தன்றாதையளிக்கும்பலசரத்தால்விழமோதிக் கொன்றான்மிடல்வழுவாதகுரக்குக்கொடியுடையோன். |
(இ-ள்.) மிடல் வழுவாத - வீரந் தவறாத, குரங்கு கொடிஉடையோன் - அநுமத்துவசத்தையுடையவனான அருச்சுனன்,- சென்று - எதிர்வந்து, ஆடு அமர்புரி - மோதுகிற யுத்தத்தைச் செய்கின்ற, சேனையுடன்-, சித்திரசேனன் - சித்திரசேனனையும், வல் தாள் வலி மிகு மந்திரபாலன் தனை - வலிய முயற்சியும் வலிமையும் மிக்க மந்திர பாலனையும், - வானோர் - தேவர்களுள், தன் தாதை - தனது தந்தையாகிய இந்திரன், அளிக்கும் - கொடுத்தருளிய, பல சரத்தால் - பல அம்புகளினால், விழ மோதி கொன்றான்-; (எ -று.) சித்திரஸேநன் - பலவகைப்பட்ட சேனைகளை யுடையவன். மந்திர பாலன் - ஆலோசனையாற் காப்பவன். சித்திரசேனனாகிய மந்திரபாலனென்று கூறி, இருவருமொருவரேரயென்பாரு முளர். இந்திரன் அளித்த பலசரம் - ஐந்திராஸ்திரம் முதலியன வென்க; பாசுபதம் பெற்றபின்பு அருச்சுனனைத் தேலோகத்துக்கு அழைத்துப் போன பொழுது இந்திரன் அவனுக்குப் பல அஸ்திரசஸ்திரங்களைத் தந்தருளினான். (67) 68.- அருச்சுனன், சஞ்சத்தக நாராயணகோபாலர்களைத் தொலைத்தல் முன்னாண்முதனானாலினுமுனைதோறுமுருக்கித் தன்னாலுயிர்கவராதவர்சஞ்சத்தகர்யாரு நன்னாரணகோபாலருநாகங்குடியேறப் பொன்னான்வரிசிலைகோலினன்மாலோனுயிர்போல்வான் |
(இ-ள்.) மாலோன் உயிர்போல்வான் - கிருஷ்ணபகவானுக்கு உயிர்போல்வனான அருச்சுனன்,- முன் நாள் முதல் - முதல்நாள் முதலாகிய, நால் நாலின்உம் - பதினாறு நாட்களிலும், முனைதோறுஉம் - போர்களிலெல்லாம், முருக்கி- கொன்று, தன்னால் உயிர் கவராதவர் - தன்னால் உயிர்கொள்ளப் படாதவராகிய,சஞ்சத்தகர் யார்உம் - சம்சப்தகர் எல்லாரும், நல் - நல்ல, நாரணகோபாலர்உம் -நாராயண கோபாலர்களும், நாகம் - வீரசுவர்க்கத்தில், குடி ஏற -, பொன் நாண் -அழகியநாணியையுடைய, வரி சிலை - கட்டமைந்தவில்லை, கோலினன் -வளைத்தான்; (எ -று.) "மமப்ராணாஹி பாண்டவர்:" எனக் கண்ணன் தானே கூறியுள்ளதற்கு ஏற்ப, 'மாலோனுயிர்போல்வான்' என்றார். இங்கே இவ்வாறு கூறியது, மைந்தரிடத்தினும் அருச்சுனனிடத்துக் கண்ணனுக்கு அன்பு மிகுதி யென்பதை விளக்கும்பொருட்டு. பி-ம்: முனைதோறுமுடற்றித். (எ-று.) (68) 69. துரியோதனன்சேனையார் புறங்கொடுத்தல். சஞ்சத்தகர்கண்ணன்றருதனயோர்பலரடைவே யெஞ்சப்பொருதனன்வெஞ்சிலையிமையோர்பதிமகனென் றஞ்சிக்களமுழுதுங்கழுதாடக்குறையாடக் குஞ்சத்தொடுகுடைவீழ்தரமுதுகிட்டனர்கூடார். | |