பக்கம் எண் :

100பாரதம்சல்லிய பருவம்

பொழுதேகங்காநதியில் எடுத்தெறிந்துவிட்டாள்.  எட்டாவது பிள்ளை
பிறந்தவுடனே தந்தை 'இக்குழந்தையைக் கொல்லலாகாது' என்றுமறுக்க,
கங்கைகணவனைவிட்டு நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே, இவ்வீடுமன்.

    இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - இச்சருக்கத்தின் பதினோராங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.      (131)

132.

நெஞ்சறியநீயெமக்குநிலைநின்றபழியாகநெடுநாட்செய்த
வஞ்சகமும்பொய்ம்மொழியுமனுநீதிதவறியதுமறந்தாய்கொல்லோ
துஞ்சியநின்சேனையெல்லாமீண்டுவரநீயறையுஞ்சுருதியிற்றை
வெஞ்சமரமுடித்தன்றோவறைவதிவைவீரருக்குவீரமாமோ.

     (இ -ள்.) நிலை நின்ற பழி ஆக - (எந்நாளும் அழியாமல்) நிலை
நிற்குந்தன்மையதான பழிப்பு உண்டாம்படி, நெஞ்சு அறிய - மனப்பூர்வமாக,
நீஎமக்கு நெடு நாள் செய்த-நீ எங்களுக்கு வெகுநாளாகச்செய்துவந்த,
வஞ்சகமும் - வஞ்சனையையும், பொய்மொழியும் - (நீகூறிய)
பொய்வார்த்தைகளையும், மனு நீதி தவறியதும் - மனுதர்மசாஸ்திரத்தில்
சொல்லப்பட்ட நீதியினின்று (நீ) வழுவியதையும், மறந்தாய் கொல் ஓ -
மறந்துவிட்டாயோ? துஞ்சிய - இறந்த, நின் சேனை எல்லாம் - உனது
சேனைகள் யாவும், மீண்டுவர - உயிர்பெற்றுத் திரும்பிவரும்படி, நீ அறையும்
- நீ உச்சரிக்கிற, சுருதி - வேதமந்திரம், இற்றை வெம் சமரம் முடித்து
அன்றோ - இன்றைய தினத்தின் கொடியபோரை முடித்தபின்பல்லவோ,
அறைவது - உச்சரிக்க வேண்டுவது? (அங்ஙனம் இருக்க), இவை - (நீ
செய்யும்) இச்செயல்கள், வீரருக்கு வீரம் ஆமோ - சுத்த வீரர்களுக்கு உரிய
பராக்கிரமச் செயலாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ - று.)

     இவை -முதலிற் பல தீங்குகளைச்செய்தலும், அவற்றிற்காக நேர்ந்த
போரில் முன்நிற்கமாட்டாமல் ஓடியொளித்துத் தவந்தொடங்குதலும். 'எமக்கு
நிலைநின்ற பழியாக' எனஎடுத்து, எங்களுக்கு என்றும் நிலைப்பட்டபழி
யுண்டாம்படி யென வுரைப்பினும் அமையும்.  துரியோதனன்
பாண்டவர்க்குச்செய்தவஞ்சகமும், கூறிய பொய்மொழியும்மிகப்பல; வீமனுக்கு
நஞ்சு ஊட்டியமை, அரக்குமாளிகையில் தீவைத்தமை, சூதாட்டம், வனவாச
அஞ்ஞாதவாசங்களின் பின் கொடுப்பேனென்று வாக்குத்தத்தஞ்செய்த
இராச்சியத்தை மீண்டுகொடாமை முதலாக நூல்முழுவதிலுங் காண்க.  நீதி
தவறியது - "மூத்தானிருக்க இளையா னரசாடல் கோத்தருமமன்று" என்ற
இராசநீதி தவறித் தருமனினும் இளையவனான தான் அரசுபெற்று
ஆளுதல்.                                              (132)

133.அடிமாறிநீரிடைப்புக்கருமைநீபுகன்றாலு மரவப்பைம்பொற்,
கொடிமாறிக்குருகுலத்தார்கோவேநின்பேர்மாறிக்குலாவுமாலை,
முடிமாறியொருதனிமா முத்தநெடுங்குடைநிழற்கீழாளுமுந்நீர்ப்,
படிமாறி யொழியவிடேன் புறப்படாய்மறைபடவிப்பகல்போம்
                                         முன்னே.

     (இ - ள்.) குரு குலத்தார் கோவே - குருவமிசத்து அரசர்களுக்கு
அரசனே! நீ- , அடி மாறி - அடிகளைமாற்றிவைத்து, நீரிடைபுக்கு -