171. | மலரடிதாளூருவட்டமார்தனம்வயிறுமனோகரபற்பமார் பொடு, குலகிரிநேர்தோள்கழுத்துநீடணல் குறுநகைகூர் வாய்கதுப்புவார்குழை, இலகுபுரூர்பாகநெற்றியானன மெனவடைவேகூறுறுப் பியாவையும், உலைவுறமேன்மேன்மிகுத்தமூளையுமுதிரமுமாறாது குக்கமோதியே. |
(இ -ள்.) மலர் அடி - தாமரைமலர்போன்ற பாதங்களும், தாள் - கால்களும், ஊரு - துடைகளும், வட்டம்ஆர்தனம் - வட்டவடிவாயமைந்த தனப்பிரதேசமும், வயிறு-வயிறும், மனோகர பற்பம் - அழகியதாகவுள்ள நாபீகலமமும், மார்பொடு - மார்பும், குல கிரி நேர் தோள் - குலபருவதங்களையொத்த புயங்களும், கழுத்து - கழுத்தும், நீடு அணல் - நீண்டகீழ்வாயும், குறுநகை கூர் வாய் - புன்சிரிப்பு மிக்க வாயும், கதுப்பு - கன்னமும், வார்குழை -தொங்குகிற குண்டலத்தையடைய காதுகளும், இலகுபுரூர் பாகம் விளங்குகிறபுருவமும், நெற்றி - நெற்றியும், ஆனனம் - முகமும், என - என்று, அடைவேகூறு - முறையே சொல்லப்பட்ட, உறுப்பு யாவையும் - உறுப்புக்களெல்லாம்,உலைவு உற - சிதைவடையவும், மேல் மேல் மிகுத்தமூளையும் - மேலும்மேலும் அதிகப்பட்டமூளைநிணமும், உதிரமும் - இரத்தமும், மாறாது உகுக்க -இடையறாது சிந்தவும், மோதி - (கதாயுதத்தால்) தாக்கி; 'இருவரும் போர்செய்தார்கள்' எனச் சொல் வருவித்த முடிக்க. மனோகரம் - (அழகினால்) காண்பவரின் மனத்தைக் கவர்வது, பற்பம் - தாமரைமலர். குலகிரி - சிறந்தமலைகள்; அவை - இமயம், மந்தரம், நிஷதம்,விந்தியம், ஹேமகூடம், கைலை, நீலம், கந்தமாதநம் என்பன. வார்குழை -அடையடுத்த தானியாகுபெயராகவாவது, வினைத்தொகையன்மொழியாகவாவதுகாதைக்குறிக்கும். மூன்றாமடியில் 'இலகுபுரூர நனெற்றி' என்று சில பிரதியிற்காணப்படுகிறது. (171) 172. | கதைகதையோடேயடிக்குமோதைகொல் கதையுடையோர் நகைக்கு மோதைகொல், எதிர்மொழியோவாதிசைக்கு மோதைகொலிணை யுடலூடேயிடிக்கு மோதைகொல், பதயுகமாறாடிவைக்குமோதைகொல்பணைபலசூழ் போதவெற்றுமோதைகொல், திதியொடுவானூடுசெற்றும்வானவர்செவிசெவிடாமாறதிர்க்கு மோதையே. |
(இ -ள்.) திதியொடு - நிலையாக, வானூடு - மேலுலகில், செற்றும் - நிறைந்துள்ள, வானவர்-தேவர்களுடைய, செவி - காதுகள், செவிடு ஆம் ஆறு- செவிடுபடும்படி, அதிர்க்கும் - ஆரவாரிக்கிற, ஓதை - ஓசை,-கதை கதையோடே அடிக்கும் ஓதைகொல் - ஒருகதை மற்றொரு கதையோடு தாக்குதலா லாகும் ஓசையோ, கதை உடையோர் தாம் நகைக்கும் ஓதைகொல் -கதையையுடையவராகிய இருவீரரும் சிரித்தலாலாகும் ஓசையோ? ஓவாதுஎதிர்மொழி இசைக்கும் ஓதைகொல் - இடைவிடாமல் (ஒருவர்க்கொருவர்)எதிரிலே வீரவாதமான வார்த்தைகளைக் கூறுதலாலாகும் ஓசையோ? இணைஉடலூடே இடிக்கும் ஓதைகொல் - இரண்டு உடம்புகளிலும் தாக்குதலினாலாகியஓசையோ? பத யுகம் மாறாடி வைக்கும் ஓதைகொல் - இரண்டு கால் |