பக்கம் எண் :

162பாரதம்சௌப்திக பருவம்

களைப்படைவீட்டிலேயே அழித்திடுதற்குத் துணிந்தன ரென்றவாறு. 
கூகை -கூஎன்று கூவுவது; கூக என்பதன் திரிபு, என்பர் ஒருசாரார்.

    இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கு விளச்சீர்களுமாகிய  கழிநெடிலடி
நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.                     (205)

2.-ஒருபூதம் இவர்களைவலியழித்துத் தடுத்துவிடுதல்.

உரத்துவாரணங்கண்மதமிகுத்தென்னவூக்கமோடொன்றையுமதியார்
புரத்துவாரத்துப்புகுதலும்வெகுண்டுபொங்கழல்போல்வதோர்பூதம்
பரத்துவாசனையுமாதுலன்கிருதபன்மனென்றிவரையு முனைந்து
கரத்துவார்சிலையுங்கணைகளுமுறித்துக்கடவுதிண்டேர்களுங்கலக்கி.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ -ள்.) உரத்து - (இயல்பில்மிக்க) வலிமையையுடைய, வாரணங்கள்-
யானைகள், மதம் மிகுத்து என்ன - மதம்மிகப்பெற்றாற்போல, ஊக்கமோடு-
மிக்கபோர்க்களிப்புடன், ஒன்றையும் மதியார் - யாதொன்றையும்
லக்ஷ்யஞ்செய்யாதவர்களாய், (அசுவத்தாமன் முதலிய மூவரும்), புரம்
துவாரத்துபுகுதலும் - அப்படைவீட்டின்வாயிலிலே நுழையுமளவில்,-பொங்கு
அழல்போல்வது ஓர் பூதம் - தாவியெரிகிற நெருப்புப் போல்வதொரு
[மிகக்கொடிய]பூதமானது, வெகுண்டு - கோபங்கொண்டு (வந்து),
பரத்துவாசனையும் -பரத்துவாசகுலத்துப் பிறந்தவனான அசுவத்தாமனையும்,
மாதுலன் கிருதபன்மன்என்ற இவரையும் - (அவனது) மாமனான கிருபன்
கிருதவர்மா என்றஇவர்களையும், முனைந்து - எதிர்த்துப்பொருது, கரத்து -
அவர்கள்கைகளிலுள்ள, வார் - நீண்ட, சிலையும் - விற்களையும்,
கணைகளும்- அம்புகளையும், முறித்து - ஒடித்தெறிந்து, கடவு திண்
தேர்களும் -(அவர்கள்) ஏறி்ச்செலுத்திவந்த வலிய தேர்களையும், கலக்கி -
நிலைகுலையச்செய்து [சிதைத்து], (எ - று.) - 'மலைந்து' என அடுக்க
கவியோடு இயையும்.

    அகப்பட்டதைத் தவறாது அழித்தற்கு, அழலுவமைகூறினார்.  புரம் -
சேனை தங்குமிடம்.                                         (206)

3.

முன்புகுவிசயமுனிமகன்றன்னைமுரணெடுந்தோள்களுமுரனும்,
என்புடனிணமுந்தசைகளுஞ்சிந்தவிணைக்கருஞ்சிறுகுறுங்
                                       கரத்தால்,
வன்புகையெழுமாறுள்ளுறமலைந்துமற்றுளோர் கொற்றமு
                                      மழித்துப்,
பின்புகலறுமாதுரந்ததப்பூதப்பெருமையாம் பேசுறுந்தகைத்தோ.

     (இ -ள்.) முன் புகு - (அம்மூவரில்) முந்தி வந்து (பாசறையினுள்)
நுழையலுற்ற, விசயம் முனி மகன் தன்னை - போர் வெற்றியையுடைய
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனை, முரண் நெடு
தோள்களும் -வலிமையையுடைய நீண்ட தோள்களும், உரனும் - மார்பும்,
என்புடன்நிணமும் தசைகளும் சிந்த - எலும்பையும் கொழுப்பையும்