பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்139

வுடைமைகூறினார், அது பாரந்தீர்ந்து இன்பமுறுஞ் சமயமாதலின்,
இங்ஙனம்கண்ணபிரான் கூறியருளிய குறிப்பைக்கொண் டன்றி வீமனால்
நேரிற்கொல்லலாகாத துரியோதனனது ஆற்றலை விளக்க 'வீரன்' என்றார்.
                                                       (185)

வேறு.

186.-வீமன் துரியோதனனை நெருக்கி மார்பில் குத்தல்.

அரிப்பதாகனுரகப்பதாகனையதிர்த்துமேலுறவடர்த்துநீடு
உருப்பினோடதிசயிக்கவூருவையொடிக்கவேயவனுடற்றலும்
நெருப்புறாவிழிசிவத்துவார்கடைநிமிர்ப்புறாதபுருவத்தனாய்
மருப்புநாலுறுமதத்தமாவெனமதத்துமார்பின்மிசைகுத்தினான்.

     (இ -ள்.) அரி பதாகன் - சிங்கக்கொடியுடையவனான வீமன், உரகம்
பதாகனை - பாம்புக்கொடியுடையவனான துரியோதனனை, அதிர்த்து -
அதட்டி, மேல் உற அடர்த்து - மேற்கொண்டு நெருக்கி, நீடு
உருப்பினோடு -மிக்க கோபத்துடனே, அதிசயிக்க - (கண்டவர்)
வியக்கும்படி, ஊருவைஒடிக்கவே - தொடையை முறிக்கவே,- அவன் -
அத்துரியோதனன்,உடற்றலும் - பெருங்கோபங்கொண்டு மீட்டும்
போர்தொடங்கியவளவில்,-(வீமன்), விழி சிவத்து நெருப்புஉறா -
கண்கள்சிவந்து நெருப்பின்தன்மையடையப்பெற்று, வார் கடை நிமிர்ப்பு
உறாத புருவத்தன் ஆய் - நீண்டகோடிகள் வளைவுமாறாத
புருவங்களையுடையவனாய், மருப்பு நால் உறு மதத்தமா என - நான்கு
தந்தங்கள் பொருந்திய மதம்பிடித்த ஐராவதயானை போல,மதத்து -
கோபாவேசங்கொண்டு, மார்பின்மிசை குத்தினான் - (துரியோதனனது)
மார்பின்மேற் குத்தினான்; (எ - று.)

    அதிசயிக்க - அதிசயமென்னும் சொல்லினடியாப் பிறந்த
செயவெனெச்சம்.  சிவத்து - சிவந்து என்பதன் வலித்தல்.  கடை
நிமிர்ப்புறாதபுருவத்தனாய் - புருவத்தை நெறிவுபட வளைத்தவனாய்.  
'மருப்புநாலுறுமதத்தமா வென மதத்து' என்றது, வீமனுக்குச் சேரும்; அன்றி,
ஐராவதயானை போலும் வலிமையுடைய மார்பின் மேல் என்று மார்புக்கு
அடைமொழியாக்கலும்ஒன்று; "மதவேமடனும் வலியு மாகும்" என்ற
தொல்காப்பியத்தால், மதவென்பது - வலிமை யுணர்த்துவதோர்
உரிச்சொல்லாதலறிக;  அதன்மேல் அத்துச்சாரியைவருகையில்,
நிலைமொழியீற்றுஅகரத்தின்முன் சாரியைமுதல் அகரம் கெட்டது;
[நன் - உருபு - 13.]

    இதுமுதல் ஐந்துகவிகள் - பெரும்பாலும் முதற்சீர் புளிமாச்சீரும்,
மூன்றுஐந்தாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாஞ்சீர் கூவிளச்சீருமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியச்சந்த விருத்தங்கள்.

     தனத்ததானனன தத்த தானனன தத்த தானனன தத்தனா - என்பது,
இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.                                  (186)