பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்63

காலமும், விழைந்து - விரும்பி, இனிது - இனிமையாக, அருந்தி-(உன்னிடம்)
உண்டு,வாழ்ந்தேன்-; செம் சோறு கடன்-(நீ எனக்குச்) செவ்வையாகப்போகட்டுவந்த
சோற்றுக்குப் பிரதியுபகாரமாகச் செய்யவேண்டுங்கடமையை, இன்று ஏ கழியேன்
ஆகில் - இன்றைக்கே கழிக்காமற்போய்விடுவேனானால், திண் தோள்கள்
வளர்த்ததனால் -* வலிய தோள்களை வளர்த்ததனாலே, வேறு செயல் உண்டுஓ -
வேறுபயனுளதோ? (எ -று.)

     நஞ்சு சோற்றம் என்பது 'நஞ்சோற்றம்' என விகாரமாயிற்று; சோற்றம்,
அம் -சாரியை. இனி, இத்தொடரை - நஞ்சு ஓர் தம்பெற என்று பிரித்து -
நஞ்சினதுஆரவாரமானது அடங்க என்று பொருள் கூறுவாருமளர். 'நஞ்சேற்றம்'
என்றபாடத்துக்கு -விஷத்தைப் பெருமைபெற உண்டு என்க. நீறு - பூஞ்சுண்ணம்.
சோறு- வயிரமற்ற சோற்றி. அக்காலத்திற் குருநாட்டின் எல்லை கடல்மட்டும்
இருந்ததுபோலும். ஈற்றடியில் 'அவிப்பலி' என்ற புறத்துறைப் பொருள் காணலாம்.
"வெள்வா ளமருட் செஞ்சோ றல்லது, உள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று"
என்பது கொளு.                                                (111)

21.ஒரூருமொருகுலமுமில்லாவென்னை யுங்கள்குலத்துள்
                     ளோரிலொருவனாக்கித்,
தேரூருமவர்மனைக்கேவளர்ந்தவென்னைச்
           செம்பொன்மணிமுடிசூட்டியம்புராசி,
நீரூரும்புவிபாலர்பலரும்போற்றநின்னினுஞ்சீர்பெற
                     வைத்தாய்நினக்கேயன்றி,
யேரூருங்கதிர்முடியாயுற்றபோரில்யார்க்கினியென்னு
                      யிரளிப்பதியம்புவாயே.

     (இ-ள்.) ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை-, உங்கள் குலத்து
உள்ளோரில் ஒருவன் ஆக்கி - உங்கள் குலத்தவரில் ஒருவனாகப் பாவித்து, தேர்
ஊருமவர் மனைக்குஏ - தேரைநடத்துகிற பாகரது மனையில்தானே, வளர்ந்த
என்னை-, செம்பொன் மணி முடி சூட்டி = செம்பொன்னினாற் செய்து
நவரத்தினமுமிழைத்த கிரீடத்தைத்தரிப்பித்து, அம்புராசி நீர் ஊரும் புவிபாலர்
பலர்உம் போற்ற - கடல்நீராற் சூழப்பட்டபூமியை ஆளுகிற அரசர்க ளெல்லாரும்
புகழும் படி, நின்னின்உம் சீர் பெற - உன்னினும் மிகச் சிறப்புப்பெறுமாறு,
வைத்தாய்-; நினக்குஏ அன்றி - (இத்தனை உபகாரமுஞ்செய்த) உனக்கேயல்லாமல்,
ஏர் ஊரும் கதிர் முடியாய் - அழகுபொருந்திய ஒளியையுடைய
கிரீடத்தையுடையவனே! உற்ற போரில் - நேர்ந்த யுத்தத்தில், இனி-, யார்க்கு என்
உயிர் அளிப்பது-! இயம்புவாய் - சொல்; (எ -று.)- என்று கர்ணன் கூறினான்.
மனைக்கு - உருபுமயக்கம். அம்புராசி - நீர்த்தொகுதியை யுடையது.       (112)

22.- துரியோதனன் சல்லியனை ஒருவரம்வேண்டுமென
இறைஞ்சுதல்.

கன்னனிவையெடுத்துரைப்பமகிழ்ந்துகேட்டுக் காந்தாரன்றிருக்
                               குலத்துக்கன்னியீன்ற,
மன்னர் பிரானிமைப்பொழுதிற்பழுதிலாத மத்திர
                           ராசனையெய்திமதுபசாலந்,
தென்னதெனவெனமுரலுஞ்செவ்விமாலைத்திருத்தோளாயா
                              னொன்றுசெப்பினாலவ்,
வின்னுரைகேட்டொருவரநீநல்கல்வேண்டுமென்னாணையெனக்
                          கரங்கொண்டிறைஞ்சினானே.