வீசின, வேல் - வேலை, உன்தன் - உன்னுடைய, வண் துழாய் மார்பு அகத்து - செழிப்பான திருத்துழாய்மாலையையுடைய மார்பினிடத்தே, ஏற்றாய் - ஏற்றுக்கொண்டாய்; பொரு பகை அரசர் பலர் பட - போர்செய்கிற பலவகையரசர்கள் இறக்கும்படி, (கொன்று), அபிமன் - அபிமந்யு, பொன்றிய பொழுது - இறந்த காலத்தில், (அருச்சுனன்), செம் தழலின் - செம்மையான அக்கினியில், விழா வகை - விழாதபடி, நிருபனை - அருச்சுனனை, முனியால் - முனிவரைக் கொண்டு, விலக்கி - தடுத்து,- நிசியில் - இராத்திரியில், வெம் - விரும்பப்படுகிற, கயிலைஉம் - கைலாசத்தையும், கண்டாய் - (போய்ப்) பார்த்துவந்தாய்; (எ -று.) நிருபதமுனியால் என்ற பாடத்திற்கு வஞ்சனையற்ற முனிவனாலென்க. உபதா என்றசொல் - ஒருவரைச்சோதித்த லென்ற பொருளுடையதாதலால், நிருபதன் - சோதனை வேண்டாதவன் [வஞ்சனையற்றவன்] என்ற கருத்தது. நிருபதன் + முனிவன் = நிருபதமுனிவன்: "சிலவிகாரமாமுயர்திணை". அரசர்பலர் - துன்முகன் உருமித்திரன் இலக்கணகுமாரன் துச்சனி முதலோர். (104) 14. | வருணண்மாமதலைவாசவன்மதலைமார்பினிலெறிந்தவெங் கதையைக், கருணையான்மருமம்புதையவேற்றந்தக்காளைகையறும்படி கண்டாய், தருணவாணிருபர்மயங்கிவீழ்தரவெண்சங்கமுமுழக்கி நேமியினா, லருணனாதபத்தைமறைத்திரவழைத்தாங்கபிமனுக்கரும் பழிகொண்டாய். |
(இ-ள்.)வருணன் மா மதலை - வருணனது சிறந்த குமாரனாகிய சுதாயுவென்பன், வாசவன் மதலை மார்பினில் - இந்திர குமாரனான அருச்சுனனது மார்பில், எறிந்த - வீசிய, வெம் - கொடிய, கதையை - கதாயுதத்தை, மருமம் - (தன்) மார்பில், புதைய - அழுந்தும்படி, கருணையால் - அருளினால், ஏற்று - ஏற்றுக்கொண்டு, அந்த காளை - அந்த வீரன், கையறும்படி - இறக்கும்படி, கண்டாய் - செய்தாய்; தருணம் வாள் நிருபர் - யௌவனபருவத்தை யுடையவராகியஆயுதங்களையுடைய அரசர்கள், மயங்கி வீழ் தர - மயங்கி விழும்படி, வெண்சங்கம்உம் முழக்கி - வெள்ளிய சங்கத்தையும் ஊதி, நேமியினால் - சக்கரத்தினால்,அருணன் ஆதபத்தை மறைத்து - சூரியனது வெயிலை மறையச்செய்து, இரவுஅழைத்து - இராத்திரியை வரும் படிசெய்த, ஆங்கு - அப்பொழுது, அபிமனுக்குஅரு பழி கொண்டாய் - அபிமந்யுவைக் கொன்ற அரிய பழிக்குப் பழிவாங்கினாய். (105) 15. | ஏவருஞ்சாபபண்டிதன்புதல்வ னேவியவேவினால் யாங்கள்[டாய் வீவருந்தன்மையறிந்துவாகனமும்விறற்படைகளு மொழித்திட் மூவருமொருவராகிநின்றருளுமூர்த்தியேபார்த்திவர் பலருந் தேவருமுணரார்நின்செயலெனமால்சேவடிகளின் முடிசேர்த்ரதான். |
(இ-ள்.) ஏ வரு - அம்புகள்வெளிப்படுகிற, சாபம் பண்டிதன் புதல்வன் - வில்வித்தையில் வல்ல துரோணனதுபுத்திரனாகிய அசுவத்தாமன், ஏவிய - பிரயோகித்த, ஏவினால் - நாராயணாஸ்திரத்தினால், யாங்கள் - நாங்கள் வீவரும் - இறக்கும்படியான, தன்மை - தன்மையை, அறிந்து - தெரிந்து, வாகனங்கள்உம் - (எங்கள்) வாகனங் |