அன்புடையவனாதலாலும் கண்ணனுக்குவிரோதமாகுமேயென்று கருதியதனாலும் துரியோதனன்பக்கத்தும் பாண்டவர்பக்கத்தும் சேராமல் தீர்த்தயாத்திரைசென்றான். யது என்பவன் - சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் மக்களில்ஒருவன். (137) 47. | கங்கைதன்வயிற்றிற்றோன்றித்தாதைதன்காதறீர்ப்பான் எங்களுக்கரசும்வாழ்வுமிருநிலமுழுதுந்தந்து வெங்களத்துதயன்போலவீடுமன்களத்தையெல்லாஞ் செங்களப்படுத்தமீண்டுந்தேவரிலொருவனானான். |
(இ-ள்.) வீடுமன் - பீஷ்மன் , கங்கைதன் வயிற்றில்தோன்றி - கங்கையின் வயிற்றினின்றும் பிறந்து, தாதைதன் காதல் தீர்ப்பான் - (தன்) தகப்பனது ஆசையைமுடிக்கும்பொருட்டு, எங்களுக்கு-, அரசுஉம் - இராச்சியத்தையும், வாழ்வுஉம் -செல்வவாழ்க்கையையும், இரு நிலம் முழுதுஉம் - பெரியபூமிமுழுவதையும், தந்து -கொடுத்து, வெம் களத்து - விரும்பப்படுகிற பூமிமுழுவதையும், உதயன் போல - சூரியன்போல, களத்தை எல்லாம் - போர்க்களம் முழுவதையும், செம்களம்படுத்தி -(இரத்தவெள்ளத்தாற்) சிவந்தகளமாகச்செய்து, மீண்டும் - பின்பு, தேவரில் ஒருவன்ஆனான் - தேவர்களுள் ஒருத்தனாயினான்; (எ- று.) 'எங்களுக்கு' என்றது - தனது பாட்டன்மாராகிய விசித்திரவீரியனையுஞ் சித்திராங்கதனையுங் கருதி. சூரியன் தன்சிவந்தகிரணங்களினால் உலகமுழுவதையுஞ் செம்மையாக்குவதுபோல, இவ்வீடுமர் தமதுகை அம்பினாற் கொல்லப்படுகிற பகைவர்களின் செந்நீராற் களமுழுவதுஞ் செம்மையாம்படி பொருது பத்தாநாட்போரில் அழிந்தா ரென்றவாறு. மீண்டும் - முன்போலவேயென்றபடி. (138) 48. | கரிமுகக்கடவுளன்னகடும்பரித்தாமாவென்னுங் குரைகழற்றுணைத்தாட்சிங்கக்குருளையைப்பயந்ததாதை யருமறைக்கயனையொப்பானடற்சிலைக்கரனையொப்பான் றிருவருட்கரியையொப்பான்றிருத்தகுவீடுசேர்ந்தான். |
(இ-ள்.) கரி முகம் கடவுள் அன்ன - யானைமுகக்கடவுளாகிய விநாயகனைப் போன்ற, கடு பரித்தாமா என்னும் - வலிய அசுவத்தாமனென்கிற, குரை கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய, துணை தாள் - இரண்டகால்களையுடைய, சிங்கம் குருளையை - சிங்கக்குட்டியை, பயந்த - பெற்ற, தாதை - தந்தையும், அருமறைக்கு - அரிய வேதங்களுக்கு, அயனை ஒப்பான் - பிரமனைஒப்பவரும், அடல்சிலைக்கு- வலிய வில் வித்தைக்கு, அரனைஒப்பான் - உருத்திரனை ஒப்பவரும், திரு அருட்கு - மேலான கருணைக்கு, அரியை ஒப்பான் - விஷ்ணுவை ஒப்பவரும் ஆகிய துரோணர், திரு தகு வீடுசேர்ந்தான் - மேன்மைபொருந்திய முத்தியுலகத்தை அடைந்தார்; (எ -று.) (139) 49. | சாயலாற்சிறந்ததோகைச்சாமளத்தடம்புள்ளூர்திச் சேயலாற்றேவர்வாழ்வுதேவருக்கியாவரீந்தார். | |