(இ-ள்.) அற்றை வெம் சமரில் - அன்றைநாள் [பதினாறாநாள்] கொடிய யுத்தத்தில்,அமர் முனைந்து - போர்செய்து, ஆற்றாது - முன் நிற்கமாட்டாமல், அழிந்து போம்- தோற்றுப்போன, அவனிபர் பலர் உம் - அரசர்ளெல்லாரும், மற்றைநாள் -பதினோழாநாளில், அலகு இல் புவனம்உம் - அளவில்லாத பூமி முழுவதும், இன்றுஏ- இன்றைத்தினமே மடியும் - அழிந்துபோம், என்று-, அனைவர்உம் -- எல்லாரும்,மயங்க - பிரமிக்கும்படி, ஒற்றை வெண் சங்குஉம் - ஒப்பற்ற வெள்ளியசங்கங்களும், பல்வகை பறைஉம்-, ஓதம் வான் கடல் என - அலைகளையுடையபெரிய கடல்போல, ஒலிப்ப - ஒலிக்கவும், கற்றை வெண் கவரி - தொகுதியாகியவெண்சாமரங்கள், கால் பொர - காற்றை வீசவும், தனி பொன் கவிகைநீழலில்ஒப்பற்ற பொற்காம்பிட்ட குடைகளின் நிழலிலே, களம் கலந்தார் -போர்க்களத்தை அடைந்தார்; (எ - று.)- ஒற்றை - ஒருகுழற்கருவி யென்றாருமுளர். (93) 3. கர்ணன் துரியோதனனோடு போர்க்களஞ் சேர்தல். எண்ணிருதினத்திற்பட்டபல்படையுமீண்டுமீண்டெழுந்தன வென்னும், வண்ணமோரளவில்வாசியுந்தேருமதசயிலமும்பதாதிகளும், விண்ணுமண்ணகமுந்தெரிவுறாவழக்கின்வெங்கள முழுவதுங்கஞல, வண்ணலந்தடக்கைக்கெதிரிலாவண்மையாண்டகையர சுடனடைந்தான். |
(இ-ள்.) 'எண் இரு தினத்தில் - கீழ்ப்பதினாறுநாள்களில், பட்ட - (போரில்) இறந்த, பல் படைஉம் - பலசேனைகளும், ஈண்டு - இவ்விடத்தில், மீண்டு - திரும்பவும், எழுந்தன - பிழைத்துவந்தன,' என்னும் வண்ணம் - என்றுசொல்லும்படி, ஓர் அளவு இல் - ஒரு அளவு இல்லாத, வாசிஉம் குதிரைகளும், தேரும்-, மத சயிலம்உம் - மதத்தையுடைய மலைபோன்ற யானைகளும், பதாதிகளும்-, விண்உம் மண்அகம்உம் தெரிவுறாவழக்கின் - வானுலகத்தவராலும் நிலவுலகத்தவராலும் [யாவராலும்] (இத்தன்மையதென்று)அறியக்கூடாத தன்மையாக, வெம் களம் முழுவதுஉம் - கொடிய போர்க்களம் முழுவதிலும், கஞல - நெருங்க,- அண்ணல் அம் தட கைக்கு - பெருமையையுடைய அழகிய பெரிய கைகளுக்கு, எதிர் இலா - ஒப்பில்லாத, வண்மை - தானத்தையுடைய, ஆண்தகை - ஆண்மைக் குணமுடைய கர்ணன், அரசுடன் - துரியோதனனனோடு, அடைந்தான் -(போர்க்களத்தைச்) சேர்ந்தான்; (எ -று.)- பி-ம்: என்ன. (94) 4.- கன்னனிருந்த பொலிவுகண்டு யாவருங் களித்தல். சென்னியின்மகுடமணிவெயிலெறிப்பத்திருக்குழைமணி வெயிலெறிப்ப, மன்னியபொலம்பூண்மணிவெயிலெறிப்ப வனைகழன்மணி வெயிலெறிப்பத், தன்னைமுன்பயந்தோன்றன்னினும்வடிவந் தயங்கு செஞ்சுடர்வெயிலெறிப்பக், கன்னனன்றிருந்தவழகினையாரே கண்டுகண்களிப்புறா தொழிந்தார். |
(இ-ள்.) சென்னியில் - தலையில்தரித்த, மகுடம் - கிரீடத்திற் பதித்த, மணி - இரத்தினங்கள், வெயில் எறிப்ப - சூரியகாந்தி போன்ற ஒளியை வீசவும், திரு குழை - அழகிய குண்டலத்தி |