பக்கம் எண் :

22பாரதம்சல்லிய பருவம்

     (இ -ள்.) வில்லியரில் - வில்வீரர்களிலும், வேலாளில் -
வேல்வீரர்களிலும், வாள் எடுத்தோர்தம்மில் - வாள்வீரர்களிலும், ஒரு
வேந்தர்- ஓரரசரும், ஒவ்வார் - (சல்லியனுக்கு) ஒப்பாகமாட்டார்: வேறு -
மற்றும்,செல் இயல் - (அழகிதாகச்) செல்லுந்தன்மையுள்ள,
வெம்வேகத்தையுடைய, பரி- குதிரைமேலேறிய, ஆளில் - வீரர்களிலும், கரி
ஆளில் - யானை வீர்களிலும்,தேர் ஆளில் - தேர்வீரர்களிலும், சிலர்
ஒவ்வார் - எவரும் (அவனுக்கு)ஒப்பாகமாட்டார்:  மல் இயல் - பலம்
பொருந்தின, பொன்-அழகிய, தோள்-புயங்களின், வலிக்கும்-வலிமையாலும்,
தண்டுக்கும்-கதாயுதத்தாலும், எதிர்ந்துபொர வல்லார் - (சல்லியனை)
எதிர்த்துப் போர்செய்யவல்லவர், யாரே - எவர்உள்ளார்? [எவருமில்லை
யென்றபடி]; சல்லியனுக்கு ஒப்பார் - சல்லியனுக்குச்சமானமானவர்,
நின்தம்பியரில் இலர் - உனது தம்பிமார்களிலும் இல்லை,என்றும்
சாற்றினான் - என்றும் (கண்ணன்) கூறினான்;

    புஜபலத்திலும் கதாயுதப் பயிற்சியிலும் சல்லியன்
மிகமேம்பட்டவனாதலால், அவனுக்குச் சமானமானவர் அறுவகைப்பட்ட
வீரரிலுமில்லை; மிகச் சிறந்த உனது தம்பிமாரும் அவனுக்கு ஒப்பாகார்
என்றனனென்பதாம்.  என்றது, நீயே அவனுக்குச் சமமானவனென்றவாறு;
அத்தன்மை,அடுத்த கவியால் விளங்கும்.  செல் இயல் - (விரைவில்)
மேகம்போன்றதன்மையுள்ள என்றும் உரைக்கலாம்.  மல் இயல் - மற்போரிற்
பயின்றஎனினுமாம்.  மல் - ஆயுதமில்லாமலே தேகபலத்தால்
உடம்பினுறுப்புக்களைக்கொண்டு எதிர்த்து மோதிச் செய்யும் போர்.  
பொற்றோள் - பொன்னாபரணம்அணிந்த தோளுமாம்;  பொன் -
கருவியாகுபெயர்.  'நின்தம்பியரில் இலர்'என்றது, அருத்தாபத்தியால், நீயே
ஒப்பவ னென்பதைக் காட்டிற்று.

     பரி -(பாரத்தைப்) பரிப்பது; பரித்தல் - சுமத்தல்.  கரம் - கை;
இங்கே,துதிக்கை;  அதனையுடையது கரீ:  வடமொழிக்காரணப் பெயர். 
வலிக்கும்,தண்டுக்கும் - உருபுமயக்கம்.  தோள்வலிமையிலும்
கதைப்போரிலும்மிகச்சிறந்த வீமனும் தனியே சல்லியனோடு எதிர்த்துப்
போர்செய்துவெல்லவல்லவனல்ல னென்பது, மூன்றாமடியின் உட்கோள்.
வெங்கரியாளிற்றேராளிற் பரியாளில் என்று பாடாந்தரம்.           (17)

18.அருவரையோ ரிரண்டிருபாலமைந்தனையதடம்புயங்
                          கண்டவனி வேந்தர்,
வெருவருபோர்மத்திரத்தான் வேறொருவர்
                  மேற்செல்லான்நின் மேலன்றி,
யிருவருமே முனைந்துமுனைந்திரவிகடல் விழுமளவு
                             மிகல்செய்தாலும்,
ஒருவரொருவரைவேறலொண்ணாதின்று மக்கென்று
                            முரை செய்தானே.

     (இ -ள்.) அரு - அழித்தற்கு அரிய, வரை ஓர் இரண்டு -
இரண்டுமலைகள், இருபால் - இரண்டுபக்கங்களிலும், அமைந்து அனைய-
பொருந்தினாற் போன்ற, தடபுயம் - பெரிய (தனது) தோள்களை, கண்டு -
பார்த்து, அவனிவேந்தர் - பூமியையாளுகிற அரசர்கள், வெருவரு -
அஞ்சும்படியாகவுள்ள, போர் மத்திரத்தான் - போரில்வல்லவனான