பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்107

     (இ -ள்.) 'ஐவரினும் - பாண்டவர் ஐந்துபேருள்ளும், இப்பொழுது-,
இங்கு - இவ்விடத்தில், என்னோடு அமர் மலைவார் - என்னுடன் போர்
செய்பவர், ஆர் - எவர்? அறுகால் மொய்க்கும் - வண்டுகள் மொய்க்கின்ற,
கொய்வரு தார்-மலர்களைப் பறித்துவந்து தொடுத்ததனாலாகிய (போர்)
மாலையைத் தரித்த, புயம் - தோள்களையுடைய, வீரர் - வீரர்களே! கூறும் -
சொல்வீராக', என - என்று (துரியோதனன்) வினாவ,-திரு நெடு மால் -
சிறந்தபெரிய கண்ணபிரான், கூறல் உற்றான் - (அதற்குவிடை)
கூறத்தொடங்கினான்;(எங்ஙனமெனில்) - செய் வரு - கழனிகளிற்
பொருந்திய, சேல் - சேல்மீன்கள்,இளம் பூகம் மடல் ஒடிக்கும் - இளம்
பாக்குமரங்களின் பாளைகளை (த்தாம்துள்ளி யெழுந்து பாய்தலால்) ஒடிக்கிற,
திரு நாடா - அழகிய குருநாட்டையுடையவனே! செரு செய்வான் -
(உன்னோடு) போர்செய்வதற்கு உரியவன்,மெய்வரு சொல் தவறாத -
உண்மைமொழியில் தவறுதலில்லாத, இவீமசேனனை ஒழிந்தால் - இந்த
வீமசேனனையன்றி, வேறும் உண்டோ -மற்றுமொருவன் உளனோ?
[இல்லையென்றபடி]: (எ - று.)

     ஒருதொடராகிய நான்கு கவிகளில், கீழ்க்கவியும், இக்கவியின்
முன்னிரண்டடியும் - துரியோதனன் வினா வென்றும், இக்கவியின்
பின்னிரண்டடியும் அடுத்த இரண்டுகவிகளும் - கண்ணபிரான்
விடையென்றுங்காண்க.

     'நானேஉன்னைக் கொல்வேன்' என்று சபதஞ்செய்துள்ள வீமன்
தானேஅச்சபதத்தை நிறைவேற்றும்பொருட்டு இப்பொழுது உன்னோடு போர்
செய்வானென்றான்.  கழனியை 'செய்' என்பது - அருவாநாட்டில் வழங்குந்
திசைச்சொல்.  நீர்வளமிகுதியால் கழனிகளிலுள்ள மீன்கள் அந்நீர்ச்
செழுமையாலாகிய கொழுமையால் துள்ளி நெடுந்தூரந்தாவிப் பாக்குமரத்தின்
மடலை ஒடிக்கின்றனவென நாட்டுவளத்தை வருணித்தார்.            (141)

142.இளம்பருவமுதலுனக்குமிவனுக்கும்வயிர்ப்பெண்ணி
                          லெண்ணொணாதால்,
உளம்புகலவரசவையில்வஞ்சினமும்பற்பலவன்றுரைத்தே
                                   நின்றான்,
களம்புகுதுநின்னொழிந்ததுணைவரையுந்தனதுதடக்கையாற்
                                 கொன்றான்,
விளம்புவதோவேறொருவர்நின்னுடன்போர்மலைவரோவேந்தர்
                                   வேந்தே.

     (இ -ள்.) வேந்தர் வேந்தே - அரசர்க்கு அரசனே! இள பருவம்
முதல்- இளமைப்பிராயம் முதலாக, உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு -
உனக்கும்இவனுக்கும்உள்ள வயிரச்செயல், எண்ணில் - ஆலோசிக்குமிடத்து,
எண்ஒணாது - கணக்கிட முடியாததாம்;(அன்றியும்) அன்று - திரௌபதியை
மானபங்கஞ் செய்யக்கருதிய அக்காலத்து, உளம்புகல-மனம் ஊக்கந்தூண்ட,
அரசு அவையில் - இராச சபையில், பற்பலவஞ்சினமும் - பலவான
சபதங்களையும், உரைத்தே நின்றான் - கூறி நின்றான்; (மேலும்), களம்
புகுதும்- போர்க்களத்துக்கு வந்த, நின் ஒழிந்த துணைவரைஉம் -
நின்னையொருவனை யொழிய மற்றுமுள்ள (உனது) தம்பிமா ரெல்லோரையும்,
தனது தட கையால் -