தனித்தனிதுணிபடவும், ஆறுபடு குருதியின் வாய் - ஆறாக இரத்தம் பெருகும்புண்வாயில், கங்கமும் காகமும் கொத்த - கழுகுகளும் காக்கைகளும்மூக்கினாற் கொத்திக்கிளறவும், களத்து அவிந்தான் - போர்க்களத்தில்இறந்திட்டான், எனும் பெயர் - என்கிற பிரசித்தியையடைதல், இனிது அன்றோ- இனிமையானதன்றோ? (எ - று.) (160) 161.-பின்பு பலரும் விரைந்துசெல்லுதல். எனத்தருமன்வார்த்தைதனக்கிசையாமலிவனேக அனைத்துவரூதினிகளொடுமைவருமாங்குடனேகக் கனத்தில்வடிவுடையோனுங்கைலைவடிவுடையோனும் வினைத்தடந்தேர்விதுரனொடும் விரைவுடனேகினரம்மா. |
(இ -ள்.) என - என்று சொல்லி, தருமன் வார்த்தை தனக்கு இசையாமல் - யுதிஷ்டிரனது வார்த்தைக்கு இணங்காமல், இவன் ஏக - துரியோதனன் செல்ல,-அனைத்து வரூதினிகளொடும் - எல்லாச்சேனைகளுடனும், ஐவரும்-பஞ்சபாண்டவர்களும், ஆங்கு உடன் ஏக -அவ்விடத்திற் கூடச்செல்ல, கனத்தில் வடிவு உடையோனும் - மேகம்போலத்திருமேனியையுடைய கண்ணனும், கைலைவடிவுடையோன் உம்-வெள்ளிமலையான கைலாசம் போன்ற வெண்ணிறமுடைய பலராமனும், வினைதட தேர் விதுரனொடும் - தொழில்முற்றிய பெரிய தேரையுடைய விதுரனுடன்,விரைவுடன் ஏகினர் - துரிதமாகச்சென்றார்கள்; (எ - று.)- அம்மா-ஈற்றசை.
'காதலுறு முன்னோனும்' என்றும் பாடம். சிறந்த தேர்வீரன் [அதிரதாதிபன்] என்பதுதோன்ற, 'வினைத்தடந்தேர் விதுரன்' என்றார். (161) 162.-யமுனை கடந்து சமந்தபஞ்சகஞ்சேர்ந்து போர்தொடங்கல். கலங்கள் பலவினமேறிக்காளிந்திக் கரையேறித் தலங்களினற்றலமானசமந்தபஞ்சகமெய்தி வலங்கொள்படைத்தலைவரெலாம்வளைத்தகடலெனவாள விலங்கலெனச்சூழ்நிற்பவெஞ்சமரந்தொடங்கினரே. |
(இ -ள்.) பல இனம் கலங்கள் ஏறி - பலவகைப்பட்ட மரக்கலங்களிலேறி, காளிந்திகரைஏறி-யமுனாநதியைக் கடந்து அதன் அக்கரையில் ஏறி, தலங்களில் நல் தலம் ஆன சமந்தபஞ்சகம் எய்தி - புண்ணிய ஸ்தலங்களுள் சிறந்த தலமான சியமந்தபஞ்சகத்தை யடைந்து,- வலம்கொள் படை தலைவர் எலாம்-வலிமைகொண்ட சேனைத்தலைவர்களெல்லோரும், வளைத்த கடல் என - (பூமியைச்) சூழ்ந்துள்ள கடல் போலவும், வாளம்விலங்கல்என - (அக்கடலைச் சூழ்ந்துள்ள) சக்கர வாளகிரிபோலவும், சூழ் நிற்ப - சூழ்ந்து நிற்க, வெம் சமரம் தொடங்கினர் - (துரியோதனனும் வீமனும்) கொடியபோரைச் செய்யத் தொடங்கினார்கள்; (எ - று.) சூழ்நிற்ப என்பதில், சூழ் என்ற பகுதியே சூழ்ந்து என வினையெச்சப்பொருள்பட்டது: இனி, நில் என்பதைத் துணைவினையெனக் |