருங்குருதிச்சுனையாகவளர்ந்தனபாரிடமே
மயிலமறைத்தனபாறுபருந்தொடுபலகழுகந்தரமே
யெயிறுடைவாளிதுணிப்பவிழுந்தனவெத்தனைகந்தரமே.

     (இ-ள்.) செயிர் உடை - வலிமையையுடைய, ஆடவர் - வீரர்களது,
சோரி -இரத்தம், பரந்து - பரவியதனால், பார் இடம் - பூமியினிடம்(முழுவதும்),
சிவந்தது -செந்நிறமாயிற்று; பாரிடம் - பூதகணம், வயிறு -(தம்) வயிறுகள், பெருங்
குருதி சுனைஆக - பெரிய இரத்தம் நிரம்பிய சுனையை ஒத்திருக்க[வயிறுநிரம்ப
இரத்தத்தைக்குடித்து], வளர்ந்தன-; பாறு - பாறு என்னும் பறவைகளும்,
பருந்தோடு -பருந்துகளும், பல கழுகு - பலவகைப்பட கழுகுகளும், பயில -(தாம்)
சஞ்சரித்தலால்,அந்தரம் - ஆகாயவெளியை, மறைத்தன;- எயிறு உடை -
பற்களையுடைய, வாளி -அம்புகள், துணிப்ப - துண்டித்தலினால், விழுந்தன -
கீழ்விழுந்தவையாகிய, கந்தரம்- கழுத்துக்கள், எத்தனை - எத்தனையோ? (எ -று.)

     செயிர் உடை ஆடவர்-(பகைவர்களது) வலிமையை உடைக்கிற [அழக்கிற]
வீர ரென்றுமாம்: (பகைவரால்) வலியழிந்த வீரருமாம் பாரிடம்- =பார்ஷதம்:
வளர்ந்ததுஎன்ற பாடத்திற்கு, 'பாரிடம்' சாதியொருமை. பாறு - பருந்தின்சாதிபேதம்.
எயிறு - அம்புமுனை.                                              (55)

56.உம்பலனேகமிளம்பிடியென்னவொடிந்தனகோடுகளே
செம்புனல்யாறிருபக்கமும்வீழ்குறைசெய்தனகோடுகளே
தும்பிகளாலறையுண்டனகொற்றவர்சூழ்மனவம்புயமே
வெம்புகர்வாளிலழிந்தனமால்வரைவிதமனவம்புயமே.

     (இ-ள்,) உம்பல் அனேகம் - பல ஆண்யானைகள், இளம் பிடி என்ன -
இளமையான பெண்யானைகள்போல, கோடுகள் ஒடிந்தன - தந்தங்கள்
ஒடியப்பெற்றன; செம் புனல் யாறு - இரண்டு பக்கங்களிலும், வீழ் குறை -
(துணிபட்டு) விழுந்துகிடக்கின்ற உடற்குறைகள், கோடுகள் செய்தன -
கரைகளமைத்தாற்போலிருந்தன; கொற்றவர் - வெற்றியையுடைய அரசர்களது,
சூழ் -(பல எண்ணங்களை) என்ணுகிற, மனம் அம்புயம் - இருதய கமலங்கள்,
தும்புகளால்- யானைகளால், அறையுண்டன - அழிக்கப்பட்டன; மால் வரை
விதம் அன -பெரிய மலைகளின்வகையை யொத்த, அம் புயம் - அழகிய
தோள்கள், வெம் -கொடிய, புகர் - பளபளப்புள்ள, வாளில் - வாள்களால்,
அழிந்தன-; (எ -று.)

     பெண்யானைகட்குக் பெரும்பாலுந் தந்தங்கள் முளையா வென்க.
தாமரையைக்கலக்குதல் யானையின் இயற்கையாதலால், 'தும்பிகளால்
அறையுண்டன மனவம்புயம்' என்றார்; இதில், வண்டுகளால் தாமரை மொய்க்கப்
பட்டன வென்னும் பொருளுந்தொனிக்கும்.                         (56)

57.தாள்வலியாடவர்சிரமுருளும்படிதைத்தனசாயகமே
யாழ்குருதித்தடமொத்தனவவரவரவ்வுடல்சாயகமே