பக்கம் எண் :

102பாரதம்சல்லிய பருவம்

போருக்குஅஞ்சிப் பாதத்தில் விழுதல் அரசர்க்குப்பெரும்பழிப்பாதலால்
நீவெளிப்பட்டு வந்து என்னோடு போர்செய்து பழிப்புக்கிடமின்றி
வீரசுவர்க்கம்பெறுவாயென்றான்.  நிலவுலகத்து அரசாட்சியையிழந்து
ஒழிந்துவிடுகிறோமேயென்று கலங்காதே; இதனினுஞ் சிறந்த விண்ணுலகத்திற்
செலுத்துவேனென்பான், 'கலங்கல்' என்றான்:  இது, செருக்குமொழி. 
அரமகளிர்கைப்பிடிக்க - தேவமாதர்களை அங்கு நீ மணஞ்செய்துகொள்ள
என்றபடி. விவாக காலத்தில் கணவன் தனதுவலக்கையால் மனைவியின்
இடக்கையைப்பிடித்தல் மரபு; அதனால், விவாகத்துக்கு, 'பாணிக்கிரகணம்'
என்று ஒருபெயர் வழங்கும்.  இனி, 'கைபிடிக்க' என்றும் பாடமுண்டு.
தேவமாதர்கள் வேட்கைமிகுதியோடு வந்து உன்கையை வலியப்பற்ற வென்று
உரைத்தலுமொன்று.  கற்பகநீழலில் வைப்பன் - வீரசுவர்க்கத்திற்
செலுத்துவேன் என்றபடி.  கற்பகம் - வேண்டுவார்க்கு வேண்டினவற்றைக்
கற்பித்தலால், வந்த பெயர்:  கல்பித்தல் - உண்டாக்கிக் கொடுத்தல். 
சந்தாநம்,பாரிஜாதம், மந்தாரம், கல்பகம், அரிசந்தநமெனக் கற்பகவிருட்சம்
ஐந்தாம். தேவலோகத்தில் கற்பகவிருட்சத்தின் நிழல் இந்திரன்
அரசாட்சிசெய்யுமிடமாதலை "கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை"
என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.  அரமகளிர் - அமரமகளிர், அல்லது
அரம்பைமகளிர் என்பதன் விகாரம்.  காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி.

     ஓதம்- வெள்ளமுமாம்.  பசுமையையுங் கருமையையும் சிறிது
வேறுபாடுகருதாதுஅபேதமாகக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடல்
பைங்கடலெனப்பட்டது:  இனி, பசுமை குளிர்ச்சியுமாம்.  உறு - உரிச்சொல்.
"அம்ம கேட்பிக்கும்" என்ற தொல்காப்பியத்தின்படி யான் கூறுகின்றதனைக்
கேளென்று பொருள்பட்டு உரையசையாய் நிற்கும்.                (134)

135.களந்தனிலெத்தனைகவந்தங்கண்களிக்கக்கண்டனைநீ
                             கைத்தண்டோடிக்,
குளந்தனிலிக்கவந்த முங்கண்டேகுதற்குப்புகுந்தனையோ
                               கொற்றவேந்தே,
வளந்தனிலிக்கோபமுமென்வஞ்சினமும் போகாது
                                 வந்துன்பாவி,
உளந்தனிலிக்கவலையைவிட்டுடற்றுதலல்லது
                         மற்றோருறுதியுண்டோ.

     (இ -ள்.) கொற்றம் வேந்தே - வெற்றியையுடைய அரசனே! களந்தனில்
- போர்க்களத்தில், எத்தனை கவந்தம் - எத்தனை கவந்தங்களை [தலையற்ற
உடற்குறைகளை], நீ -, கண் களிக்க கண்டனை - கண்களிக்கப்பார்த்தாய்: இ
குளந்தனில் - இக்குளத்திலேயுள்ள, இ கவந்தமும் - இந்தக் கவந்தத்தையும்
[நீரையும்], கண்டு ஏகுதற்கு - பார்த்துச்செல்லுதற்கு, கை தண்டோடு
புகுந்தனைஓ - கையிலுள்ள கதாயுதத்தோடு இதனுட் பிரவேசித்தாயோ?
வளந்தனில் - மிகுதியாகவுள்ள, இ கோபமும் - இந்த (எனது) கோபமும்,
என்வஞ்சினமும் - எனது சபதமும், போகாது - வீண்போகாது:  உன் -
உனது ,பாவி உளந்தனில் - தீவினைக்கிடமான மனத்திலுள்ள, இ
கவலையை -இந்தக்கவலையை, விட்டு - ஒழித்து, (நீ), வந்து - வெளிப்பட்டு
வந்து,