யன் முன்அளித்தகாளை - அக்கினிக்குத் துணைவனான வாயுதேவன் முன்புபெற்ற புத்திரனான வீமன், இனி உனக்கு வாழ்வு என கொல் ஆம் என- இன்னமும் உனக்கு வாழ்க்கை என்னோ? என்று (துரியோதனனை நோக்கிச்)சொல்லி, தன் அடல் சரோருக பதத்தினால் - வலிமையையுடையதும்(செம்மையிலும் மென்மையிலும்) தாமரை மலர் போல்வதுமான தனதுகால்களால், உதைத்து-, மௌலியை உடைக்க, - தலையை உடைக்க,(அப்பொழுது), சினத்து அலாயுதன் - கோபகுணமுடைய பலராமன், நிறத்தவாள் விழி சிவக்க - நிறத்தையுடைய ஒளியுள்ள கண்கள் (கோபத்தால்)சிவக்க, சில வாய்மை செப்புவான் - சிலவார்த்தைகளைக் கூறுபவனானான்; மிழற்றுதல் - நிரம்பாதசொற்கூறுதல். காற்றையும்நெருப்பையும் ஒருவர்க்கொருவர் நண்பராகக்கூறுதல், மரபு. சரோருகமென்றது - குளத்தில் முளைப்பதென்று காரணப்பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர். ஹல + ஆயுதன் = ஹலாயுதன்; கலப்பையைப்படைக்கலமாகவுடையவன். எவன் என்ற அஃறிணைப்பொது வினாவினைக்குறிப்புமுற்று, வகரம்கெட்டு அகரச்சாரியைபெற்று 'என்ன' என நிற்கவேண்டுவது தொகுத்தலாய், எனவெனநின்றது. அதன் மேல் 'கொல்' என்ற அசைநிலையிடைச் சொல்லின் முதல்வலி 'எனக்கொல்' என இரட்டிவந்தது, சந்தவின்பம் நோக்கிய விரித்தல்விகாரத்தினாலாம். (190) வேறு. 191.-பலராமன் கோபித்துக்கண்ணனோடு சிலகூறுதல். எம்பிரானைமுராரியைமாயனையிம்பரேழ்கடல்சூழ்புவிமேலொரு தம்பியாவுடையானவனோடெதிர்சந்தியாவெகுளாவிழிதீயெழ நம்பிகேளரியோடுடன்மேவியநஞ்சுபோலுநரேசர் முன்னேயுடல் கம்பியாவிழவூருவின்மோதுதல்கண்டபோதெனதாருயிர்போனதே. |
இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். (இ -ள்.) எம் பிரானை - எமக்கெல்லாந் தலைவனும், முர அரியை -முரனென்னும் அசுரனுக்குப் பகைவனானவனும், மாயனை - மாயையையுடையவனுமான கண்ணபிரானை, ஏழ் கடல் சூழ் புவிமேல் - ஏழுவகைக் கடல்களாற் சூழப்பட்ட பூலோகத்தில், இம்பர் - இத் திருவவதாரத்தில், ஒருதம்பி ஆ உடையான் - ஒப்பற்ற தம்பியாகப் பெற்றுள்ளவனான பலராமன், அவனோடு - அக்கண்ணபிரானுடனே, எதிர் சந்தியா - எதிரிலே சமீபித்து, விழி தீ எழ வெகுளா - கண்களில் நெருப்புப்பொறி கிளம்பக் கோபித்து,- நம்பி கேள் - தம்பீ! (நான் சொல்வதைக்) கேட்பாயாக; அரியோடு உடன்மேவிய - பாம்புடன் கூடவே பொருந்திய, நஞ்சு போலும் - விஷம்போன்ற, நரேசர் முன்னே - அரசர்களுக்கு எதிரிலே, உடல் கம்பியா விழ -உடம்பு துடித்து விழும்படி, ஊருவில்மோதுதல் - (வீமன் துரியோதனனைத்) தொடையிலே தாக்கியதனை, கண்டபோது - பார்த்தபொழுது, எனது ஆர் உயிர் போனது - எனது அரிய உயிர் (உடம்பைவிட்டு) நீங்கும் நிலையடைந்தது; (எ - று.) - ஈற்று ஏகாரம்- தேற்றத்தோடு இரக்கம். அக்கவியில் உடையான் |