காரரைக்கொண்டு விஷங்கொடுத்து உண்பித்து அதனால் மயங்கிய அவனைக்கட்டிக் கங்கையிற் போகட, அவன் பாதாளஞ்சேர்ந்து நாகங்களின் உதவியாற் பிழைத்து மீண்டமையும் ஆகிய இளம்பிராயத்துச்செய்திகளைக் கருதிக் கழிவிரக்கங்கொண்டு, துரியோதனன், 'ஆற்றினீர்விளையாடிய நாள்முதல்,காற்றின்மைந்தனொ டெத்தனை கன்றினேன்' என்றான். (228) 25. | பணை நெடுங்கைப்பகட்டுவெஞ் சேனைசூழ் இணை தருஞ்சொற்கிளைஞர்கள் யாரையுந் துணைவர் யாரையுந்தோற்று நின்றேனெனக்கு இணையர் பார்மிசையாருள ரெண்ணிலே. |
(இ -ள்.) பணை - பருத்த, நெடு - நீண்ட, கை - துதிக்கையையுடைய,பகடு - ஆண்யானைகளையுடைய, வெம் - கொடிய, சேனை - சேனைகள்,சூழ் - சூழப்பட்ட, இணைதரும் சொல் - பொருந்திய புகழையுடைய,கிளைஞர்கள் யாரையும் - உறவினர்களெல்லோரையும், துணைவர் யாரையும் -நண்பர்களெல்லோரையும், தோற்று நின்றேன் - (போரில்) இழந்து நின்றேன்,(யான்); எண்ணில் - ஆலோசிக்குமிடத்து, பார்மிசை - பூமியில், எனக்குஇணையர் யார் உளர் - எனக்கு ஒப்பானவர் எவர் இருக்கின்றார்?[யாருமில்லை]; (எ - று.) பகடு -யானையின் ஆண்பாற்பெயர். இணைதரும், தா - துணை வினை. சொல் - புகழாதலை "சொன்மாண்பமைந்த குழு" எனச் சிந்தாமணியிலுங் காண்க. இனி, 'இணைதருஞ்சொல்' என்பதற்கு - எனக்கு அனுகூலமாக இணங்கிப்பேசும் பேச்சையுடையஎன்றும் உரைக்கலாம்; 'கிணைதருஞ்சொல்' என்ற பாடத்துக்கு - முரசவாத்தியத்தின் ஒலியை யொத்துக் கம்பீரமாக ஒலிக்கிற சொற்களையுடைய என்க. துணைவர் - தம்பிமாருமாம். (229) 26.-துரியோதனன்அசுவத்தாமனுக்கு விடைகொடுத்து அனுப்புதல். என்றுபன்மொழிகூறியிம்மைந்தரைக் கொன்றுவந்தகுமரனைப்போர்தொறும் நின்றதீவினைநீங்கிடநீதவம் ஒன்றிவாழ்கென்றுயர்விடைநல்கினான். |
(இ -ள்.) என்று பல்மொழி கூறி - என்று இவ்வாறு பல வார்த்தைகளைச் சொல்லி, இ மைந்தரை கொன்று வந்த குமரனை - இப்பிள்ளைகளை [உப பாண்டவரை] வதைத்துவந்த துரோணகுமாரனான அசவத்தாமனை, (நோக்கி), 'போர் தொறும் நின்ற தீவினை நீங்கிட - போர்களில் நின்றதனாலாகிய பாவம் நீங்கும்படி, நீ தவம் ஒன்றி வாழ்க - நீதவத்திற்பொருந்தி வாழ்வாயாக,' என்று - என்று சொல்லி, உயர் விடை நல்கினான் - சிறந்த அனுமதியை (அவனுக்குக்) கொடுத்து அனுப்பினான்; (எ -று.) அரசர்க்குப்போல அந்தணர்க்குப் படைக்கல மேந்திப் போர்செய்தலும், அதில் பற்பலரையழித்தலும் சாதிதருமமல்லவாதலால் |