வரி சிலைதிட்டத்துய்மனை - கட்டமைந்த வில்லையுடைய த்ருஷ்டத்யும் நனை,மணி தலை துணித்தான் - அழகிய தலையை அறுத்திட்டான். (எ-று.)
தனதுதந்தையான துரோணனைக் கொன்றவனாகிய திட்டத்துய்மன் மேல்அசுவத்தாமன் கறுக்கொண்டு அவனைத்தூங்கிக் கொண்டிருக்கையில் முதலில்தலை துணித்துப் பழிதீர்த்துக்கொண்டனன் என்பதாம். படைவீட்டினுள்ளேயுள்ளவர்கள் வெளிச்சென்று தப்பிஉய்ந்து போகாத வண்ணம்தடுத்தற்பொருட்டு இருவரையும் வாயிலிற் காவலாகநிறுத்தினனென்க. தாமரைமலர்மாலை அந்தணர்க்கு உரியதாதலால், 'கமலமாலையான்' என்றார்; இனி,தாமரை மணிமாலையுமாம். கடப்பமலர்மாலை முருகனுக்கு அடையாளப்பூமாலை யாதலால், அவனுக்கு 'கடம்பன்' என்று ஒருபெயர் வழங்கும். (213) 10.-அதனையறிந்து பாஞ்சாலர்பலர் அசுவத்தாமனை யெதிர்த்தல். கயில்புரிகழற்காற்றந்தையைச்செற்றகாளையைப் பாளையத்திடையே, துயில்புரியமையத்திமைக்குமுன்சென்னிதுணித்தனன்சுதனெனக் கலங்கி, வெயில்புரிவதன்முன்வல்லிருளிடையேயுணர்ந்தவர் வெருவுடனரற்றப், பயில்புரிசிலைக்கைச்சிகண்டியைமுதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர். |
(இ -ள்.) கயில் புரி - கயிலென்னும் உறுப்பு அமைந்த, கழல் - வீரக்கழலையணிந்த, கால் - பாதத்தையுடைய, தந்தையை - தனது தந்தையானதுரோணனை, செற்ற - கொன்ற, காளையை - இளவீரனான திட்டத்துய்மனை,பாளையத்து இடையே - படைவீட்டினுள்ளே, துயில் புரி அமையத்து -தூக்கங்கொண்டிருக்குஞ் சமயத்தில், இமைக்கு முன் - நொடிப்பொழுதினுள்,சுதன் - துரோணபுத்தினான அசுவத்தாமன், சென்னி துணித்தனன் -தலையறுத்திட்டான், என - என்று அறிந்து, கலங்கி - மனங்கலங்கி,வெயில்புரிவதன் முன் வல் இருளிடைய உணர்ந்தவர் - சூரியனுதிப்பதன்முன்வலிய இருட்பொழுதிலேயே தூக்கம்விழித்துள்ளவர்கள், வெருவுடன் -அச்சத்தோடு, அரற்ற - கதறியொலிக்க, - பயில் புரி சிலை சிகண்டியைமுதலோர் - பழகுதல் பொருந்திய வில்லையேந்திய கையையுடைய சிகண்டிமுதலானவர்களான, பாஞ்சாலர் பலரும் - பாஞ்சால தேசத்து அரசர்கள்பலரும், வந்தனர்கள் - (அவனையெதிர்த்து) வந்தார்கள்; (எ - று.) இயல்பாக நடுராத்திரியில் தூக்கம்விழித்துள்ளவர்கள் சிலர் அசுவத்தாமன்திட்டத்துய்மனைத் தலை துணித்ததைக்கண்டு நிலைகுலைந்து அஞ்சிஆரவாரஞ்செய்ய, அத்திட்டத்துய்மனது உடன் பிறந்தவரான சிகண்டி முதலியபாஞ்சாலதேசத்து வீரர்கள் அநேகர் அசுவத்தாமனை வந்து எதிர்த்தார்கள்என்பதாம். கயில் - ஆபரணக்கடைப்புணர்வு. வெயில்புரிவதன் முன் -வெயில்புறப்படுவதன்முன் என்றபடி. சிகண்டி - துருபதனது குமாரரில்ஒருவன்; தன் தம்பிக்கு மணஞ் செய்விக்கும்பொருட்டுக் காசிராசன் மகளிர் |