பக்கம் எண் :

68பாரதம்கன்ன பருவம்

உத்தரன் தேர் - உத்தரகுமாரனதுதேரை, விசையின் ஊர்ந்தான் - வேகமாய்ச்
செலுத்தினான்; (எ - று.)- பாவை - உவமாகுபெயர்.அயன் அரனுக்குத்தேரூர்ந்தது,
திரிபுரசங்காரகாலத்தில். அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை - ஆதிபருவத்து
அருச்சுனன் றீர்த்த யாத்திரைச் சருக்கத்து 13 - ஆம் பாடலுரை காண்க.     (119)

29.பூந்தராதலுமுழுதுதுமதித்தவாண்மைப்போர்வேந்தேயுனைப்
                           போலப்புகழேபூண்டு,
வேந்தராயமர்க்களத்திலதிசயித்த வீரரானவர்க்
                        கிதுதான்மேமபாடன்றோ,
மாந்தராயெக்கலையும்வல்லார்க்கன்றிவாசிநெடுந்தேரூர
                            வருமோவென்றென்,
றேந்தராவெழுதியபொற்கொடியோன்சொல்லியிறைஞ்
                சுதலுமுடன்பட்டானென்செய்வானே.

     (இ-ள்.) பூ தராதலம் முழுதுஉம் - அழகாகிய பூமியினிடத்திலுள்ளவர்
எல்லாராலும், மதித்த - மதிக்கப்பட்ட, ஆண்மை - பராக்கிரமத்தையுடைய, போர்
வேந்தே - போர்தொழிலில்வல்ல அரசனே! உனை போல - உன்னைப்போல,
புகழ்ஏ பூண்டு - கீர்த்தியையே மேற்கொண்டு, வேந்தர் ஆய் - அரசர்களாகி,
அமர்களத்தில் - போர்க்களத்திலே, அதிசயித்த - மிகச்சிறந்த, வீரர் ஆனவர்க்கு-
வீரர்களுக்கு, இமு - இவ்வாறுதேரூர்வது, மேம்பாடு அன்றோ - ஒரு
பெருமையன்றோ? மாந்தர் ஆய் - மனிதர்களாகி, எ கலைஉம் வல்லார்க்கு
அன்றி -எல்லாக்கல்விகளிலும் வல்லவர்களுக்கே யல்லாமல், (மற்றவர்க்கு), வாசி
நெடு தேர்ஊர வரும்ஓ - குதிரைகள்கட்டிய பெரியதேரை ஓட்டத்தெரியுமோ?
என்று என்று-,ஏந்து அரா எழுதிய பொன்கொடியோன் - படமெடுத்த நாகத்தை
எழுதின அழகியகொடியையுடைய துரியோதனன், சொல்லி -(பலவார்த்தைகள்)
பேசி, இறைஞ்சுதலும்- வணங்கினவளவில், உடன்பட்டான் - (சல்லியன்
கன்னனுக்குத் தேரோட்டச்)சம்மத்தித்தான்; என் செய்வான் - (இவ்வளவுபெரியவன்
சொன்னாற்சம்மதியாமல்வேறு) யாது செய்வான்? (எ -று.) - மாந்தராய் எக்கலையும்
வல்லார்க்கு என்பதை -எக்கல்லையும் வல்லாராகிய மாந்தர்க்கு என
மாற்றிப்பொருள்கொள்க.                                          (120)

30.- அதுதெரிந்த துரியோதனன்சேனை மகிழ்ந்தார்த்தல்.

மகபதிதன்மகனுக்குவசுதேவன்றன் மகன்பாகனானதுபோல்
                                வயங்குசோதிப்,
பகலவன்றன்மகனுக்குநிகரிலாண்மைப் பல்விதப்போர்ச்
                      சல்லியன் றேர்ப்பாகனனான்,
புகலரியதும்பையுடன்வெற்றிவாகைபுனைந்திடுமிக்கணத்தில்
                           வலம்புரித்தார்வேந்த,
னகலுததியுடையாடையவனிமுற்றுமவனதினியெனவார்த்த
                                 தரசன்சேனை.

     (இ-ள்.) 'மகபதி தன் மகனுக்கு - இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு,
வசுதேவன்தன் மகன் - வசுதேவபுத்திரனான கிருஷ்ணன், பாகன் ஆனதுபோல்-,
வயங்கு சோதி பகலவன்தன் மகனுக்கு - விளங்குகிற ஒளியையுடைய
சூரியகுமாரனான கன்னனுக்கு, நிகர் இல் ஆண்மை - ஒப்பற்ற பராக்கிரமத்தையும்,
பல் விதம் போர் - பல வகைப்பட்ட போர்களையுமுடைய, சல்லியன்-, தேர்
பாகன்ஆனான் - வலம்புரி தார் வேந்தன் - நஞ்சாவட்டை மாலையையுடைய
துரியோதனன், இ கணத்தில் - இந்தக்ஷணத்திலே, புகல் அரிய தும்பையுடன் -
(தான்அணிந்துள்ள) சொல்லுதற்கரிய தும்பைப்பூமாலை