யுத்தத்தையுடைய, விசய் கன்னன்மேல் - விசேஷ ஜயத்தையுடைய கர்ணன்மேல், வெய்தின் எய்தினான் - உக்கிரமாகச் சென்றான்; (எ -று.) ஓடிப்போகுமிடத்தில் 'வெஞ்சூரர்' என்றும், 'துரோணசூதனன' என்றும் கூறியது - இகழ்ச்சி: கன்னன்சிறப்பைக் குறித்தற்காகவுமாம். விசயசேனன்மேல் என்றபாடத்திற்கு - விசேஷஜயத்தையுடைய சேனையையுடைய கர்ணன்மே லென்க. (148) 58.-ஐந்துகவிகள் - வீமகர்ணர்கள் கடும்போர் புரிய முடிவில் வீமன் வென்று கர்ணனுயிரைவிடுத்துச் செல்லலைக் கூறும். காலினால்வருங்காளைமைந்தனுங்கதிரினால்வருங்காளை மைந்தனு மாலினால்வருங்களிறுவாசிமா மன்னுதேரெனும்வாகனத்தினார் வேலினாலெறிந்தமருடற்றியும்வெய்யவாளினால்வெட்டி முட்டியுங் கோலினாலெறிந்துருவவெற்றிவிற்கோலியுங்களங் குறுகினார்களே. |
(இ - ள்.) காலினால் வரும் - வாயுவினாற் பிறந்த, காளை மைந்தன் உம் - இளவெருதுபோன்ற வீரனான வீமனும், கதிரினால் வரும் - சூரியனாற் பிறந்த, காளை மைந்தன் உம் - கர்ணனும், மாலினால் வரும் களிறு - மதமயக்கத்தோடு வருகிறயானையும் வாசி - குதிரையும், மா மன்னு தேர் - பெருமை பொருந்திய தேரும், எனும் வாகனத்தினார் - என்கிற வாகனங்களையுடைய இரண்டுசேனை வீரர்களும், வேலினால் எறிந்து அமர் உடற்றிஉம் - வேலால் வீசிப் போர்செய்தும், வெய்ய வாளினால் வெட்டிமுட்டிஉம் - கொடிய வாளால் துணித்துமோதியும், வில் கோலி - வில்லை வளைத்து, கோலினால் எறிந்து - அம்புகளால் எய்து, உருவ - துளைக்கும்படி, எற்றிஉம் - தாக்கியும், களம் குறுகினார்கள் - போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ -று.) இனி, இக்கவிக்கு - வாயுகுமாரனான வீமனது மகனாகிய சுருத சேனனென்பவனும் சூரியகுமாரனான கர்ணனது மகனாகிய விருஷசேனனென்பவனும் யானை குதிரை தேர் என்னும்வாகனங்களின்மேல் ஏறினவர்களாய், (முறையே) வேலினாலும் வாளினாலும் வில்லினாலும் பொருது களங்குறுகினார்களென்று உரைத்து, மேலைக்கவியின் முதலடிக்கு - வீமனும் கன்னனுந் தத்தம் மக்களது போர்த்திறத்தைக் கண்டு கண்டு: களித்து என்று உரைப்பினுமாம். (149) 59. | மைந்தர்போர்விதங்கண்டுகண்டுதார் மருவுமம்புயத்திரு வருங்களித், துந்துமாநெடுந்தேரிரண்டும்வந் துள்ளமானதேரொத் துலாவவே, அந்தரம்புதைந்தும்பராரெலா மஞ்சியோடுமாறப்பு மாரியுஞ், சிந்தவெண்டிசாமுகமுமண்டமுஞ் செவிடுபட்டிடச்சிலை வணக்கினார். |
(இ - ள்.) தார் மருவும் - போர்மாலை பொருந்திய, அம் புயத்து - அழகிய தோள்களையுடைய, இருவர்உம் - கன்னனும் வீமனும்,- மைந்தர் - (தம்முடன் வந்த) வீரர்களது, போர் விதம் - போர்செய்யும் வகைகளை, கண்டு கண்டு - பார்த்துப்பார்த்து, களித்து - (தாம்) மகிழ்ந்து, உந்தும் மா நெடு தேர் இரண்டுஉம் - செலுத்தப்படுகிற |