பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்153

    மேவலர் - விரும்பிச் சேராதவர்; எதிர்மறை வினையாலணையும்
பெயர்;மேவு - பகுதி, அல் - எதிர்மறையிடைநிலை, அர்-பலர்பால் விகுதி.
'ஐந்துவீரருமே' என்பதில், உம்மை - முற்றுப்பொருளது; ஏகாரம் - பிரிநிலை.
வீரரும் மேவர எனப்பதம் பிரித்து, வீரர்களுந்தன்னோடு பொருந்திவர என்று
உரைக்கவும் இடமுண்டு.

    இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் புளிமாங்காய்ச்சீரும்,
மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம்: தானன தனதந்ததானன தானன என்பது,
இதற்குச் சந்தக் குழிப்பு.                                  (198)

வேறு.

199.-அசுவத்தாமன்துரியோதனனுள்ளவிடஞ் சார்தல்.

ஆன கமலமலர் வாவியிடை யேமுழுகியாவி யுதவுமறை
                              யோகபர னாகிமொழி,
மான கவசவர ராசதுரி யோதனனை வாயுகுமரன்முதிர்
                           போரிலெதிர் வீழும்வகை,
தான கரடகரி மாவையரிமாபொருத தாய மெனவுழறி
                           னானெனுமுன் வேதமுனி,
ஞானசரிதகுரு வாகியது ரோணன்மக னாடுகளமணுகி
                           னானொருவிநாழிகையில்.

     (இ -ள்.) ஆன அழகியவையான, கமலம்-தாமரைகள், மலர்
மலரப்பெற்ற, வாவியிடையே - தடாகத்திலே, முழுகி -, யோக பரன்ஆகி-
யோகப்பயிற்சியில் ஊன்றியவனாய், ஆவி உதவு மறை - (இறந்தவர்க்கு
மீண்டும்) உயிரைத்தருகிற சஞ்சீவிநிமந்திரத்தை, மொழி - ஜபித்த, மான
கவசவரராச துரியோதனனை - மானத்தையே (தன்னைப்பாதுகாக்குங்)
கவசமாகக்கருதுகிற சிறந்த அரசனாகிய துரியோதனனை, முதிர் போரில் -
மிக்கபோரிலே,எதிர் வீழும் வகை - எதிரில் வீழ்ந்திடும்படி, தான கரடம்
கரிமாவை அரிமாபொருத தாயம் என - மதசலத்தையுடைய
கன்னங்களையுடைய யானையைச்சிங்கம் எதிர்த்தழித்தவகைபோல, வாயு
குமரன் - வீமன், உழறினான் -கலக்கினான், எனும் முன் - என்று (சிலர்)
சொல்லுமுன்னே,-வேதம் முனி ஞானசரித குரு ஆகிய துரோணன் மகன் -
வேதம் வல்ல முனிவனும்தத்துவஞானத்தையும் நல்லொழுக்கத்தையுமுடைய
வில்லாசிரியனுமானதுரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், ஒரு
விநாழிகையில் -ஒருவிநாழிகைப் பொழுதிலே, நாடு களம் அணுகினான் -
ஆராய்ந்துகுறிக்கப்பட்ட அப்போர்க்களத்தை யடைந்தான்;

    சிங்கம் வீமனுக்கும், யானை துரியோதனனுக்கும் உவமை; எளிதில்
அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய இயல்பை விளக்கும்.  துரியோதனன்
நிலைமையைக் கேட்டவுடனே சிறிதுங்கால தாமதஞ் செய்யாமல் ஓடிவந்து
அவ்விடஞ் சேர்ந்தன னென்பதை அக்கிரமாதிசயோக்தி
[முறையிலுயர்வுநவிற்சி] யலங்காரவகையால், 'உழறினானெனுமுன் நாடுகளம்
அணுகினான்' என்றார்.  இப்பொழுது போர் செய்தற்குரிய இடம் யாதென்று
துரியோதனன் வினாவக் கண்ணன்  ஆராய்ந்து கூறிய சிறந்த இடமாதலின்,
சியமந்தபஞ்சகம் 'நாடுகளம்