பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்5

தேரை விட்டு இறங்கி, வெம்போர் - கொடிய போரைச் செய்யவல்ல, ஒரு வேழம்
மேல்கொண்டான் - ஒருயானையின் மேல் ஏறிக்கொண்டான்;

     நாமமிரண்டொடுபத்துடைநாயகன் - துவாதசநாமமுடையவன்:
அந்நாமங்களாவன -கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதநன், திரிவிக்கிரமன்,வாமநன், ஸ்ரீதரன், இருடீ கேசன், பதுமநாபன்,
தாமோதரன் , என்பன, சக்ரவ்யூஹம்- சக்கரம் போல வடிவமமையும்படி
சேனையை வகுப்பது, பதினாறாம் போர்நாளிற்பாண்டவசேனை அர்த்தசந்திர
வியூகமாக வகுக்கப்பட்டதென வடமொழிப்பாரதத்தில் உள்ளது.        (6)

7.-இதுமுதல் நான்கு கவிகள் - ஒருதொடர்: அந்தயானையின்
வருணனை.

அடிக்கைகனத்துமதம்பொழியாழியினளவும்புகராலழகெய்தி
மடிக்கினுமண்ணுறுகையதுசெந்நிறவாயதுதேயாமதிதன்னை
யொடித்திருபக்கமும்வைத்தெனமகரிகையொன்றியொன்றி
                               யொன்னார்மெய்
யிடிக்கிமருப்பதுபுன்னையினாண்மலரென்னுஞ்சீரதிருகண்ணும்.

     (இ-ள்.) அடிக்கை கனத்து கையின் அடி பருத்து, மதம்பொழி ஆழியின்
அளவுஉம் - மதசலத்தைச்சொரிகின்ற நுனிக்கைவரையிலும், புகரால் -
செம்புள்ளிகளினால், அழகு எய்தி - பொலிவு பெற்று, மடிக்கின்உம் மண் உறு -
மடக்கினாலும் நிலத்தளவுந் தாழ்ந்து தொங்குகின்ற, கையது -
துதிக்கையையுடையது;செம்நிறம் வாயது - சிவந்த நிறத்தையுடைய வாயையுடையது;
தேயா மதி தன்னை -குறையாத [பூர்ண] சந்திரனை, ஒடித்து - இரண்டு
துண்டாக்கி, இரு பக்கம்உம் -இரண்டுபக்கங்களிலும், வைத்து என - வைத்தாற்
போல, மகரிகை ஒன்றி -பூண்பொருந்தி, ஒன்னார் மெய் - பகைவரது உடம்பை,
ஒன்றி இடிக்கும் - தாக்கிக்குத்துகின்ற, மருப்பது - தந்தங்களை யுடையது; இரு
கண்உம் - இரண்டு கண்களும்,புன்னையின் நாள் மலர் என்னும் - புன்னை
மரத்தின் புதிய பூ வென்று உவமைகூறப்படுகின்ற, சீரது - தன்மையையுடையது;
(எ - று.)-மேற் பத்தாம்பாட்டில் வரும்'அவ்வேழம்' என்பது இதுமுதல் மூன்று
கவிகட்கும் எழுவாயாம்.                                          (7)

8.திலகமுமோடையுமிலகுறுநெற்றியதாலவட்டச்செவியாலே,
பலதிசைமாருதமுய்ப்பதுசெம்புகர்பட்டின்றொழிலிற்பயில்கிற்ப,
துலகினைமேல்கொளுமவனதெனக்களியூறியதாலங்
                                    குலமொத்துக்,
குலவியமத்தகமொத்தகழுத்திலுயர்ந்ததம்பொற்குவடென்ன.

     (இ-ள்.) திலகம்உம் - (சிந்தூரத்) திலகமும், ஓடைஉம் - பட்டமும், இலகு
உறு-விளங்கப்பெற்ற, நெற்றியது - நெற்றியையுடையது; ஆலவட்டம் செவியால் -
பெருவிசிறிபோன்ற காதுகளினால், மாருதம் - காற்றை, பல திசை -
பலதிக்குக்களிலும், உய்ப்பது - வீசுவது; செம் புகர் - (உத்தம இலக்கணமாகிய)
சிவந்த புள்ளிகள், பட்டின் தொழிலின் - செம்பட்டினாற் செய்த சித்திர
வேலைபோல, பயில்கிற்பது - பொருந்தப்பெற்றது, உலகினை மேல் கொளுமவனது
என - (மூன்று) உலகங்களையும் அரசாளுகின்ற