திசை ஏற -குருகுலத்தில் தோன்றிய அரசர்கள் (ஒருவர்க்கொருவர்) இனியதுணைவராயினா ரென்னும் புகழ் சென்று எல்லாத்திக்குகளிலும் மிக்குப்பரவ, ஞாலம் எலாம் - பூலோகம் முழுதையும், நின்குடைக்கீழ் - உனதுஒற்றைவெண்கொற்றக்குடையின்கீழ், ஆளுதியோ - ஆளுவையா? (எ - று.)
போரையொழித்துப் பகைமையின்றிச் சமாதானத்தில் மீண்டும் அரசுபெற்றுவாழ உனக்குப் பிரியமா? என்று வணங்காமுடிமன்னனைக் கருணைவள்ளல் வினாவினான். (158) 159.-தருமன் கூறினபேச்சுக்குத் துரியோதனன் உடன்படாமை. தப்பாதென்மொழியென்றுதருமன்மாமதலைமுகில் ஒப்பானதிருமேனியும்பர்பிரான்சான்றாகச் செப்பாதவாய்மையெலாஞ்செப்பினான்செப்பவுமக் கைப்பானவன்னெஞ்சக்கடுங்கண்ணான்கண்மறுத்தான். |
(இ -ள்.) என் மொழி தப்பாது - யான்சொன்ன இவ்வார்த்தை தவறாது,என்று-, தருமன் மா மதலை - சிறந்த தருமபுத்திரன், முகில் ஒப்பு ஆனதிருமேனி உம்பர் பிரான் சான்று ஆக - மேகத்துக்குச் சமானமான கரியதிருமேனியையுடைய தேவாதிதேவனான கண்ணபிரான் சாட்சியாக, செப்பாதவாய்மை எலாம் செப்பினான் - (இதுவரையில் எவரும் என்றும்) சொல்லியிராதஉறுதிவார்த்தைகளையெல்லாம் கூறினான்: செப்பவும் - அவ்வாறு சொல்லவும்,அ கைப்பு ஆன வல் நெஞ்சம் கடு கண்ணான் - வெறுப்புக்கு உரிய வலியமனத்தையும் கொடிய தன்மையையுமுடைய அந்தத் துரியோதனன்,கண்மறுத்தான் - (உடன்படாமல்) தாட்சிணியமின்றித் தடுத்திட்டான்; (எ - று.) என்மொழிதப்பாது, அங்ஙனமே நிறைவேற்றுவேன் என்று கிருஷ்ணசாட்சியாகத் தருமன் பலவாறு பிரமாணங்கூறினானென்பது, முதல்வாக்கியத்தின் கருத்து. கண்மறுத்தான் - கண்ணோட்டமில்லாதவனானான்; அன்றி, கண் என்பதை உபசர்க்கமாகக் கொள்ளினும் அமையும். (159) 160.-துரியோதனன் கூறும்விடை. எங்கிளைஞரென்றுணைவரென்பொருட்டாலிறந்தேக உங்களருள்பெற்றிருக்குமுயிர்வாழ்வினினிதன்றோ அங்கமெலாம்வேறுபடவாறுபடுகுருதியின்வாய்க் கங்கமுங்காகமுங்கொத்தக்களத்தவிந்தானெனும்பெயரே. |
(இ -ள்.) எம் கிளைஞர் - எமதுசுற்றத்தார்களும், என் துணைவர் - எனது தம்பிமார்களும், என்பொருட்டால் - எனக்காக, இறந்துஏக - மாண்டுஒழிய, உங்கள் அருள்பெற்று இருக்கும் - உங்கள் கருணையைப் பெற்றுஅதனால்நான் வாழும்,உயிர் வாழ்வின்- உயிர் வாழ்க்கையைக் காட்டிலும்,- அங்கம் எலாம்வேறு பட - உடம்பினுறுப்புக்களெல்லாம் |