பக்கம் எண் :

128பாரதம்சல்லிய பருவம்

களையும்ஒன்றுமாறியொன்று அடைவுபட வைத்தலாலாகும் ஓசையோ?
பலபணைசூழ்போத எற்றும் ஓதைகொல் - பலவகை யுத்த வாத்தியங்கள்
சுற்றிலும்அடிக்கப்படுதலாலாகிய ஓசையோ? (எ - று.)

    இங்ஙனம் ஐயவணிபட விகற்பித்துக் கூறினராயினும், 'கதை
கதையோடேயடிக்கு மோதை' முதலிய ஓசைகளெல்லாம் அங்குத் தேவர்
செவிகளும்செவிடாம்படி மிக்கு முழங்கினவென்றே கருத்துக் கொள்க. 
இங்குக்கூறியநகை, வீரத்து எழுந்த வெகுளி நகை.  'சூழ் போதமொத்தும்'
என்றும் பாடம்.                                         (172)

173.-துரியோதனன் வீமனை'உனது உயிர்நிலை கூறு'
என்றல்.

அரிவயமாவேறுயர்த்தசூரனுமழல்விடநாகேறுயர்த்தவீரனும்
இருவருமேவாலிசுக்கிரீவர்களெனவமர்மோதாவிளைத்தகாலையில்
வரைமுடிமேனாளொடித்தகாளைதன்மதலையையேழ்பாரடர்த்த
                                         கோமகன்
உரைதடுமாறாவுயிர்த்துநீயுனதுயிர்நிலைகூறாயெனக்கெனாமுனம்.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ -ள்.) வய - வலிமையையுடைய, அரிமா ஏறு - ஆண்
சிங்கவடிவமெழுதிய கொடியை, உயர்த்த - உயரநாட்டியுள்ள, சூரனும் -
வீரனான வீமனும், அழல் - நெருப்புப்போலக் கொடிய, விடம் -
விஷத்தையுடைய, நாக ஏறு - சிறந்த பாம்பின் வடிவமெழுதிய கொடியை,
உயர்த்த - உயரநாட்டியுள்ள, வீரனும் - வீரனான துரியோதனனும்,
இருவரும்- ஆகிய இரண்டு பேரும், வாலி சுக்கிரீவர்கள் என - வாலியும்
சுக்கிரீவனும்போல, அமர்மோதா - தாக்கிப் போர் செய்து, இளைத்த
காலையில் - இளைப்படைந்த சமயத்தில், ஏழ் பார் அடர்த்த கோமகன் -
ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுதையும் வென்ற அரசனான துரியோதனன்,
உரைதடுமாறா - சொற்குழறி, உயிர்த்து - பெருமூச்சுவிட்டு, வரை முடி
மேல்நாள்ஒடித்தகாளைதன் மதலையை - மேருமலைச் சிகரத்தை
முன்பொருகாலத்தில்முறித்தெறிந்தவீரனான வாயுவினது குமாரனாகிய
வீமனை நோக்கி, உனதுஉயிர்நிலை நீ எனக்கு கூறாய் எனாமுனம்-
'உன்னுடைய உயிர் பிரதானமாகநிற்குமிடமான மர்மஸ்தாநத்தை நீஎனக்குச்
சொல்வாய்' என்று வினாவுமுன்னே,(எ - று.)- 'வீமன் சிரத்திலேயென
வுரைத்தபோது' என்று வருங்கவியோடுதொடரும்.

    துரியோதனன் வினாவியவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல்
வீமன்விடை கூறினானென்பதை நன்குவிளக்குதற்கு 'என்று வினவாத
முன்னே'என்றார்.  இப்படிகாரியவிரைவைக் காட்டும்
பொருட்டுக்காரணத்தைப்பின்னும்காரியத்தை முன்னும் நிகழ்ந்தனவாக,
காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய முறையில் முறைபிறழ்வை
யேற்றிக்கூறுதல்,மிகையுயர்வுநவிற்சியணியாம்.  உயிர்நிலை - எந்த இடத்தில்
தாக்குண்டால்உயிர் நிலைகுலையுமோ அப்படிப்பட்ட முக்கியத்தான
மென்றபடி,உரைதடுமாறியதும், உயிர்த்ததும், போரிளைப்பால், நாகேறு-
நாகவேறு என்பதன்தொகுத்தல் வாலிசுக்கிரீவர்-