168.-இனி ஐந்துகவிகள் -இருவருஞ் செய்யும் கதைப்போர்த்திறம். ஒருதமனீயாசலத்தினோடெதிரொருமுழுமாநீலவெற்புநீடமர் புரிவதுபோன்மேல்விசைத்துமீமிசைபொறியெழமாறாமலொத்த வீரர்கள் இருவருமாகாயமுட்டநாகர்களிறைகொளநானாலுதிக்குநாகரும் வெருவரநீணாகருட்கவீசினர்விசையுடனேபோர்விறற்கதாயுதம். |
(இ -ள்.) ஒரு தமனீய அசலத்தினோடு - ஒரு பொன்மலையுடனே, எதிர்- எதிரில், ஒரு முழுமா நீலம் வெற்பு - பெரியசிறந்த நீலரத்தினமயமானமற்றொருமலை, நீடு அமர் புரிவது போல் - மிக்கபோரைச் செய்வது போல,-மாறாமல் ஒத்த வீரர்கள் இருவரும் - மாறுபடாமல் (ஒருவரையொருவர்வலிமையால்) ஒத்த வீரர்களாகிய (வீமன் துரியோதனன் என்ற) இரண்டுபேரும், போர் விறல் கதா ஆயுதம் - போருக்குரிய வலிமையையுடைய தங்கள்கதாயுதங்களை, மீமிசை பொறிஎழ மேல்விசைத்து - ஆகாயத்தின்மேல்நெருப்புப் பொறி பறக்கும்படி மேலெடுத்து விசையாகச்சுற்றி,-ஆகாயம் முட்ட -மேலுலகத்தைத் தாக்கும்படியாகவும், நாகர்கள் இறை கொள - (அங்குள்ள)தேவர்கள் சிதறும்படியாகவும், நால் நாலுதிக்கு நாகரும் வெருவர - எட்டுத் திசையிலுள்ள (திக்குப்பாலகர்களாகிய) தேவர்களும் அஞ்சும்படியாகவும், நீள் நாகர் உட்க - நீண்ட பாதாளலோகத்தார் அஞ்சும்படியாகவும், விசையுடனே வீசினர் - வேகத்தோடு சுழற்றினார்கள்; (எ - று.) 'ஒருமணிநீளாசலத்தினோடு' என்றுபாடமோதி, நீண்ட ஒரு மாணிக்கமலையினோடு என்று உரைப்பாருமுளர்; அப்பொழுது, அசலமென்பதுஆசலமென நீட்டல் விகாரம்பெற்றதென்க. 'ஒருமணிநீலாசலத்தினோடு'என்றும் பாடம் வழங்குகின்றது. முழுநீலம் - உத்தம இலக்கணம் முழுவதும்அமைந்த நீலரத்தினம். நீலமென்பது நீலநிறமுள்ள இரத்தினத்தைக்குறிக்கும்போது, பண்பாகுபெயரென்பது, தமிழர்கொள்கை. வடநூலின்படி அதுஆகுபெயரன்றி, உரியபெயரேயாம். இருவரும் பதினாயிரம்யானைபலங்கொண்ட குருகுலத்து அரசர்களாதலால், 'மாறாமலொத்தவீரர்கள்'என்றார். நானாலு - உம்மைத்தொகை; நாலும் நாலும். அஷ்டதிக்பாலகர் -கிழக்குமுதலாக முறையே, இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் எனக் காண்க. (168) 169. | உகவையினாலேசிரிப்பர்நீள்சினமுறுதலினாலேமடிப்பர் வாய்மலர், புகையெழவேதீவிழிப்பர்மார்பொடுபுனைகிரிபோலேதடிப்பர் தோளிணை, இகல்புரிநூலோடுகற்றசாரிகையிடம்வலமேபோவர் வட்டமாகுவர், முகடுறமீதேகுதிப்பர்பார்மகண்முதுகுறநேரேகுதிப்பர் மீளவே. |
(இ - ள்.) (இரண்டுபேரும்), உகவையினாலே - (போர்செய்தலிலுள்ள) உற்சாகத்தினாலே, சிரிப்பர் - சிரிப்பார்கள்; நீள் சினம் உறுதலினாலே - மிக்ககோபம்பொருந்துதலினாலே, வாய் மலர் மடிப்பர் - தாமரைமலர்போன்ற தங்கள் வாயிதழ்களை மடிப்பார்கள்; புகை ஏழ |