12. | அஞ்சியோவன்றியருள்கொலோவறியேனாகவத்தடு தொழின்மறந்த, வெஞ்சிலைவிசயற்குள்ளவாறுணர்த்திமீளவும்பொரும் படிவிதித்தாய், வஞ்சினமறந்துநேமியுந்தரித்துவலம்புரிகுறித்துமூதாதை, துஞ்சிடவமரிற்சிகண்டிசெய்தவத்தின்றொடர்பயன்வழா வகைதுரந்தாய். |
(இ-ள்.) அஞ்சிஓ -(பகைவர்கட்குப்) பயந்ததனாலோ, அன்றி - அல்லாமல், அருள்கொல்ஓ - (உயிர்களிடத்துக்) கருணையினாலோ, அறியேன் - (இரண்டில் ஒன்று காரணமென்று நிச்சயமாகத்) தெரிந்திலேன்; ஆகவத்து - போர்க்களத்தில், அடு தொழில் - போர் செய்யுந் தொழிலை, மறந்த - விட்ட, வெம் சிலை விசயற்கு -கொடிய வில்லையுடைய அருச்சுனனுக்கு, உள்ள ஆறு உணர்த்தி - தத்துவங்களைஉபதேசித்து [ஸ்ரீகீதையை அருளிச்செய்து], மீளஉம் மறுபடி, பொரும்படி -போர்செய்யும்படி, விதித்தாய் - நியமித்தாய்; - வஞ்சினம்மறந்து - (முன்சொன்ன)பிரதிஜ்ஞையையும் மறந்து விட்டு, நேமிஉம் தரித்து - சக்கராயுதத்தையும் எடுத்து,வலம்புரி குறித்து - சங்கநாதமுஞ்செய்து, அமரில் - யுத்தத்தில், மூதாதை - பெரியபாட்டனாராகிய பீஷ்மர், துஞ்சிட - இறக்கும்படி, சிகண்டி செய் தவத்தின் தொடர்பயன் - சிகண்டி (முற்பிறப்பிற்) செய்திருந்த தவத்தினது (இப்பிறப்பில்) தொடருகிறபிரயோஜனம், வழா வகை - தவறாதபடி, துரந்தாய் - நடத்தினாய்; (எ -று.) முதல்நாட்போரில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம் பாட்டனும் அண்ணன் தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசிரியரும் மனங்கலந்த நண்பர்களுமாகவே யிருக்கக் கண்டு போர் புரியே னென்று காண்டீபங் கைநெகிழத்தேர்த்தட்டின்மீதே திகைத்துக்கிடந்த அருச்சுனனுக்குக் கண்ணன் தத்துவோபதேசஞ்செய்து தனதுவிசுவரூபங்காட்டி, அவனதுமயக்கத்தை ஓட்டி, அவனைப்போர் புரியுமாறு உடன்படுத்தினான். வஞ்சினம் - படைத்துணையாக அழைத்த துரியோதனனுக்குப் படையெடுத்துப் போர்செய்யே னென்று வாக்குத்தத்தஞ்செய்தது. நேமியெடுத்தது - மூன்றாநாட் போரில் பீஷ்மர் பாண்டவசேனையையெல்லாம் பாணவருஷத்தால் அழித்துப் போர்செய்யவும் அருச்சுனன் எதிரிற்பொராமல் மறந்து நின்றபொழுது. வீடுமன் அழிந்த பொழுதிலும்மற்றுஞ் சிலபொழுதிலும் கண்ணன் சங்கநாதஞ்செய்து நின்றார்; அவ்வொலியாற்பகைவர் சேனைகள் நடுங்கி ஒடுங்கின. (103) 13. | ஒருபகல்விசயன்மார்மூடுருவ வொழுகுவெங்கடத் தொருத்தலின்மேல், வருபகதத்தனெறிந்தவேலுன்றன் வண்டுழாய் மார்பகத்தேற்றாய், பொருபகையரசர்பலர்படவபிமன் பொன்றிய பொழுதுசெந்தழலி, னிருபனைமுனியால்விழாவகைவிலக்கிநிசியில் வெங்கயிலையுங்கண்டாய். |
(இ-ள்.) ஒழுகு - பெருகுகிற, வெம் - வெவ்விய, கடத்து - மதஜலத்தையுடைய, ஒருத்தலின்மேல் - யானையின்மேல் (ஏறி), வரு - (போர்க்கு) வந்த, பகதத்தன் - பகதத்தனென்னும் அரசன், ஒரு பகல் - ஒருநாள், [பன்னிரண்டாம்போர்நாள்], விசயன் - அருச்சுனனது, மார்வம் - மார்பை, ஊடுருவ - துளைக்கும்படி, எறிந்த- |