பாகையாட்கொண்டான்செங்கைப்பரிசுபெற்றவர்நெஞ்சென்ன வோகையாற்செருக்கிமீண்டாருதிட்டிரன்சேனையுள்ளார். |
(இ-ள்.) உதிட்டிரன் சேனை உள்ளார் - தருமனது சேனையிலுள்ள வீரர்கள்,-நா கையா புகழான் - நாவுக்குக் கைக்காத[மிக இனிய] கீர்த்தியையுடையவனும்,பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் - பெண்ணையாற்றின் நீர்வளம் மிக்கதிருமுனைப்பாடிநாட்டை யுடையவனும், வாகையால் பொலி திண் தோளான் -வெற்றிமாலையால் விளங்குகின்ற வலிய தோள்களையுடையவனும், மாகதம்கொங்கர் கோமான் - மாகதக்கொங்குநாட்டிற்குத் தலைவனும் ஆகிய பாகை -வக்கபாகையென்னும் நகரத்தில் அரசாளுகிற, ஆட்கொண்டான் -வரபதியாட்கொண்டா னென்னும் மன்னவனது, செம் கை - சிவந்த இரண்டுகைகளினாலும் கொடுக்கபடுகிற, பரிசு - வெகு மானத்தை, பெற்றவர் - பெற்றபுலவர்களது, நெஞ்சு என்ன - மனம் போல, ஓகையால் செருக்கி -மகிழ்ச்சியினாற்களித்து, மீண்டார் - திரும்பி ( த் தம் படைவீட்டுக்கு)ச் சென்றார்கள்;(எ -று.) வெறுப்பைத் தராத புகழின் இனிமைமிகுதியை நன்கு விளக்குதற்கு, 'நா கையாப்புகழ்' என்றது. மாகதக்கொங்கு என்பது - நடு நாட்டைக்குறிக்கு மென்பர். பாகை = வக்கபாகை: முதற்குறைவிகாரம்.ஆட்கொண்டான் - பெயர். பி - ம்: பெற்றவர்கள்போல (90) 91.- அன்றைச் சூரியாஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும் அருக்கனுந் தருமன் மைந்த னாண்மையு நிலையுங் கண்டு வெருக்கொளு நிருப ரென்ன மேற்றிசை வேலை மூழ்கிச் சுருக்கமில் கங்குற் காலஞ் சென்றபின் சுதன்மே லன்பு பெருக்கவுண் டாக மீண்டுங் குணகடல் பிறந்திட் டானே. |
(இ-ள்.) அருக்கன்உம் - சூரியனும்,- தருமன் மைந்தன் - தருமபுத்திரனது, ஆண்மைஉம் - பராக்கிரமத்தையும், நிலைஉம் - போர் நிலைமையையும், கண்டு - பார்த்து, வெரு கொளும் - அச்சங்கொள்ளுகிற, நிருபர் என்ன - அரசர்கள் (ஓடியொளித்தல்) போல, மேல் திசை வேலை - மேற்குத்திக்கிலுள்ள கடலில், மூழ்கி- முழுகிமறைந்து [அஸ்தமித்து], - சுருக்கம் இல் - சுருங்குதலில்லாத, கங்குல் காலம்- இராப்பொழுது, சென்றபின் - கழிந்தபின்பு,- சுதன்மேல் அன்பு பெருக்க உண்டாக-(தன்) குமாரனான கர்ணனிடத்து அன்பு மிகுதியாக உண்டாக,(அதனால் அவனைக்காணுதற்கு வந்தவன் போல), மீண்டும்உம் - மறுபடியும், குண கடல் பிறந்திட்டான் -கிழக்குக்கடலில் உதித்தான்; முதலிரண்டடி - உவமையணி. பின்னிரண்டடியில் சூரியன் உதித்தற்குச் சுதன்மேலன்பு பெருக்க உண்டாதலைக் காரணமாகக் கற்பித்ததனால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி. (91) பதினாறாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. |