பக்கம் எண் :

186பாரதம்சௌப்திக பருவம்

உபபாண்டவர்தலைகளை அசுவத்தாமன் கைக்கொண்டு சென்றதனால்,
அதில்லாத கவந்தங்களே அங்குக் கிடந்தன.  அரியகங்குல் சிந்து தினகரன்
என எடுத்து, அழித்தற்கரிய இரவினிருளைச் சிதறடிக்குந் தன்மையனான
சூரியனெனினுமாம்;  முந்தினபொருளில், ஸிந்து - வடமொழிப்பெயர்;
இப்பொருளில், சிந்து - தமிழ்வினைப்பகுதி: சிந்து தினகரன் -
வினைத்தொகை. ஆரணியம் - அரண்யமென்றதன் விகாரம்.  திநகரன் -
பகலைச் செய்பவன்.                                       (243)

40 - சீற்றங்கொண்டவீமனையும் அருச்சுனனையும்
கண்ணன் தடுத்தல்.

கண்டவுடன்மனமெலிவுற்றிவ்வண்ணமெவன்கொலெனக்
                                     கரியமேனிக்,
கொண்டலுரைத்தனன்றுரகதாமாவின்வினைகளெலாங் கூற்று
                                        முட்க,
அண்டமுகடதிரவுருத்தருச்சுனனுமாருதியுமவன்றனாவி,
உண்டலதுதவிரோமென்றுரைத்தோடமாறடுத்தேயுரைக்குமன்றே.

     (இ -ள்.) கண்ட உடன் - திரௌபதியின் (நிலைமையைப்)
பார்த்தவுடனே, (பாண்டவர்கள்), மனம் மெலிவுற்று - மனந்தளரப்பெற்று,
இவண்ணம் எவன்கொல் என - இவ்வாறு எதனாலாகியதென்று (கண்ணனை)
வினாவ,-கரிய மேனி கொண்டல் - கருநிறமுடைய நீர்கொண்ட மேகம்
போன்றகண்ணபிரான், துரகதாமாவின் வினைகள் எலாம் - அசுவத்தாமனது
செயல்களையெல்லாம், உரைத்தனன் - கூறினான்; (அதுகேட்டு),
அருச்சுனனும்-, மாருதியும் - வாயுகுமாரனான வீமனும், கூற்றும் உட்க -
யமனும் அஞ்சும்படியாகவும், அண்டம் முகடு அதிர - அண்டகோளத்தின்
மேல்முகடும் அதிர்ச்சியடையும்படியாகவும், உருத்து - கோபித்து, அவன்
தன்ஆவி  உண்டு அலது தவிரோம் என்று உரைத்து - 'அவ்வசுவத்தாமனது
உயிரைக் கவர்ந்தன்றி விடோம்' என்று வீரவாதங்கூறி, ஓட - விரைந்து
செல்ல,(அப்பொழுது), மால்தடுத்து உரைக்கும் - கண்ணபிரான் 
(அவர்களைத்) தடுத்துக் கூறுவான்;  (எ - று.) -அன்று, ஏ -ஈற்றசை. (244)

41.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் சமாதானங் கூறல்.

பாரிடமொன்றினைப்புரத்திபாசறையையெனப்புகன்று பரிவிற்
                                     சென்றேம்,
வீரருக்குமுனைத்தாமன் சுயோதனற்குச் சூளுரைத்து
                                 மீண்டானைவர்,
ஆரமணிமுடிகொய்துதரணியெலாமுன்குடைக்கீ ழமைப்
                                     பனின்றே,
காரிருக்குமலரளகக்காந்தாரிசுதவுள்ளங் களித்தியென்றே.

இதுமுதல் ஐந்து கவிகள் - குளகம்.

     (இ -ள்.) பாரிடம் ஒன்றினை - ஒரு பூதத்தை (நோக்கி), பாசறையை
புரத்தி என புகன்று - 'படைவீட்டைப்பாதுகாப்பாய்' என்று சொல்லிவிட்டு,
பரிவின் சென்றேம் - விருப்பத்தோடு (யாம் வேறிடத்திற்குப்) போனோம்;
வீரருக்கு முனை தாமன் - போர்வீரர்களுக்கு முன்நிற்பவனான
அசுவத்தாமன்,(துரியோதனனை நோக்கி), கார் இருக்கும் மலர் அளகம்
காந்தாரி சுத -கருநிறந்தங்கியதும் பூக்களைச்சூடியதுமான கூந்தலையுடைய
காந்தாரியின்குமாரனே!