பக்கம் எண் :

130பாரதம்சல்லிய பருவம்

175.-வீமன் துரியோதனனைஉயிர்நிலைவினாவ அவன்
மாற்றிக்கூறல்.

மகிதலமேல்வீழ்தலுற்றுமீளவும்வலியுடனேபோர்குறித்துமேல்வரு
பகைவனைநீயாவிநிற்பதோர்நிலைபகரெனமாறாடுசர்ப்பகேதுவும்
இகனுதலூடேயெனக்குமாருயிரெனமதியாதேயுருத்துவீமனும்
உகுதருசெந்நீர்பரக்கமோதினனுயர்கதையாலேசிரத்தின்மேலுமே.

     (இ -ள்.) மகிதலம்மேல் வீழ்தல் உற்றும் - தரையிற்சுழன்று
விழுந்தும்,மீளவும்-பின்பு, வலியுடனே போர் குறித்து - (சிறிது
இளைப்புத்தீர்ந்து)வலிமையுடனே போர்செய்யக்கருதி, வீமனும் -, மேல் வரு
பகைவனை -தன்மேல் எதிர்த்து வருகிற பகைவனான துரியோதனனை
நோக்கி, நீ ஆவிநிற்பது ஓர் நிலை பகர் என -'உனது உயிர்
நிலைத்தானத்தை நீ சொல்வாய்'என்று சொல்ல,-மாறாடுசர்ப்பகேதுவும் -
உண்மைதவறுந்தன்மையுள்ளபாம்புக்கொடியனான துரியோதனனும், எனக்கும்
ஆர்உயிர் இகல்நுதலூடேஎன - 'எனக்கும் அரியஉயிர்நிலைவலிய
நெற்றியினிடத்தே'என்றுசொல்ல, மதியாதே - (அதைப் பொய்யென்று)
கருதாமலே [நம்பிஎன்றபடி] (வீமனும்), உருத்து - உக்கிரங்கொண்டு,
உகுதருசெந்நீர்பரக்க -சிந்துகிற இரத்தம் எங்கும்பரவும்படி, உயர்
கதையாலே - சிறந்த தனதுகதாயுதத்தால், சிரத்தின்மேலும் மோதினன் -
(அவனது) தலைமேல்தாக்கினான்; (எ - று.)

    துரியோதனன் பொய்ம்மைபேசுபவ னென்பது பிரசித்தம்;
"பொய்வளர்ந்த மொழிமன்னன்" என்றார், கீழ் உத்தியோகபருவத்திலும்.
தனது உயிர்நிலை தொடையிலாகவும் அதனைமறைத்துத் துரியோதனன்
மாறுபாடாக நெற்றியிலென்றுபொய்கூறியதனால், 'மாறாடுசர்ப்பகேது' என்றார்.
இவனது உயிர்நிலைதொடையிலென்பதை 182-ஆங் கவியாலும் உணர்க.
'மாறாடு சர்ப்பகேது' என்ற தொடரில், தனக்குக் கொடியில்
அடையாளமாகவிருக்கும் பாம்புபோலவே துரியோதனன் நாவிரண்டுடையா
னென்ற கருத்துத்தொனிக்குமாறு உணர்க.  வீமன் கபடமற்றவ னாதலால்,
தன்னைப் போலப் பகைவனையும் உண்மைகூறியவனாகக் கருதின
னென்பதை'மதியாதே' என்பதனாலும் விளக்கினார்; அவன்சொன்னது
உண்மையோஅன்றோ என்று ஆராய்ச்சி செய்யாமலே யென்றவாறு. 
'குறித்து' என்றவினையெச்சம் 'என' என்பதைக் கொள்ளும்.       (175)

176.-துரியோதனன் போரில்நிலைகுலைய, வீமன்
'இளைப்பாறு' என்றல்.

உரியகதாபாணியர்க்குளோதவொருவமையிலாதானடித்த
                                        போதுயர்
சிரமுடியூடேபிளக்கநாலிருதிசையினும்வார்சோரிகக்கிவீழ்தர
இருநிலமீதேபதைத்துவீழ்தலுமிரிதரமோதாமல்விட்டுநீயினி
[மனே. விரைவுடனாறாறெனத்தனாண்மையைவிருதர்முன்மேன்மேல் விளக்கவீ