கோவல் - நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதிகளிரண்டனுள் ஒன்று: சைவர் திருக்கோவல்வீரட்டத்தைக்குறிப்பது இது என்பர். நடுநாடு - மாகதக்கொங்குநாடு எனப்படு மென்ப. அணியிலக்கணநுண்மையறியாதார், கர்ணன்கை தானம் வழங்கியதுஇங்கு வர்ணியமென்பது தெரியாமையால் பிரசித்த உவமமான கர்ணன்கையைஉவமேயமாக்கியது விபரீதவுவமையணி யென்பர். பி - ம்: பகைஞர் வேந்தன். இதுமுதல் இருபதுகவிகள் - கீழ்ச்சருக்கத்துப் பன்னிரண்டாங் கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (124) 34.- தானாதிகள்செய்தபின் கர்ணன் சல்லியனிடங் கூறுதல். அந்தணர்பரிசின்மாக்க ளவனிபர்முதலோர்யார்க்குஞ் சிந்தைகள் களிக்கத்தான தியாகமுஞ்சிறப்புநல்கிக் கந்தனோர்வதனமாகி யவதரித்தன்னகன்னன் சந்தணிகுவவுத்தோளான் சல்லியன்றனக்குச் சொல்வான். |
(இ-ள்.)கந்தன் - (தேவசேனாபதியாகிய ஆறுமுகங்களையுடைய) சுப்பிரமணியன், ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன - ஒரு முகமுடையவனாகிப்பிறந்தாற்போன்ற, கன்னன்-, அந்தணர் - பிராமணர்களும், பரிசில் - வெகுமதியைப்பெறுதற்குரிய, மாக்கள் - மற்றை மனிதர்களும், அவனிபர் - அரசர்களும், முதலோர்யார்க்குஉம் - முதலிய எல்லார்க்கும், சிந்தைகள் களிக்க - மனங்கள்களிப்படையும்படி, தான தியாகம்உம் சிறப்புஉம் நல்கி - (முறையே) தானங்களையுந்தியாகங்களையும் வரிசைகளையுங்கொடுத்து, சந்து அணி - சந்தனம்பூசிய,சல்லியன்தனக்கு-, சொல்வான்- (எ -று.) - அது மேல் இரண்டு கவிகளாற்கூறுகின்றார். பி - ம்: அந்தணப். கந்தனுக்குங் கன்னனுக்கும் வேறுபாடு முகத்தின் எண்ணிக்கையிலே யன்றி வேறு குணவிசேஷங்களில் இல்லையென்பது மூன்றாமடிக்குக் கருத்து. சந்து - வடசொற்றிரிபு. குவவு - உரிச்சொல். (125) 35.- இரண்டுகவிகள் - ஒருதொடர்: சல்லியன்பாகனானமையைக் கர்ணன் பாராட்டிக்கூறுதலைக் தெரிவிக்கும். மேகவாகனன்பாற்பெற்ற வெயிலவனியமதங்கி யாகியமுனிவற்கீந்த வரும்பெருஞ்சாபம்பெற்றேன் நாகவெம்பகழிபெற்றே னாரணற்கொத்தவுன்னைப் பாகனுமாகப்பெற்றேன் பாக்கியம்பலித்தவாறே, |
(இ-ள்.) மேகவாகனன்பால் - மேகங்களைவாகனமாகவுடைய இந்திரனிடத்து, பெற்ற-, வெயிலவன் - வெயிலையுடைய சூரியன், இயமதங்கி ஆகிய முனிவற்கு - ஜமதக்நிமுனிவனுக்கு, ஈந்த - கொடுத்த, அரு பெரு சாபம் - அரிய பெரிய வில்லை,பெற்றேன் - (பரசுராமரிடத்தினின்று யான்) அடைந்தேன்; நாகம் வெம் பகழி -கொடிய நாகாஸ்திரத்தை, பெற்றேன்-; நாரணற்கு ஒத்த - கிருஷ் |