இற்றைநாள்- இன்றாகியநாளென இருபெயரொட்டு. பிற்றை - பின் என்ற இடைச்சொல்லின்மேல், து ஐ - சாரியைகள். வளை - உட்சுழிவுடையது. வேண்டும் - ஒருவகை வியங்கோள். (13) 14.-யாவரும் போர்க்களஞ்சேர்ந்துதருமனை யடுத்தல். விம்முபெரும் பணையொலியால் விண்டதுகொலண்டமென விண்ணோரஞ்சக், கைம்முகமாமுதலான கடுஞ்சேனைப் பாஞ்சாலன் காதன் மைந்தன், எம்முகமுந்தானாகி யிரதமூர்ந்தணிவகுக்க விளையோர்யாருந், தம்முனை வந்தடி வணங்கிப் புடைசூழ்ந்தார் சிறிது மனஞ் சலிப்பிலாதார். |
(இ -ள்.) விம்மு - ஆரவாரஞ்செய்கிற, பெரு பணை ஒலியால் - பெரியவாத்தியங்களின் ஓசையால், அண்டம் விண்டதுகொல் என - அண்டமுகடுஅதிர்ந்து பிளந்திட்டதோவென்று, விண்ணோர் அஞ்ச - தேவர்கள் பயப்பட,கை முகம் மா முதல் ஆன - துதிக்கையையுடைய முகத்தையுடைய யானைமுதலிய, கடு சேனை - கொடிய சேனைக்குத்தலைவனான, பாஞ்சாலன்காதல்மைந்தன் - பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதனது அன்புள்ள புத்திரனானதிட்டத்துய்மன், எ முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து - எல்லாப்பக்கங்களிலும் தானேயாகும்படி நாற்புறமும் விரைந்து தேரைநடத்தி,அணிவகுக்க - (தன்சேனையைப்) படைவகுக்க,-சிறிதும் மனம் சலிப்பு இலாதார் -சற்றும் மனந்தளர்தலில்லாதவர்களான, இளையோர் யாரும் - தம்பியரான (வீமன் முதலியோர்) எல்லாரும், வந்து - (அருகில்) வந்து, தம் முனை - தங்கள் தமையனான தருமனை, அடி வணங்கி - பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, புடை சூழ்ந்தார் - பக்கங்களிற் சூழ்ந்துநின்றார்கள்; (எ - று.) முதலடி- அதிசயோக்தி: வாத்தியகோஷத்தின் மிகுதியை விளக்கும். துதிக்கையுள்ள முகமுடைய விலங்கு எனவே, யானையாயிற்று. ஆகி - ஆக என எச்சத்தைத் திரிக்க. தம்முன் என்பதில், முன் என்றது-முன்னே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர். (14) 15.-சல்லியன் அத்திரயூகம்வகுத்தமையும், தருமன் கண்ணனை வினாவலும். அத்திரயூகமதாக வரும்பெருஞ் சேனையைவகுத்தாங்கதிபனாகி, மத்திரபூபதி நின்றவலியினைக்கண் டதிசயித்துமாலைநோக்கி, இத்திறமாகிய படையொ டெப்படிநாஞ்சிலபடைகொண் டெதிர்ப்பதென்றான், குத்திரமாகிய வினைகளொருகாலுந்திருவுளத்திற் குடிபுகாதான். |
(இ -ள்.) ஆங்கு - எதிர்ப்பக்கத்தில், மத்திர பூபதி - மத்திர தேசத்து அரசனான சல்லியன், வரும் பெரு சேனையை - (தன்னிடம்) வந்த பெரிய சேனையை, அத்திரயூகமது ஆக வகுத்து - அஸ்திரமெனும் வியூகமாக அணிவகுத்து, அதிபன் ஆகி நின்ற - சேனைத்தலைவனாய்நின்ற, வலியினை -வலிய நிலைமையை, கண்டு - பார்த்து, |