மேலுலகிலுள்ளதேவர்களும்வந்துநீராடப்பெற்ற புண்ணிய தீர்த்தங்களில், ஒன்றுபட - ஒருசேர, மகிழ்ந்து ஆடி - மனமகிழ்ச்சியோடு நீராடி, மீண்ட ஆறு - திரும்பிவந்த வரலாற்றை, இருவோரும் - அவ்விரண்டு பேரும், உரைசெய்தார் - (மற்றையோருக்கு) எடுத்துக்கூறினார்கள்; இங்கேதொகுத்துக் கூறப்பட்ட தீர்த்தயாத்திரைவரலாறு, வியாசபாரதத்தில் இருபது அத்தியாயங்களில் வெகு அழகாகவும் விரிவாகவுங்கூறப்பட்டுள்ளது. சுரரும், உம் - உயர்வுசிறப்பு. (149) 150.-பதினெட்டுநாளைப்போர் வரலாற்றைக் கண்ணன் அவ்விருவர்க்குங் கூறல். அறந்தருகாளையுமுகுரானனன்காளையும்புரிந்த மறந்தருபோர்வெங்களத்துமன்னவர்களனைவோரும் இறந்தநிலையுந்தினங்களீரொன்பானிலுந்தோன்ற மறந்திகழ்தோளிருவருக்குமாமாயன்கட்டுரைத்தான். |
(இ -ள்.) அறம் தரு காளையும் - தருமதேவனான யமன் பெற்ற பிள்ளையாகிய யுதிஷ்டிரனும், முகுர ஆனனன் காளையும் - கண்ணாடி போலும் முகமுடைய திருதராட்டிரனது பிள்ளையாகிய துரியோதனனும், புரிந்த-செய்த, மறம் தரு போர் வெம் களத்து - கொலைநிகழ்தற்குஉரிய கொடியபோர்க்களத்தில், தினங்கள் ஈர்ஒன்பானிலும் - பதினெட்டுநாள்களிலும்,மன்னவர்கள் அனைவோரும் - அரசர்கள் பலரும், இறந்த நிலையும் - மரித்ததன்மையையும், மாமாயன் - சிறந்த மாயையுடைய கண்ணபிரான்,மறம்திகழ்தோள் இருவருக்கும் - வலிமைவிளங்குந் தோள்களையுடைய(பலராமன் விதுரன் என்ற) அவ்விரண்டுபேருக்கும், தோன்றகட்டுரைத்தான் -தெளிவாகக்கூறினான். 'முகுரவானனன்' என்றது - கண்ணாடி தான் பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான்காணும் உணர்ச்சி யில்லாததுபோல தான் பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணாதமுகத்தையுடையவனென்றவாறு; பிறவிக்குருடனென்பது கருத்து. இனி, கண்ணாடி போல விளக்கமுடைய முகமுடையவ னென்பாரு முளர். அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல வீரத்தால் முதுகுகாட்டாத முகமுடையவ னென்றலும் ஒன்று; திருதராட்டிரன் அங்ஙனந் தேர்ந்தவீரனாதலைச் சம்பவச்சருக்கத்தால் அறியலாம். இனி, பிறவிக் குருடனைக் கண்ணாடிபோலு முகமுடையானென இகழ்ச்சிபற்றிய பெயருமாம். (150) 151.-பலராமன் இரக்கத்தோடு'இப்பொழுது என்ன உத்தேசம்?' என்றல். கேட்டருளிநெடுந்தாலகேதனன்மாமனந்தளர்வுற்று ஆட்டரவமுடையவற்கோவழிவுவருவதுபோரில் நாட்டமினியேதென்றுநராந்தகனைவினவுதலும் மீட்டுமவற்குரைசெய்தான்விரிதிரைநீர்மறந்தானே. |
|