பக்கம் எண் :

72பாரதம்கன்ன பருவம்

னனுக்கு ஒப்பான, உன்னை-, பாகன்உம் ஆக பெற்றேன் - சாரதியாகவும்
அடைந்தேன்; பாக்கியம் பலித்த ஆறுஏ - (எனது) நல்வினை பயன்பட்ட விதம்
அதிசயிக்கதக்கதே: (எ -று.)

     ஈற்றேகாரம், வியப்புப்பொருள்பட நின்றது. இயமதங்கி = ஜமதக்நி:
பரசுராமன்தந்தை; வடசொற்சிதைவு. இந்தவில்லுக்கு விஜயம் என்றுபெயர்; இது,
இந்திரன்பொருட்டு விசுவகர்மா நிருமித்தது. இதைக்கொண்டு முன்னே இந்திரன்
பலஅசுரர்களையும், பரசுராமர் பல அரசர்களையும் வென்றார்; இதனோசையாற்
பகைவர்கள் பலர் மூர்ச்சிப்பர்.                                   (126)

36.எனக்கெதிர்விசயனல்லதில்லையவ்விசயனென்பான்
றனக்கெதிரென்னையன்றித்தரணிபர்யாருமில்லை
மனக்குநேரானதோழன்மகிதலமுழுதுமெய்தக்
கனக்குரற்களிற்றேயின்றுகாண்டியென்னான்மையென்றான்.

     (இ-ள.்) கனம் குரல் களிற்றோய் - பருத்த குரலையுடைய யானைச்
சேனையையுடையவனே! எனக்கு -, எதிர் - சமானம், விசயன் அல்லது இல்லை -
அருச்சுனனையல்லாமல் (வேறெவரும்) இல்லை; அ விசயன் என்பான் தனக்கு -
அந்த அருச்சுனனுக்கு, எதிர்-, என்னை அன்றி-, தரணிபர் யார்உம் - பூமியை
ஆளுகிற அரசரெவரும், இல்லை-;  மனக்கு நேர் ஆன தோழன் - மனத்திற்கு
ஒத்தநரண்பனான துரியோதனன், மகிதலம் முழுதும் எய்த - பூமிமுழுவதையும்
அடையும்படி.இன்று - இன்றைக்கு, என் ஆண்மை - எனது பாராக்கிரமத்தை,
காண்டி பார்ப்பாயாக, என்றான் - என்று (கர்ணன்) கூறினான்; (எ - று.) -
உபமேயோபமாலங்காரம்.                                     (127)

37.- மூன்றுகவிகள் - ஒருதொடர்: சல்லியன் கர்ணனது
செருக்கடங்கப்பேசுதல்.

என்றலுமத்திரேசனிறநகைசெய்துநீநின்
வென்றியும்வலியுங்கற்றவின்மையும்விளம்பவேண்டாம்
ஒன்றொடொன்றிரண்டுதேருமுருளுடனுருள்கள்கோத்துச்
சென்றெதிர்முனைந்தபோதுன்சேவகந்தெரியுமாதோ.

     (இ - ள்.) என்றலும் - என்று (கன்னன்) சொன்னவளவில்-, மத்திரஈசன் -
மத்திரநாட்டரசனான சல்லியன், இள நகை செய்து - புன்சிரிப்புச் செய்து, நீ-,
நின் -உனது, வென்றிஉம் - ஜயத்தையும், வலிஉம்- பலத்தையும், கற்ற
வின்மைஉம் -பயின்றவிற்றொழிலையும், விளம்ப வேண்டாம் - (எனக்குச்)
சொல்லவேண்டாம்;இரண்டு தேரும்-, ஒன்றொடுஒன்று -, உருளுடன் உருள்கள்
கோத்து -சக்கரங்களோடு சக்கரங்கள் நெருங்கப்பெற்று, எதிர்சென்று - எதிரிற்
போய்,முனைந்த போது - போர் செய்து பொழுது, உன் சேவகம் தெரியும் -
உனது வீரம்விளங்கும்; (எ -று.) - கன்னனை இகழ்தல் காரணமாக இளநகை
பிறந்தது.இரண்டுதேர் - கர்ணார்ச்சுனர் தேர்கள்.                   (128)