12.-உபபாண்டவர்கள்அசுவத்தாமனைக் காணுதல். பூதலமுழுதுங்கவர்ந்ததந்தையர்கள் புறத்திடைப்போயதுந்துயின்ற மாதுலன்முனிவன்மதலைகைப்படையான்மடிந்திடத்தடிந்தது முணரார் தாதலரலங்கற்சமரவாண்முனியைத்தழலிடைவருபெருந்தையல் காதலம்புதல்வர்கண்டுயில்புரிவவோர்கனவுகண்டனரெனக்கண்டார். |
(இ -ள்.) பூதலம் முழுதும் கவர்ந்த - நிலவுலகமுழுவதையும் (தங்களுடையதாகக்) கைப்பற்றிய, தந்தையர்கள் - (தங்கள்) தகப்பன் மாரான பாண்டவர்கள், புறத்திடை போயதும் - (படைவீட்டினுள் இல்லாமல் கண்ணபிரானுடன்) வெளியிலே சென்றதையும் - துயின்ற மாதுலன் - தூங்கிக்கொண்டிருந்த (தங்கள்) மாமனான திட்டத்துய்மன், முனிவன் மதலை கை படையால் மடிந்திட - துரோணபுத்திரனான அசுவத்தாமனது கையிலுள்ள ஆயுதத்தால் இறக்கும்படி, தடிந்ததும் - (திட்டத்துய்மனை அசுவத்தாமன்) தலையறுத்திட்டதையும், உணரார் - அறியாதவர்களாய், கண் துயில் புரிவோர்- கண்மூடித்தூக்கங்கொண்டிருந்தவர்களான, தழலிடை வரு பெரு தையல்காதல் அம் புதல்வர் - (துருபதராசனது) ஓமாக்கினியிலே தோன்றிய சிறந்தமகளான திரௌபதியின் அன்புக்குரிய அழகிய பிள்ளைகளான உபபாண்டவர்கள், தாது அலர் அலங்கல் சமரம் வாள் முனியை - பூவிதழ்கள்மலர்ந்த போர்மாலையைத் தரித்த போருக்குரிய வாளாயுதத்தையேந்தியஅந்தணனான அசுவத்தாமனை, கனவு கண்டனர் என கண்டார் -கனாக்கண்டாற்போலத் தூக்கத்திற்சிறிது கண்டார்கள்; (எ - று.) பூதலமுழுதுங் கவர்ந்த - பகைவரை முற்றிலும் வென்று அவர்களுடையஇராச்சிய முழுவதற்கும் உரிமைபூண்ட. திரௌபதி பஞ்சகன்னிகைகளுள்ஒருத்தியென்னும்படி அடைந்துள்ள சிறப்புத் தோன்றவும், அவள் மற்றைச்சாதாரண மனிதர்போல ஒருதாயின் கருப்பத்தின் வாய்ப்பட்டுப் பிறவாமல்பரிசுத்தமான அக்கினியினின்று வரமாகத்தோன்றிய உயர்வு விளங்கவும்,'பெருந்தையல்' என்றார். (216) 13.-அவர்களைப்பாண்டவர்களென்று கருதி அசுவத்தாமன் அழித்தல். கண்டவர்தத்தம்படையெடுப்பதன்முன்காசினிமுழுவதும்வென்று, கொண்டவரிவரென்றெண்ணியேசுடரிற்கொளுத்தியசுடரனையாரைத், திண்டவர்தமக்குச்சிகாமணியனையான்சினத்துடன்கலங்கிவண்டேறல், உண்டவர்தமைப்போன்மதத்தினால்வாளாலொருநொடியினிற்றலை துணித்தான். |
(இ -ள்.) கண்டவர் - (இங்ஙனம்) பார்த்த பாண்டவகுமாரர்கள், தம் தம்படை எடுப்பதன்முன் - (போர்செய்தற்குத்) தம்தமக்கு உரிய ஆயுதத்தை யெடுத்துக் கொள்வதன்முன், சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை - ஒருவிளக்கினின்று ஏற்றிய மற்றொரு விளக்குப்போல விளங்குகிற அவர்களை, திண் தவர் தமக்கு சிகாமணி |