சென்று - (எதிரிற்) போய், பரித்தாமனை - அவ்வசுவத்தாமாவை, செம் கை அம்பால்- சிவந்த கைகளினால் விடப்படுகிற அம்புகளால், வென்று - ஜயித்து, இமைப்பின் -நொடிப்பொழுதினுள்ளே, வெறு காலினின் மீள - (தேரின்றிக்கே) வெறுங்கால்களால்திரும்பிப்போம் படி, விட்டான் - (உயிரோடு) அனுப்பினான். (162) 72.- துரியோதனன் தம்பி சுதக்கணன் கனன்றுவருதல். துரியோதனன்றனிளையோரிற்சுதக்கணப்பேர்ப் பெரியோன்முறிந்தபெருஞ்சேனையின்பின்புநின்றோன் பரியோடுமான்றேர்ப்பரப்போடும்பதாதியோடுங் கரியோடுமூழிக்கனலென்னகனன்றுவந்தான். |
(இ-ள்.) துரியோதனன் தன் இளையோரில் - துரியோதனன் தம்பிமாருள், சுதக்கணன் பேர் - சுதக்கணன் என்னும் பெயரையுடைய, பெரியோன் - மகாவீரன், முறிந்த பெரு சேனையின் பின்பு நின்றோன் - நிலைகெட்ட (தமது) பெரிய சேனைக்குப் பின்னே நின்றவன், பரியோடுஉம் - குதிரைகளுடனும், மான் தேர் பரப்போடு உம் - குதிரைகளைப்பூட்டிய தேர்களின் கூட்டத்தோடும், பதாதியோடுஉம் - காலாள்களுடனும், கரியோடுஉம் - யானைகளுடனும், ஊழி கனல்என்ன - யுகாந்தகாலத்து அக்கினிபோல, கனன்று வந்தான்- கோபித்து வந்தான்; (எ- று.) - செய்யுளோசையின் பொருட்டு ' என்ன கனன்று' என இயல்பாய்வந்தது. (163) 73.- நகுலன் அவனை யோட்டுதல். முகிலின்சிலையிற்சிலைகோலிமுனைகொளம்பு பெகிலந்தொடுத்துவருகாளையைப்பெட்பினோக்கி நகுலன்சிறிதுநகைசெய்துநகைசெய்வாளி யகிலந்தொடுத்தாங்கவன்றன்னையுமஞ்சுவித்தான். |
(இ-ள்.) முகிலின் சிலையின் - மேகத்தில் தோன்றுகிற இந்திரவில்லைப்போல, சிலை கோலி - வில்லை வளைத்து, முனை கொள் அம்பு - கூர்மைகொண்ட அம்புகளை, பெகிலம் தொடுத்து வரு - பலவாகப்பிரயோகித்துவருகிற, காளையை - அச்சுதக்கணனை, நகுலன்-, பெட்பின் நோக்கி - போர்விருப்பத்தோடு பார்த்து, சிறிதுநகை செய்து - புன் சிரிப்புச்செய்து, நகை செய் வாளி அகிலம் - ஒளிசெய்கிற அம்புகள் அநேகத்தை, தொடுத்து - (அவனம்புகளுக்குஎதிரே) தொடுத்து விலக்கி, ஆங்கு - அப்பொழுதே, அவன் தன்னைஉம் அஞ்சுவித்தான்- அவனையும் பயந்து ஓடச்செய்தான்; (எ -று.)- பெகிலம் - பஹூளம் என்னும் வடமொழித்திரிபு. (164) 74.- கர்ணன் சேனைசூழ முனைந்துவருதல். மட்டுப்படாமல்வருதெவ்வர்மலையினின்றே தட்டுப்படாதின்றெமரானவர்தானையென்னாப் பட்டுப்படாதவடிவேனரபாலர்சூழ முட்டுப்படாதமுரட்கன்னன்முனைந்துசென்றான். |
|