19. | அவனின்றென்மணிநெடுந்தேர்கடவுமாகி லருச்சுனனுக் கடலாழியவனேயன்றிச், சிவன்வந்துதேர்விடினுங்கொல்வேனந்தத்தேர்நின்றாரிரு வரையுஞ் செங்கோல்வேந்தே, பவனன்சேய்முதலானதுணைவரோரோர்பகழிமுனைதனக் காற்றார்பரவையாடைப், புவனங்களனைத்தையுநின்குடைக்கீழாக்கிப்புரிதிறல் வாகையு நினக்கேபுனைவிப்பனே. |
மூன்றுகவிகள் - ஒருதொடர் (இ-ள்.) அவன் - அச்சல்லியன், இன்று - இன்றைக்கு, என்- எனது, மணி நெடு தேர்- (அடிக்கும்) மணிகள் கட்டிய பெரிய தேரை, கடவும் ஆகில் - செலுத்துவனானால், அருச்சுனனுக்கு-, அடல் ஆழியவன் ஏ அன்றி - வலிய சக்கரத்தையுடைய (காத்தாற் றொழிற்கடவுளாகிய) திருமாலேயல்லாமல், சிவன்வந்து தேர்விடின் உம் - (அழித்தற்றொழிற்கடவுளாகிய) சிவன் சாரதியாக வந்துதேர் செலுத்தினாலும், அந்த தேர் நின்றார் இருவரைஉம் - அத்தேரில் நின்ற கிருஷ்ண அருச்சுனர் இரண்டுபேர்களையும் கொல்வேன்-; செங்கோல்வேந்தே - நீதிதவறாத அரசாட்சியையுடைய அரசனே! பவனன் சேய்முதல் ஆன துணைவர்- (மற்றை) வாயுமகனான வீமன் முதலிய சகோதரர்கள், ஓர் ஓர் பகழி முனை தனக்கு - ஒவ்வொரு அம்பின் நுனிக்கேனும், ஆற்றார் - போதமாட்டார்; பரவை ஆடை - கடலைச் சேலையாகவுடைய, புவனங்கள் அனைத்தைஉம் - பூமிகள் முழுவதையும், நின் குடைக்கீழ் ஆக்கி - உனது ஆளுகையின் கீழ் ஆகச்செய்து, புரி திறல் வாகைஉம் - செய்த வல்லமையைக் குறிக்கிற வெற்றிமாலையையும், நினக்கு ஏ புனைவிப்பேன் - உனக்கே சூட்டுவேன்; (எ -று.)- மணி - அழகியவென்றும், நவரத்தினங்களும் பதித்த வென்றுமாம். (110) 20. | நஞ்சோற்றம்பெறநுகர்வுற்றிருண்டகண்டர் நற்றொண்டர் வடிவமெனநண்ணும்வெண்ணீற், றஞ்சோற்றுமடற்கைதைகமழுங்கானலகன்குருநாட்டரியேறே யானின்றீம்பால், வெஞ்சோற்றோடினிதருந்தியமுதருந்தும்விண்ணவர்போலிந் நெடுநாள்விழைந்துவாழ்ந்தேன், செஞ்சோற்றுக்கடனின்றேகழியேனாகிற்றிண்டோள்கள் வளர்த்ததனாற்செயல்வேறுண்டோ. |
(இ-ள்.) நஞ்சு - விஷத்தை, சோற்றம் பெற - உணவாகப் பொருந்தும்படி, நுகர்வுற்று - அமுதுசெய்து, இருண்ட - (அதனாற்) கறுத்த, கண்டர் - கழுத்தையுடையபரமசிவனது, நல்தொண்டர்- நல்ல அடியார்களது, வடிவம் என - உடம்பு (திருநீறு பொருந்துவது) போல, நண்ணும் - பொருந்திய, வெள் - வெண்மையான, நீறு - நீற்றையுடைய, அம் - அழகிய, சோறு - சோற்றியையும், மடல் - மடல்களையுமுடைய, கைதை - தாழைகள், கமழும் - வாசனை வீசுகிற, கானல் - கடற்கரைச்சோலைகளையுடைய, அகல் குருநாடு - பரந்த குருநாட்டிலே வாழுகிற, அரி ஏறே -(பகைவர்களுக்கு) ஆண்சிங்கம் போன்றவனே! ஆனின் தீம் பால் - பசுவினது இனிய பாலை, வெம் சோற்றோடு - சுடுகின்ற சோற்றுடனே, அழுது அருந்தும் விண்ணவர்போல் - அமிர்தத்தை யுண்ணுகிற தேவர்கள்போல, இநெடு நாள் - இவ்வளவு பல |