பெரிய உயர்ந்த (தமது) இரண்டுதேர்களும், உள்ளம் ஆனதேர் ஒத்து - (தத்தம்) மனோரதத்தைப் போன்று , வந்து உலாவ - உலாவி வராநிற்க,- உம்பரார் எலாம் - மேலுள்ள தேவர்களெல்லாம், அஞ்சி ஓடும் ஆறு - பயந்து ஓடும்படி, அப்பு மாரிஉம் - பாணவருஷமும், அந்தரம் புதைந்து - ஆகாயத்தை மறைத்து, சிந்த - சிந்தவும், எண் திசாமுகம்உம் - எட்டுத் திக்குக்களினிடத்திலுள்ளவர்களும், அண்டம்உம் - அண்டகோள முழுவதிலுள்ளவர்களும், செவிடு பட்டிட - (நாணொலிமிகுதியால்) செவிடாம்படியும், சிலை வணக்கினார்- வில்லை வளைத்தார்க்ள; (எ - று.) - உள்ளமான தேர் - மனோரதமென்ற வட சொல்லின்மொழிபெயர்ப்பு ; விருப்பமென்பது பொருள். (150) 60. | செல்வணக்கிமேல்கீழெனும்பெருந் திசையிரண்டினுந் திகழும்விற்கள்போல், வில்வணக்கியவ்விருவரும்பொரும் வெஞ்ச மத்தில்வீமனையுரத்தினு, மல்வணக்குதோளினுமிலக்கிலா வாளியே வினானோளியாகவே, கல்வணக்கிமுப்புரமெரித்தமுக் கண்ணினான் வலக்கண்ணளித்துளான். |
(இ - ள்.) செல் வணக்கி - மேகங்களில் வளைவாகத்தோன்றி, மேல்கீழ்எனும் பெரு திசை இரண்டின்உம் - மேற்கு கிழக்கு என்கிற பெரிய இரண்டு திக்குகளிலும், திகழும் - விளங்குகிற, விற்கள்போல் - இந்திரதனுகளைப் போல, வில் வணக்கி - (தத்தம்) வில்லை வளைத்து, அ இருவர்உம் - கன்னனும் வீமனும், பொரும் - போர்செய்கிற, வெம் சமத்தில் - கொடிய யுத்தத்தில், கல் வணக்கி - மேருமலையை (வில்லாக) வளைத்து, முப்புரம் எரித்த - திரிபுரங்களைத் தகித்த, முக் கண்ணினான் -மூன்றாவது [நெற்றிக்] கண்ணையுடைய உருத்திரனது, வலம் கண் - வலதுகண்ணாகிய சூரியனால், அளித்துளான் - பெறப் பட்டவனாகிய கர்ணன், வீமனை -வீமனது, உரத்தின்உம் - மார்பிலும், மல் வணக்கு தோளின்உம் - மல்லுத்தொழிலைப்பயின்ற தோள்களிலும், ஒளி ஆக - ஒழுங்காக, இலக்கு இலா வாளி - எதிரில்லாதஅம்புகளை, ஏவினான் - பிரயோகித்தான்; ( எ - று.) மல் வணக்கு தோள் - விராட நகரத்தில் எல்லாமல்லரையும் வென்று வந்தானொரு மல்லனைத் தோற்பித்த தோளென்றுமாம். கல் - இலக்கணையால் மேருவை உணர்த்திற்று. இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுட ராதலால், இங்ஙனங் கூறினார். (151) 61. | வலக்கணானசெஞ்சுடரிடக்கணும்வாகுவுந்துடித்தா குலத்துடன், கலக்கணீர்பொழிந்தினையும்வேலையிற் கனற்படும் புணிற்றடி படுங்கணக், கிலக்கணந்தவாவீமன்வாளியீ ரீரண்டுநாலிரண்டெண் ணிரண்டினா, லலக்கணெய்தவெய்தனனுதாரிதன் னணிகணீடு தோளாகமெங்குமே. |
(இ- ள்.) வலக்கண் ஆன -(இறைவனது) வலக்கண்ணாகிய, செம்சுடர் - சிவந்த கிரணங்களையுடைய சூரியன், இடக் கண்உம் வாகுஉம் துடித்து - இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்கப் பெற்ற, ஆகுலத்துடன் - கவலையுடனே, கலம் க(ண்)ணீர் பொழிந்து |