65.- சத்தியசேனன் கண்ணனுக்கு ஊறுசெய்தல். சட்கோணநெடுந்தேர்மிசைவருசத்தியசேனன் புட்கோவெழுதியசீர்பெறுபொன்னங்கொடிவலவன் றுட்கோடுளமறுகும்படிசுடுதோமரமொன்றான் முட்கோலுடன்வடமுஞ்சிதைவுறமோதினன்முரணால். |
(இ-ள்.) சட் கோணம் - ஆறு மூலைகளையுடைய, நெடுந்தேர் மிசை - பெரியதேரில், வரு - வரூகிற, சத்தியசேனன்-, சுடு தோமரம் ஒன்றார் - (பகைவரை)அழிக்கவல்லதொரு தோமரமென்கிற ஆயுதத்தால்,- புள் கோ - பறவைகட்குஅரசனாகிய கருடனை, எழுதிய-, சீர்பெறு - சிறப்புப்பெற்ற, பொன் அம் கோடி -பொற்கரம்பிட்ட அழகிய துவசத்தையுடைய, வலவன் - (அருச்சுனனது) சாரதியாகியகண்ணன், துட்கோடு - அச்சத்துடனே, உளம் மறுகும்படி - மனங்கலகுமாறும், (அக்கண்ணன் கைகளிற்பிடித்துள்ள), முள் கோலுடன் - (தேர்க்குதிரைகளைக்குத்தியோட்டுகிற) இருப்புமுள்ளை முனையிலுடைய கோலும்,வடம்உம் -( குதிரைகளைவலிய இழுத்தற்கும் தளரவிடுதற்குமுரிய வார்க்) கயிறும்,சிதைவு உற - அழிவையடையும்படியும், முரணால் - வலிமையோடு,மோதினன்-; (எ-று.) - சட் = ஷட் - ஆறு. ஸத்யஸேநன் - உண்மையான சேனையுடையான்;இவனைக்கர்ணன் புத்திரனென்பர் ஒருசாரார். தோ மரம் - தண்டாயுதமென்பர். (65) 66.- கண்ணன் எதிரிகளின்மேல் தேரை விசையாகக் செலுத்துதல். புடையுண்டுளமுருகிப்புயல்போல்வண்ணனகைத்துத் தொமையுண்டமலர்த்தும்பைசுமக்குந்திரடோளா ருடையுண்டதொர்கடலாமெனவோடும்படியவர்மேற் றடையுண்டதடந்தேரினைவிட்டான்முனைதரவே. |
(இ-ள்.) புயல் போல் வண்ணன் - மேகப்போலுந் கருநிறமுடையவனான கண்ணன்,- புடையுண்டு- (அத்தோமரத்தால்) அடிபட்டு, உளம் உருகி - மனம் தளர்ந்து, நகைத்து - (கோபத்தாற்) சிரித்து,- தொடை உண்ட மலர் தும்பை - மாலையாகத் தொடுக்கப்பட்ட தும்பை மலர்களை, சுமக்கும் - தரிக்கின்ற, திரள் தோளார் - திரண்ட தோள்களையுடையவர்களான அவ்வீரரெல்லாம், உடையுண்டதுஓர் கடல் ஆம் என - கரையுடைப்பட்டதொரு கடல் போல, ஓடும்படி-,அவர்மேல்-,தடையுண்ட தட தேரினை- (கீழே சிறிது) தடைப்பட்ட பெரிய (தனது) தேரை,முனைதர - விரைந்து செல்லும்படி, விட்டான்-; (எ -று.) தடை உண்ட - தடையைஇல்லையாக்கின, தேர் என்றுமாம்: (எங்குந்) தடையில்லாத தேரென்க. (66) 67.- அருச்சுனன் சித்திரசேனனையும் மந்திரபாலனையுங் கொல்லல் சென்றாடமர்புரிசேனையிடன்சித்திரசேனன் வன்றான்வலிமிகுமந்திரபாலன்றனைவானோர் |
|